search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்ததானம்"

    • பொதுமக்களிடமிருந்து மொத்தம் 150 யூனிட் ரத்தம் பெறப்பட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவர் சத்யராஜிடம் வழங்கினர்.
    • ரத்ததானம் வழங்கியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் மே தினத்தையொட்டி வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆயிர நகர வைசியர் இளைஞர் அமைப்பு, மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளையின் தலைவர் ராஜ்குமார் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமை வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி துவக்கி வைத்தார்.முகாமில் தொழிலதிபர்கள், மகாத்மா காந்தி நற்பணி மன்ற உறுப்பினர்கள், ஆயிர நகர வைசியர் இளைஞர் அமைப்பினர், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 150 யூனிட் ரத்தம் பெறப்பட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவர் சத்யராஜிடம் வழங்கினர்.

    முகாமில் வெள்ளகோவில் ஆயிர நகர வைசிய இளைஞர் அமைப்பு நிர்வாகிகள் முரளி, சிவக்குமார், சரவணன், ஆர்.என். சரவணபவன் மற்றும் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.முகாம் ஏற்பாடுகளை மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை உறுப்பினர் அஜித்குமார், தனுஷ்ராம் ஆகியோர் செய்து இருந்தனர். 

    • பார்வைக்கோர் பயணம் என்ற தலைப்பில் கண்தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • கண்தானம், ரத்ததானத்தை வலியுறுத்தி பேரணியில் கோஷங்கள் எழுப்பினர்.

    சீர்காழி:

    சீர்காழியில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் பார்வைக்கோர் பயணம் என்ற தலைப்பில் கண்தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    சீர்காழி லயன்ஸ் சங்கம், கொள்ளிடம் லயன்ஸ்சங்கம், புதுப்பட்டினம், வைத்தீஸ்வ ரன்கோயில், திருவெண்காடு லயன்ஸ் சங்கங்கள், வீரத்தமிழர் சிலம்பாட்ட சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தலைவர் விஜயலெட்சுமி சண்முகவேல் தலைமை வகித்தார்.

    சீர்காழி சங்கத்தலைவர் சுரேஷ், செயலாளர் சந்துரு, பொருளாளர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமார் கொடியசைத்து பேரணி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து பன்னாட்டு லயன்ஸ் சங்கத்தை சேர்ந்தவர்கள் கண்தானம், ரத்ததானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    நிகழ்ச்சி ஒருங்கிணை ப்பாளர் சக்திவீரன் நன்றிக்கூறினார்.

    • காரைக்காலில் சிறப்பு ரத்ததான முகாம் நடைப்பெற்றது.
    • 53 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் பெருந்தலை வர் காமராஜர் அரசு பொறி யியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது.முகாமிற்கு, கல்லூரியின் பேராசிரியர் மணிகண்டன் தலைமை தாங்கினார். பேராசிரி யர்கள் பிரவின்குமார், ஞான முருகன். ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் மதன்பாபு, ரத்த வங்கியின் மருத்துவ அதிகாரி டாக்டர் ஜீவன்பஷீர், மூத்த ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் மனோகரன் மற்றும் மன்சூர் வின்சென்ட், சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, 53 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். முகாம் ஏற்பாடுகளை, கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி தாமோதரன், உதயகுமார் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

    • தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்றது
    • கே.கே.செல்லபாண்டியன் தொடங்கி வைத்தார்


    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் ஒன்றிய நகர திமுக சார்பில் கரம்பக்குடி அரசு மருத்துவமனையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கறம்பக்குடி வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஆத்மா கமிட்டி தலைவரும்மான முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னதாக கரம்பக்குடி நகர திமுக செயலாளரும் பேரூராட்சி தலைவருமான உ. முருகேசன் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கரம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திர துரை கரம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான தவ பாஞ்சாலன் வட்டார மருத்துவ அலுவலர் பஜ்ருல் அகமது பேரூராட்சி துணைத் தலைவர் நைனா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட திமுக செயலாளரும் திருச்சி விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினரும்மான வழக்கறிஞர் கேகே செல்லபாண்டியன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்த பின் ரத்த தானம் வழங்கினர். இரத்ததானம் வழங்கிய நபர்களுக்கு வாழ்த்து சொல்லி சான்றிதழ் வழங்கினர். மேலும் பழங்கள் உள்ளிட்ட சத்துப் பொருட்களும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளரிடம் கறம்பக்குடி மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையைப் பெற்ற மாவட்ட செயலாளர் உரிய அதிகாரிகளிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முடிவில் நகர இளைஞரணி செயலாளர் ராசி பரூக் நன்றி தெரிவித்தார்.

    • தி.மு.க. சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
    • காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    ராமநாதபுரம்

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய கழக செயலாளர் கே.ஜே. பிரவீன் ஏற்பாட்டில் சாத்தான் குளத்தில் ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட செயலாளாரும், ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான காத ர்பாட்சா முத்துராம லிங்கம் தலைமையில் தாங்கி னார்.

    ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்தும், ரத்தத்தை தானம் செய்வதனால் அடையும் பயன்கள் குறித்தும் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசினார். தொடர்ந்து ரத்ததானம் செய்தவ ர்களை பாராட்டி னார்.ராமநாதபுரம் மருத்து வக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவர் குழுவினர் கலந்துகொண்டு ரத்தம் பெற்று க்கொண்டனர்.

    இந்த முகாமில் மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன், இளைஞரணி யூசப், கிளை செயலாளர் புகாரி, பிரதிநிதி வினோத், ஊராட்சி மன்றத்தலைவர் குப்பைக்கனி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராஜா உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரையில் ரத்ததான முகாம் நடந்தது.
    • கீழக்கரை சுற்றியுள்ள தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளியில் ரத்த உறவுகள், கீழை மக்கள் உரிமைக்குரல் மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாமை நடத்தியது. மாவட்ட தலைமை மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் தலைமையில் மருத்துவக் குழுவினர் ரத்தம் பெற்றுக் கொண்டனர். ஏராளமான இளைஞர்கள் ரத்தத்தை கொடையாக வழங்கினர். அவர்களுக்கு சான்றிதழ்களை சிறப்பு அழைப்பாளர்கள் வழங்கினர்.

    கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் ஹமீது சுல்தான், கீழக்கரை டவுன் காஜி காதர் பாக்ஸ், ரோட்டரி சங்கத் தலைவர் கபீர், சட்ட விழிப்புணர்வு இயக்க நிறுவனர் சாலிக் ஹுசைன், ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட தலைவர் சுந்தரம், ரத்த உறவுகள் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜாவுல்ஹக், அனைத்து சமுதாயக் கூட்டமைப்பு கவுரவ ஆலோசகர் சேக் அப்துல் காதர், செயலர் தாஜுல் அமீன், தி.மு.க. செயலாளர் பஷீர் அகமது, இளைஞரணி அமைப்பாளர் இப்த்திகர், கவுன்சிலர்கள் நசூருதீன், ஷேக் உசேன், மீரான் அலி, சமூக ஆர்வலர் அஜிகர், என்.டி.எப். மாநில நிர்வாகி முகமது பருஸ், மாவட்ட தலைவர் அப்துல் நசீர், வி.சி.க.தொகுதி செயலாளர் அற்புதகுமார், எஸ்.டி.பி.ஐ. நகர தலைவர் அபுதாஹிர், மக்கள் டீம் காதர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். கீழக்கரை சுற்றியுள்ள தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனர்.

    • குடியரசு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் பல்லடம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
    • சுமார் 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் பல்லடம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

    மாவட்டத்தலைவர் அப்துல் கய்யூம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மருத்துவ அணி செயலாளர் அப்துல் பாசித், முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் பாரூக் வரவேற்றார்.

    ரத்ததான முகாமை பொங்கலூர் ஒன்றிய சேர்மன் வக்கீல் எஸ்.குமார், தி.மு.க. பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் கணபதிபாளையம் சிவசுப்பிரமணியம், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். 

    • எச்.டி.எப்.சி வங்கி கிளையுடன் இணைந்து ரத்ததான முகாம் நடத்தது.
    • மாணவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் மேலாண்மையியல் துறையும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி எச்.டி.எப்.சி வங்கி கிளையுடன் இணைந்து இரத்ததான முகாம் நடத்தது. இதில் ஆராய்ச்சி மையத்தில் பயிலக்கூடிய 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் ரத்ததானம் செய்தனர். இந்நிகழ்வை ஆராய்ச்சி மைய இயக்குனர் மோகனசுந்தரம், மேலாண்மையில் துறை தலைவர் கார்த்திகேயன் ஆங்கிலத்துறை தலைவரும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலருமான கோவிந்தராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்வின் மூலமாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கிக்கு ரத்த தானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் எச்.டி.எப்.சி கிருஷ்ணகிரி வங்கி மேலாளர் விஜயராஜ், தருமபுரி வங்கி கிளை மேலாளர் அம்பிகேஸ்வரன் மற்றும் தருமபுரி வங்கி உதவி மேலாளர் பிரகாஷ், ஆராய்ச்சி மைய பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக ரத்த தானம் வழங்கிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

    • உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் ரத்த தான முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் முகாமை தொடங்கி வைத்துப் பேசினார்.

    ஆலங்குளம்:

    தி.மு.க. மாநில இளை ஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின், 45ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஆலங்குளத்தில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம், நெல்லை மற்றும் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் ரத்த தான முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

    ஆலங்குளம் தெற்கு ஒன்றியத் தலைவர் அரவிந்த்ராஜ் திலக் தலைமை தாங்கினார். உதயநிதி மன்ற ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவர் ஈஸ்வரன், மாவட்டச் செயலாளர் செல்லத்துரை, பொரு ளாளர் திராவிடமணி, ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், பொருளாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சிவ அருணன் வரவேற்றார்.

    தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்துப் பேசினார்.

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திவ்யா மணிகண்டன், தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ராஜதுரை ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

    மருத்துவர்கள் சரண்யா அருணாச்சலம், கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர். நெல்லை தனியார் ரத்த வங்கி சார்பில் மன்ற உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்களிடம் ரத்தம் சேகரிக்கப்பட்டது.

    விழாவில் ஆலங்குளம் பேரூராட்சித் தலைவர் எம்.சுதா மோகன்லால், மாநில பொதுக்குழு உறுப்பினர் சமுத்திரபாண்டியன், மாவட்ட பிரதிநிதி தனுஷ்கோடிஅன்பழகன்.தொழிலதிபர்கள.மணிகண்டன், மோகன்லால், செல்வன், பேரூராட்சி கவுன்சிலர் சுந்தரம், மாவட்ட பிரதிநிதிகள்அன்பழகன், சாமுவேல்ராஜா, முன்னாள் மாவட்ட பிரதிநிதி அண்ணாவி காசிலிங்கம், நகர பொருளாளர் சுதந்திரராஜன், புதுப்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் மாரியப்பன், ஆலங்குளம் நகர துணை செயலாளர் சரஸ்வதி, உதயநிதி மன்ற ஆலங்குளம் வடக்கு ஒன்றியத் தலைவர் அருணா பாண்டியன், ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர்.மகேஷ், துணைத் தலைவர் ஹரிகரசுதன், பாப்பாக்குடி ஒன்றியத் தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றியச் செயலாளர் சந்தண சுப்பிரமணியன், பொருளாளர் சதீஷ்குமார், ஐடி பிரிவு விக்னேஷ், கீழப்பாவூர் திமுக நகரச் செயலாளர் ஜெகதீஷன், ராமகிருஷ்ணன், துரை, நகரப் பிரதிநிதி ஆதிவிநாயகம் ஆசிர்வாதம்.டிரைவர் சாலமோன் பொன் மோகன்உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    நகர செயலாளர் எஸ்.பி.டி.நெல்சன் நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை, உதயநிதி மன்ற ஒருங்கிணைந்த மாவட்ட துணை செயலாளர் சிவ அருணன் செய்திருந்தார்.

    • முதியோர் இல்லங்களிலும் குழந்தைகள் காப்பகத்திலும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது .
    • 70 பேர் ரத்ததானம் செய்தனர்.

    தாராபுரம் :

    தாராபுரத்தில் இன்று தி.மு.க. இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 45 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தாராபுரத்தில் பல்வேறு இடங்களில் உள்ள முதியோர் இல்லங்களிலும் குழந்தைகள் காப்பகத்திலும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது .

    தாராபுரம் அரசு பொது மருத்துவமனையில் நகர தி.மு.க. செயலாளர் முருகானந்தம், நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் ,கவுன்சிலர்கள் ,கிளைக் கழக செயலாளர் உட்பட 70 பேர் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சியில் நகர அவை தலைவர் ,நகர துணை செயலாளர் கமலக்கண்ணன் ,வார்டு கவுன்சிலர் ஸ்ரீதர் ,யூசுப் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீ ஜெயின் ஸ்வேதாம்பர் தெராபந்த் ஜெயின் பவனில் நடைபெற்றது.
    • பொதுமக்கள் ஆர்வமுடன் ரத்ததானம் வழங்கினர்.

    திருப்பூர் :

    ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி மற்றும் அகில பாரதிய தெராபந்த் யுவக் பரிஷத் சார்பில் ரத்ததான முகாம் திருப்பூர் சூசையாபுரத்தில் உள்ள ஸ்ரீ ஜெயின் ஸ்வேதாம்பர் தெராபந்த் ஜெயின் பவனில் நடைபெற்றது.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். இங்கு சேகரிக்கப்படும் ரத்தம் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆதார் மருத்துவமனை ரத்த வங்கி, ரேவதி மருத்துவமனை ரத்த வங்கி உள்ளிட்ட இடங்களுக்கு கொடுக்கப்படுகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் ரத்ததானம் வழங்கினர்.நிகழ்ச்சியில் தலைவர் சுமித் பண்டாரி, செயலாளர் அங்கித் போத்ரா, கன்வீனர் ஹேமந்த் ஜெயின், துணை கன்வீனர் அமன் ஜெயின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • கலெக்டர் வினீத், மருத்துவக் கல்லூரி மற்றும்பொதுமக்கள்,பள்ளி, கல்லூரிகளில் பிரச்சார நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.
    • விழிப்புணர்வு பிரச்சாரம் திருப்பூர் மாநகர தலைமை இயக்கம் சார்பில் நடைபெற்றது.

    திருப்பூர் :

    நடிகர் விஜய் உத்தரவின்படி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து வழிகாட்டுதலின்படி ரத்ததான விழிப்புணர்வு பிரச்சாரம் திருப்பூர் மாநகர தலைமை இயக்கம் சார்பில் நடைபெற்றது. இதையொட்டி மாவட்ட கலெக்டர் வினீத், மருத்துவக் கல்லூரி மற்றும்பொதுமக்கள்,பள்ளி, கல்லூரிகளில் பிரச்சார நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.

    இதில் மாநகர தலைவர் குத்புதீன், மாநகரச் செயலாளர் சின்னதுரை ,மாநகர துணைத்தலைவர் அலாவுதீன் ,மாநகர ஆலோசகர் பஷீர், மாநகர துணைச்செயலாளர் ரவி ,மாநகர பொருளாளர் ஜெயபிரகாஷ் மற்றும் மாநகர நிர்வாகிகள் கனகராஜ் ,தனபால், அக்பர் மற்றும் பல்லடம் நகர செயலாளர் சதீஷ் கலந்து கொண்டனர் .

    ×