search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முயன்ற"

    • தனிப்பிரிவு போலீசார் அதிரடி
    • சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்

    கன்னியாகுமரி:
    குமரிமாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் கனிமவளங்களை நூற்றுக்கணக்கான வாகனங்களில் அதிகமாக கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் நடக்கிறது.

    கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி மாவட்ட கண்காணிப்பாளர் அதிகபாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வானத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்தநிலையில் இன்று காலை குமரி மாவட்ட தனிப்பிரிவு போலீசார் படந்தாலுமூடு பகுதியில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 4 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் கனிமவளங்களை அதிக அளவு ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த வாகனங்களை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் அந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? உரிமையாளர் யார்? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரபரப்பு தகவல்கள்
    • 4 மாத ஆண் குழந்தையை பெண் ஒருவர் தூக்கி சென்றார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலைய பகுதியில் தங்கி ஊசி பாசி மாலை விற்பனை செய்து வந்த வள்ளியூர் பூங்கா நகர் நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துராஜா (வயது 24).

    இவரது மனைவி ஜோதிகா (20). இவர்களின் 4 மாத ஆண் குழந்தையை பெண் ஒருவர் தூக்கி சென்றார். இது தொடர்பாக வடசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    டி.எஸ்.பி. நவீன்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது குழந்தையை ரெயிலில் கேரளாவுக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் புகைப்படத்தை கேரளாவில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் கொல்லம் ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக இருந்த 2 பேரை அங்குள்ள ரெயில்வே போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். பின்னர் அவர்கள் நாகர்கோவிலில் இருந்து குழந்தையை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து குமரி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குமரி மாவட்ட போலீசார் அங்கு விரைந்து சென்று கேரளா போலீஸ் பிடியில் இருந்த 2 பேரை கைது செய்தவுடன் அவர்களிடம் இருந்த குழந்தையை மீட்டனர்.

    கைது செய்யப்பட்ட இருவரையும் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது அவர்கள் வட்டக்கோட்டை பகுதியை சேர்ந்த நாராயணன் (48) அவரது மனைவி சாந்தி (50) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் கிடுக்குபிடி விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குழந்தையை கடத்திச்சென்று கேர ளாவை சேர்ந்த ஒரு கும்பலி டம் ரூ.70 ஆயிரத்திற்கு விற்பனை செய்வதற்காக விலைபேசி உள்ளனர். பின்னர் அந்த திட்டத்தை கைவிட்டு குழந்தையை பிச்சை எடுக்கும் தொழிலில் பயன்படுத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர் நாராயணனை நாகர்கோவில் ஜெயிலிலும் சாந்தியை தக்கலை ஜெயிலிலும் அடைத்தனர்.

    • ஓமலூர் நீதிமன்றத்திற்கு வந்து கந்து வட்டி கும்பல் அத்துமீறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியவாறு மண் எண்ணை தலையில் ஊற்றி குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார்.
    • ராமன் எனது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அத்துமீறி சேதப்படுத்தி வேறு பூட்டை பூட்டிவிட்டு ராமன் சென்று விட்டார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கொங்கு பட்டி ஊராட்சி மூங்கிலேரிபட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி மரகதம்(வயது 31).

    இவர் ஓமலூர் நீதிமன்றத்திற்கு வந்து கந்து வட்டி கும்பல் அத்துமீறி தனது வீட்டை உடைத்து சேதப்படுத்தியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியவாறூ மண் எண்ணை தலையில் ஊற்றி குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார். இதை அறிந்து அங்கிருந்த வக்கீல்கள் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து கண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

    எனது கணவர் பால்ராஜ் மூங்கிலேரிபட்டி பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவரிடம் சிறுக சிறுக 9 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளதாகவும் பணம் பெற்ற நாள் முதல் இது வரை 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளோம். தொடர்ந்து ராமன் நாங்கள் குடியிருக்கும் வீட்டை எழுதிக் கொடுக்க சொல்லி மிரட்டுகிறார்.

    இது குறித்து ஏற்கனவே சேலம் எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்து விசாரணையில் உள்ளது. அடிக்கடி எங்களை மிரட்டுவதால் நாங்கள் தற்போது அங்கு இல்லாமல் தீவட்டிபட்டியில் உள்ள எனது தாய் வீட்டில் குடியிருந்து வருகிறோம். எங்கள் குழந்தைகள் மட்டும் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் ராமன் எனது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அத்துமீறி சேதப்படுத்தி வேறு பூட்டை பூட்டிவிட்டு ராமன் சென்று விட்டார். எனவே இதுபற்றி நடவ–டிக்கை எடுக்க வேணும்.

    இவ்வாறு அவர் கூறினார். இதுபற்றி போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • சகோதரிக்கும் திருமணமாகி குழந்தை இல்லை. அவரும் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் விரக்தியடைந்து குமார் தற்கொலைக்கு முயன்றார்.
    • இதையடுத்து தகவல் அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம்பாளையம் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (23). கார்பெண்டர். இவர் சிறிய வயதாக இருக்கும்போதே அவரது பெற்றோர் இறந்து விட்டனர். இதனால் குமார் அவரது சகோதரியின் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    சகோதரிக்கும் திருமணமாகி குழந்தை இல்லை. அவரும் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதன்கார ணமாக வாழ்க்கையில் விரக்தியடைந்த குமார் நேற்று இரவு சூளை அருகே உள்ள குரங்கன்பள்ளம் ஓடையில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது கம்பியில் சிக்கி கொண்டார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.மேலும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×