search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "eye donation"

    • இறந்த பின்பு கண்களை தானமாக வழங்க ஆசைப்பட்டார்.
    • கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தாலுக்கா தேசிங்குராஜபுரம் கிராமம் புதுத்தெருவில் வசித்து வந்த மறைந்த நடேசன் மனைவி சகுந்தலா அம்மையார் இறந்த பின்பு கண்களை தானமாக வழங்க ஆசைப்பட்டார்.

    அதன்படி சகுந்தலா அம்மையார் மறைந்ததும் அவரது மகன்கள் சிங்கார வேல், பழனிவேல் ஆகியோர் சகுந்தலா அம்மையார் கண்களை ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மூலமாக தானம் செய்தனர்.

    அந்த கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதே பகுதியில் அஞ்சல கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பாலசுப்ரமணியன் என்பவர் கடந்த மாதம் 29 ஆம் தேதி கண்களை தானமாக வழங்கிய செய்திக் கேட்டு தானும் தானமாக கண்களை வழங்க வேண்டும் என்று சகுந்தலா அம்மையார் விருப்பம் தெரிவித்து இருந்தார்.

    அதன்படி அவரது ஆசையை அவரது குடும்பத்தினர் நிறைவேற்றினர்.

    இது பற்றி ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன் கூறும்போது, இதுபோன்று இறப்பவர்கள் கண்களை தானமாக வழங்கினால் இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே கண்பார்வை இல்லாதவர்களின் சதவீதம் மிகமிக வெகுவாக குறையும் என்றார்.

    அவருடைய கண்களை பெற்றுக்கொண்ட அரவிந்த மருத்துவமனை கும்பகோணம் பிரிவை சேர்ந்த ஆதிகேசவன், கண்கள் நல்ல நிலையில் இருப்பதால் நான்கு நபர் வரை இவரால் பார்வை பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    அந்தப் பகுதி மக்கள் இனி யாராவது எங்கள் பகுதியில் மறைந்தால், உடனடியாக கண் தானம் செய்வோம் என உறுதிமொழி ஏற்றனர்.

    • திருச்செங்கோடு அரசு மருத்து வமனையில் கண் தொடர்பான பிரிவு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
    • குறுகிய காலத்தில் 150 க்கும் மேற்பட்ட கண் புரை அறுவை சிகிச்சைகளை செய்து பொதுமக்களுக்கு சேவை ஆற்றி வருகின்றனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்து வமனையில் கண் தொடர்பான பிரிவு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    குறுகிய காலத்தில் 150 க்கும் மேற்பட்ட கண் பு ரை அறுவை சிகிச்சைகளை செய்து பொதுமக்களுக்கு சேவை ஆற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனை சார்பாக அன்னை தெரசா நினைவு தினத்தை ஒட்டி கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனையில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை திருச்செங்கோடு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார் மருத்துவர் மகேஸ்வ ரன், செவிலியர் வசந்தாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணி இறுதியாக அரசு மருத்துவமனையை அடைந்தது. சுமார் 100 விவேகானந்தா செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் இந்த பேரணியில் பங்கேற்று கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை ஏந்திய படி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    அனைவரும் கண்தானம் செய்ய வேண்டும் அவ்வாறு செய்தால் கண் இல்லாதவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். முன்னதாக அன்னை தெரசாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உருவப்படத்திற்கு மருத்துவர்களும் செவிலியர்களும் மலர் தூவி மரியாதை செய்தனர்.

    • நான் இறந்த பிறகு கண்களை தானம் செய்ய வேண்டும் என்று மகன்கள் மற்றும் பேரன்களிடம் அடிக்கடி கூறிவந்தார்.
    • தனியார் கண் ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், அப்பர்சாமி கோயில் தெருவை சேர்ந்தவர் அம்சவள்ளி (வயது 95). இவருக்கு ரவி (76) அன்பழகன்(72) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அம்சவள்ளி தனது மகன்கள், பேரன், பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளுப்பேத்தி என 3 தலைமுறை குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்ந்து வந்தார்.

    அவர், தனது இறப்புக்கு பின்னர் பிறர் பயன்படும் வகையில் இருக்க வேண்டும். எனவே நான் இறந்த பிறகு கண்களை தானம் செய்ய வேண்டும் என்று மகன்கள் மற்றும் பேரன்களிடம் அடிக்கடி கூறிவந்தார்.

    இந்நிலையில் வயது மூப்பு காரணமாக அம்சவள்ளி திடீரென இறந்தார். இதைத்தொடர்ந்து அம்சவள்ளியின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது கண்களை தானமாக வழங்குவதாக அவரது மகன்கள் தெரிவித்தனர். இது குறித்து தனியார் கண் ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    டாக்டர்கள் பரிசோதித்தபோது அம்சவள்ளியின் கண்கள் நல்ல நிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து அவரது கண்கள் தானமாக பெறப்பட்டது.

    • கண்தானம் கொடுக்க வயது வரம்பு கிடையாது.
    • கண்தானம் பற்றிய விழிப்புணர்வு மூலம் பார்வை இழந்த மக்களுக்கு பார்வை கொடுக்கலாம்.

    இறந்த நபர், மீண்டும் இந்த உலகத்தைப் பார்க்க வேண்டுமானால், கண் தானத்தைத் தவிர சிறந்த வழி வேறு ஏது?

    கண்தானம் செய்ய உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியை உடனடியாக அணுக வேண்டும். உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியின் தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை அறிய தமிழக அரசின் 104 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

    கண்தான வங்கியில் இருந்து டாக்டர்கள் வரும்வரை இறந்தவரின் கண் இமைகளை மூடி வைக்க வேண்டும். மூடிய இமைகளின் மீது ஈரப் பஞ்சை வைத்திருக்க வேண்டும்.

    இறந்தவர் உடல் வைக்கப்பட்டு இருக்கும் அறையில் மின்விசிறியை அணைத்துவிட வேண்டும். கண்தானம் கொடுக்க வயது வரம்பு கிடையாது.

    நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களின் கண்களை கூட தானம் செய்யலாம். கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் கண்களையும் தானம் செய்யலாம்.

    புற்றுநோய், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, நச்சுக் கிருமித் தொற்று, கிருமி பாதிப்பினால் இறந்தவர்கள் மற்றும் காரணம் தெரியாமல் இறந்தவர்களின் கண்களைத் தானமாகப் பெற முடியாது. எனவே கண்தானம் பற்றிய விழிப்புணர்வு மூலம் பார்வை இழந்த மக்களுக்கு பார்வை கொடுக்கலாம்.

    • பார்வைக்கோர் பயணம் என்ற தலைப்பில் கண்தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • கண்தானம், ரத்ததானத்தை வலியுறுத்தி பேரணியில் கோஷங்கள் எழுப்பினர்.

    சீர்காழி:

    சீர்காழியில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் பார்வைக்கோர் பயணம் என்ற தலைப்பில் கண்தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    சீர்காழி லயன்ஸ் சங்கம், கொள்ளிடம் லயன்ஸ்சங்கம், புதுப்பட்டினம், வைத்தீஸ்வ ரன்கோயில், திருவெண்காடு லயன்ஸ் சங்கங்கள், வீரத்தமிழர் சிலம்பாட்ட சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தலைவர் விஜயலெட்சுமி சண்முகவேல் தலைமை வகித்தார்.

    சீர்காழி சங்கத்தலைவர் சுரேஷ், செயலாளர் சந்துரு, பொருளாளர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமார் கொடியசைத்து பேரணி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து பன்னாட்டு லயன்ஸ் சங்கத்தை சேர்ந்தவர்கள் கண்தானம், ரத்ததானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    நிகழ்ச்சி ஒருங்கிணை ப்பாளர் சக்திவீரன் நன்றிக்கூறினார்.

    • முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி வால்டர் தேவாரம் கலந்து விருதினை வழங்கினார்.
    • பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவர் இளங்கோவிற்கு விருது வழங்கப்பட்டது.

    தென்காசி:

    கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் "டிரஸ்ட்" குழந்தைகள் இல்ல நிறுவனர் திருமாறன் நடத்திய விழாவில் முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி வால்டர் தேவாரம் கலந்து கொண்டு சிறந்த கண் தான சேவைக்கான விருதினை பாவூர்சத்திரம் கண் தான விழிப்புணர்வு குழு நிறுவனரும், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தலைவரும், அரிமா 324-எ மாவட்டத்தினுடைய கண்தான ஒருங்கிணைப்பாளர் இளங்கோவிற்கு வழங்கினார்.

    விழாவில் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் பரமசிவம், உறுப்பினர் லட்சுமி சேகர், ரத்ததான மாவட்ட தலைவர் ஆசிரியர் திருமலை கொழுந்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

    • பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வு குழு சார்பில் கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • மருத்துவர் குணசேகரன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வு குழு, சென்ட்ரல் அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண்தான விழிப்புணர்வு பேரணி பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது.

    அரவிந்த் கண் மருத்துவமனை ஆலோசகர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    பரமசிவன்,முருகேஷ்,மதியழகன் முன்னிலை வகித்தனர். கண் தான விழிப்புணர்வு குழு நிறுவனரும், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவருமான கே.ஆர்.பி. இளங்கோ தொகுப்புரை ஆற்றினார். கண் தான விழிப்புணர்வு குழு தலைவர் அருணாச்சலம் வரவேற்றார்.

    பாவூர்சத்திரம் சுசிலா மருத்துவமனை மருத்துவர் குணசேகரன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

    அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் அனுஷா, மாதுரி, ஆபா, கண்தான விழிப்புணர்வு குழு கவுரவ ஆலோசகர் ஜெயச்சந்திரன், கண் வங்கி ஒருங்கிணைப்பாளர் சாரதா, கண்தான விழிப்புணர்வு குழு துணைத் தலைவர் முருகன், முன்னாள் செயலர் ஆனந்த், கலைச்செல்வன், சங்கரபாண்டியன் மற்றும் நர்சிங் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் முன்னாள் செயலர் சுரேஷ் நன்றி கூறினார்.

    • டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து 37-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா
    • டாக்டர் லயனல்ராஜ் கருவிழி மாற்று அறுவை சிகிச்சையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆற்றிய சாதனைகள் பற்றியும், கண் தானத்தின் பயன்கள், கண்தானத்தின் அவசியம் குறித்தும் பேசினார்

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள டாக்டர் அகர்வால் கண் வங்கி மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து 37-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா கடந்த 25-ந் தேதி முதல் நடந்து வந்தது.

    நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மருத்துவமனையின் கண் வங்கி உதவி ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் வரவேற்று பேசினார்.

    டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மண்டல மருத்துவ இயக்குனர் டாக்டர் லயனல்ராஜ் கருவிழி மாற்று அறுவை சிகிச்சையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆற்றிய சாதனைகள் பற்றியும், கண் தானத்தின் பயன்கள், கண்தானத்தின் அவசியம் குறித்தும் பேசினார். விழாவில் மாவட்ட அறிவியல் மைய அலுவலர் எஸ்.எம்.குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்தானம் அளித்த குடும்பத்தினர் மற்றும் கண்தானம் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருக்கும் பல்வேறு அமைப்பின் தலைவர்கள், உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பேச்சுப்போட்டி, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவமாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் இதயம் ராஜேந்திரன் கண்தான அறக்கட்டளை முத்து, மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை ஜெயக்குமார், டீம் டிரஸ்ட் லயன் திருமலை முருகன், முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் பூர்ணிமா நன்றி கூறினார்.

    • பொன்னமராவதியில் பொதுமக்கள் கண் தானம் செய்ய வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
    • பேரணியை பார்வைக்கு ஒரு பயணம் மாவட்டத் தலைவர் எம்.ஜி.ஆர்.விஜயலட்சுமி சண்முகவேல் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சத்தியநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    புதுக்கோட்டை :

    பொன்னமராவதியில் உள்ள அனைத்து லயன்ஸ் சங்கங்கள் சார்பாக பொதுமக்கள் கண் தானம் செய்ய வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    பேரணிக்கு பொன்னமராவதி லயன் சங்க தலைவர் பொறியாளர் வி.என்.ஆர்.நாகராஜன் தலைமை தாங்கினார். சிட்டி லைன் சங்க தலைவர் ஆர்.சுந்தர்ராஜன், ஆர். பொன்னமராவதி ராயல் லயன் சங்க தலைவர் எம்.முருகானந்தம், பாலக்குறிச்சி பிரைட் லைன் சங்கதலைவர் எஸ்.ராஜேந்திரன், கொப்பனாபட்டி சைன் லயன் சங்கத் தலைவர் வி.கிரிதரன், பொன்னமராவதி ஷைன் லைன் சங்கத் தலைவர் பி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    மண்டல ஒருங்கிணைப்பாளர் எம்.பாலகிருஷ்ணன் வரவேற்றார்.பேரணியை பார்வைக்கு ஒரு பயணம் மாவட்டத் தலைவர் எம்.ஜி.ஆர்.விஜயலட்சுமி சண்முகவேல் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சத்தியநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் மண்டல தலைவர் சிங்காரம், வட்டாரத் தலைவர்கள் ஆர்.எம்.வெள்ளைச்சாமி மற்றும் அன்பு செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    பொன்புதுப்பட்டி செங்கை ஊரணியில் இருந்து புறப்பட்ட மோட்டார் சைக்கிள் பேரணி வலையபட்டி, நகைக்கடை பஜார், அண்ணா சாலை வழியாக கொப்பனாபட்டியில் பேரணி நிறைவுற்றது. பேரணிகள் சென்ற லயன் சங்க நிர்வாகிகள் மோட்டார் சைக்கிளில் கண் தானம் விழிப்புணர்வு பதாகைகளை கட்டிக்கொண்டு சென்றனர். மேலும் பேரணியின் முன்பாக ஆட்டோவில் ஒலிபெருக்கியின் மூலமாக செய்வோம் செய்வோம் கண் தானம் செய்வோம், மனிதன் இருக்கும் பொழுது ரத்த தானம் இறந்த போது கண் தானம் மண்ணில் புதையும் கண்களை பிறருக்கு தானமாக தானம் செய்வோம் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    மேலும் இது தொடர்பான விழிப்புணர்வு பற்றி லயன் சங்க ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி விரிவாக பேசினார். முடிவில் கொப்பனாபட்டி கலைமகள் கல்லூரியின் தலைமை ஆசிரியர் மா.முல்லை நன்றி கூறினார்.

    • கடையநல்லூரில் மரணமடைந்த மூதாட்டியின் கண்கள் தானம் செய்யப்பட்டது.
    • உடல் நலக்குறைவால் நேற்று காலை மரணம் அடைந்தார்.

    கடையநல்லூர்:

    கடைய நல்லூர் கிருஷ்ணாபுரம் மெயின் ரோட்டில் டீக்கடை நடத்தி வரும் கணேசனின் சகோதரி சண்முகத்தாய் (வயது 70 ).

    இவர் உடல்நலக்குறைவால் நேற்று காலை மரணமடைந்தார். அவரது கண்களை கடையநல்லூர் அரிமா சங்க நிர்வாகிகள் டாக்டர் சஞ்சீவி,சுப்பாராயலு, மற்றும் அரிமா உறுப்பினர்களின் முயற்சியால் தானமாக பெற்று நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுவரை கடையநல்லூர் அரிமா சங்கத்தின் சார்பில் 23 ஜோடி கண்கள் தானமாக பெறப்பட்டுள்ளது என அரிமா சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    பெங்களூரு நாராயண நேத்ராலயா மருத்துவமனையில் மட்டும் 15 நாட்களில் 78 பேர் தங்களது கண்களை தானம் செய்திருக்கிறார்கள்.
    பெங்களூரு:

    கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதி மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்தாலும் தனது 2 கண்களையும் தானம் செய்திருந்தார். புனித் ராஜ்குமாரின் 2 கண்கள் மூலமாக 4 பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.

    அதே நேரத்தில் புனித் ராஜ்குமார் கண் தானம் செய்ததால், அவரது ரசிகர்களும் கண்தானம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் தாங்களாகவே முன்வந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று தங்களது கண்களை தானம் செய்வதாக கூறி பதிவு செய்து வருகின்றனர்.

    அதன்படி, புனித் ராஜ்குமார் மரணம் அடைந்த பின்பு 15 நாட்களில் மட்டும் கர்நாடக மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது கண்களை தானம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    பெங்களூரு நாராயண நேத்ராலயா மருத்துவமனையில் மட்டும் 15 நாட்களில் 78 பேர் தங்களது கண்களை தானம் செய்திருக்கிறார்கள். அந்த மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு 100-க்கும் குறைவானவர்களே சராசரியாக கண் தானம் செய்துவந்துள்ளனர். ஆனால் புனித் ராஜ்குமார் மரணம் அடைந்த பின்பு 15 நாட்களில் 78 பேர் தாங்களாகவே வந்து கண்களை தானம் செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


    தமிழகத்தில் கண் தானம் குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஏற்படுத்தி வருகின்றன.
    தமிழகத்தில் சுமார் 7 லட்சம் பேர் பார்வையின்றி தவித்து வருகின்றனர். மக்களிடம் இருக்கும் தவறான நம்பிக்கைகளின் காரணமாக பலரும் கண் தானம் செய்ய தயங்குவதால் ஆண்டுக்கு சராசரியாக 6 ஆயிரம் கண்கள் மட்டுமே தானமாக கிடைக்கின்றன. தமிழகத்தில் சாலை மற்றும் ரெயில் விபத்துகளில் சிக்கியும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டும், தற்கொலை செய்துகொண்டும், தினமும் பலர் இறக்கின்றனர். இவ்வாறு ஆண்டுக்கு 5 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இறக்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சென்னையில் மட்டும் ஆண்டுக்கு 60 ஆயிரம் பேரும் இறக்கின்றனர். இவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களின் கண்களே தானமாக கிடைக்கின்றன.

    தமிழகத்தில் கண் தானம் குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஏற்படுத்தி வருகின்றன. இருந்தாலும் இறந்தவர்களின் கண்களை தானம் செய்ய பொதுமக்கள் பலர் முன்வருவது இல்லை.

    தமிழகத்தில் தானமாக கிடைக்கும் அத்தனை கண்களையும் பயன்படுத்த முடிவது இல்லை. ஆண்டுக்கு கிட்டத்தட்ட 4 ஆயிரம் கண்களை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. ஒருவர் இறந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்களை அகற்றினால்தான் அவற்றை பயன்படுத்த முடியும்.

    இறந்தவர்கள் பற்றிய தகவல் தாமதமாக கிடைத்தால், அவர்களிடம் இருந்து எடுக்கப்படும் கண்கள் பயன்படாது. அதேபோல, முதியவர்களிடம் இருந்து எடுக்கப்படும் கண்களில், ஒரு சிலரது கண்களில் செல்கள் குறைவாக இருக்கும் என்கிறார்கள். அந்த கண்களையும் பயன்படுத்த முடிவது இல்லை. இதுபோன்ற காரணங்களால், ஆண்டுக்கு கிட்டத்தட்ட 2 ஆயிரம் கண்களை பயன்படுத்த முடிவதில்லை.

    ஒருவர் உயிரிழந்தவுடன் குடும்பத்தினரும், உறவினர்களும் சோகத்தில் இருப்பார்கள். அந்த நேரத்தில், ‘இறந்தவரின் கண்களை உடனடியாக தானம் செய்ய வேண்டும்‘ என்ற எண்ணம் தோன்றுவது இல்லை. ஒருசிலர்தான் அதுபற்றி யோசிக்கிறார்கள்.

    இறந்தவரை ஊனத்தோடு புதைத்தால் அடுத்த பிறவியில் அவர் ஊனத்தோடு பிறப்பார் என்ற மூடநம்பிக்கை மக்களிடையே பரவலாக உள்ளது.

    உலக அளவில் இலங்கையில் கண் தானம் அதிகம் உள்ளது. இந்தியாவில் கண் தானம் செய்வதில் குஜராத் மாநிலம் முதல் இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு ஆண்டுக்கு சுமார் 1,000 கண்கள் தானமாக கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
    ×