search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பரந்தூரில் ரெயில் நிலையம் அமைக்க திட்டம்: ரெயில்வே துறை விரைவில் ஆய்வு
    X

    பரந்தூரில் ரெயில் நிலையம் அமைக்க திட்டம்: ரெயில்வே துறை விரைவில் ஆய்வு

    • பரந்தூரில் விமான நிலையம் அமையும்போது போக்குவரத்து வசதியையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
    • ரெயில் திட்ட பாதையை பரந்தூர் புதிய விமான நிலையம் வரை நீட்டிக்க ரெயில்வே துறை முடிவு செய்து உள்ளது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக சுமார் 4791 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக ஆரம்ப கட்ட பணிகள் மற்றும் இதற்கான இடம் தேர்வு மற்றும் பூர்வாங்க பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதற்கு மாநில அரசின் நிர்வாக அனுமதி இன்னும் 2 வாரத்தில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் பின்னர் நிலம் கையகப்படுத்துதல், எல்லைகள் நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பணிகள் தொடங்கப்படும் என்று தெரிகிறது.

    இதற்கிடையே பரந்தூரில் விமான நிலையம் அமையும்போது போக்குவரத்து வசதியையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

    பரந்தூர் புதிய விமான நிலையம் சென்னை நகரில் இருந்து சுமார் 67 கி.மீட்டர் தூரத்தில் வருகிறது. அரக்கோணம்-காஞ்சிபுரம் ரெயில் பாதையில் திரிசூலம் ரெயில் நிலையத்தில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்தில் அமைய உள்ளது.

    இதைத்தொடர்ந்து ரெயில் திட்ட பாதையை பரந்தூர் புதிய விமான நிலையம் வரை நீட்டிக்க ரெயில்வே துறை முடிவு செய்து உள்ளது. பரந்தூரில் புதிய ரெயில் நிலையம் அமையும்போது ரெயில் பாதை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்படவேண்டும். இதற்கான ஆய்வு பணியை செங்கல்பட்டு-அரக்கோணம் ரெயில்வே பாதையில் விரைவில் மேற்கொள்ள ரெயில்வே துறை முடிவு செய்து உள்ளது.

    ரெயில்வே வாரியம் ஏற்கனவே மாநிலத்தில் 390 கி.மீட்டர் தூரத்துக்கு 7 வழித்தடங்களில் புதிய ரெயில்வே பாதை அமைக்க அனுமதி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×