search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "களியக்காவிளை அருகே"

    • போலீசார் விசாரணை
    • சபை போதகர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    களியக்காவிளை:

    களியக்காவிளை அருகே பொன்னப்பநகர் பகுதியை சேர்ந்தவர் சோபனம். இவர் கிறிஸ்தவ சபையில் போதகராக பணியாற்றி கடந்த 3 வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்று விட்டார். திருமணமாகாத இவர், பொன்னப்பநகர் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று காலை சோபனம் வீட்டுக்கு அவரது தம்பி ரசல்ராஜ் வந்துள்ளார். வீடு பூட்டி இருந்ததால், அவர் வெளியில் நின்று சத்தம் கொடுத்துள்ளார். ஆனால் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ரசல் ராஜ், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

    அப்போது அங்கு சோபனம் இறந்த நிலையில் காணப்பட்டார். அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. இதுகுறித்து களியக்காவிளை போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக குழித் துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் ரசல்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சபை போதகர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • மண்எண்ணை போன்ற பொருட்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
    • டத்தல் வாகனங்கள் சாலை வழியாக அதிவேகமாக செல்கின்றன.

    களியக்காவிளை:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அதிக அளவிலான ரேசன் அரிசி, மானிய மண்எண்ணை போன்ற பொருட்கள் கேர ளாவுக்கு கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது. மேலும் கடத்தல் வாகனங்கள் சாலை வழியாக அதிவேகமாக செல்கின்றன. இதனால் பல இடங்களில் விபத்துகள் நடந்து வருகிறது.

    இந்தநிலையில் அதங் கோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் களியக்கா விளை பகுதியில் இருந்து பொருட்கள் வாங்கி விட்டு குழித்துறையை நோக்கி வந்து கொண்டிருந்தார். பைக் கல்லுகட்டி பகுதியில் வந்தபோது எதிரே வேக மாக வந்த சொகுசு கார் ஒன்று பைக் மீது பயங்கர மாக மோதியது. இதில் மணிகண்டன் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாய மடைந்தார்.

    படுகாயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சி கிச்சைக்காக ஆசா ரிப்பள்ளம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.மேலும் விபத்து நடந்த சிறிது நேரத்தில் கார் ஓட்டுநர் காரை அங்கிருந்து எடுத்து செல்ல முயன்றுள் ளார். ஆனால் அங்கு கூடிய பொதுமக்கள் காரை எடுத்து செல்ல அனு மதிக்காமல் தடுத்து நிறுத்தி யுள்ளனார்.

    மேலும் விபத்து குறித்து களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்தவுடன் கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்து பார்த்தபோது அதில் சுமார் 2000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த அரிசியை கேரளா விற்கு கடத்தி செல்வது தெரி யவந்தது. மேலும் அரிசியுடன் நின்றிருந்த சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார் காரை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

    பின்னர் வாகனத்தின் மீது வழக்குப்பதிவு செய்த னர். மேலும் விபத்து நடத்தி விட்டு தப்பி ஓடிய கடத்தல் வாகனத்தின் ஓட்டுநர் யார்? வாகனத்தின் உரிமையாளர் யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனிப்பிரிவு போலீசார் அதிரடி
    • சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்

    கன்னியாகுமரி:
    குமரிமாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் கனிமவளங்களை நூற்றுக்கணக்கான வாகனங்களில் அதிகமாக கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் நடக்கிறது.

    கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி மாவட்ட கண்காணிப்பாளர் அதிகபாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வானத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்தநிலையில் இன்று காலை குமரி மாவட்ட தனிப்பிரிவு போலீசார் படந்தாலுமூடு பகுதியில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 4 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் கனிமவளங்களை அதிக அளவு ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த வாகனங்களை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் அந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? உரிமையாளர் யார்? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சப்-கலெக்டர் அதிரடி நடவடிக்கை
    • 100-க்கும் மேற்பட்ட லாரிகள், கனிம வளங்களை வாகனங்களில் கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள், கனிம வளங்களை வாகனங்களில் கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இரவு பகலாக சாலையில் லாரிகள் செல்வதால் கடும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்படுவ தோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

    இதனை தடுக்க மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதிக பாரம் ஏற்றி செல்லும் வாக னங்களை பறிமுதல் செய்து வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சப்-கலெக்டர் கவுசிக் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரி ராஜசேகர் கொண்ட குழு, படந்தாலுமூடு சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டது. அப்போது அந்த வழியாக வந்த 5 வாகனங்களை நிறுத்தினர்.

    அதிகாரிகளை கண்டதும் வாகனங்களை நிறுத்திவிட்டு, டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் குழு வாகனங்களை சோ தனை செய்தது. அப்போது அந்த வாகனங்களில் அனுமதி இல்லாமல் கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? அதன் உரிமையாளர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×