search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடத்தப்பட்ட"

    • காதலனுக்கு போலீஸ் வலை வீச்சு
    • கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள வடக்கு குண்டல் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண், பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி அவர் திடீ ரென மாயமாகி விட்டார். இதைத் தொடர்ந்து உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் பெ ற்றோர் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த அனீஸ் குமார் என்பவரையும் காணவில்லை என பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. எனவே அவர் தான், தங்கள் மகளை கடத்தி சென்று உள்ளார் என்று கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வந்தனர்.

    இதற்கிடையில் அனீஸ்குமாரும் இளம்பெண்ணும் காதலித்து வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் வடக்கு குண்டல் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு இளம்பெண் மட்டுமே இருந்துள்ளார். அனீஸ்குமார் தப்பி சென்று விட்டார். இதை த்தொட ர்ந்து போலீசார், மாண வியை மீட்டு கொண்டு வந்தனர். பின்னர் அவரை மருத்துவப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் அனீஸ் குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • புகையிலை பொருள்கள் பறிமுதல்
    • அந்த வழியாக ரோந்து வந்த தனிப்படை போலீசார் பார்த்தனர்.

    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழி நான்கு வழிச்சாலையில் ஒரு கார் வெகு நேரமாக நின்றது. அதன் டிரைவர் காருக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அதனை அந்த வழியாக ரோந்து வந்த தனிப்படை போலீசார் பார்த்தனர். அவர்கள் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் கிருஷ்ணகிரி குப்பச்சிபாறை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் பிரகாஷ் (வயது 24) என்பது தெரியவந்தது.

    அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் காருக்குள் போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் 20 சாக்கு மூடைகளில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள் இருந்தன. அதுபற்றி விசாரித்த போது, விஜயன் என்பவர் கூறியதின் பேரில் கிருஷ்ணகிரியில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்ததாக பிரகாஷ் தெரிவித்தார்.

    புகையிலை பொருட்களை அவர் குமரி மாவட்டத்தில் சப்ளை செய்வதற்காக கிருஷ்ணகிரியில் இருந்து கடத்தி கொண்டு வந்துள்ளார். இதையடுத்து புகையிலை பொருட்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் டிரைவர் பிரகா சும் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது.

    • ஏற்காட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் வெளியூர்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்வதாக ஏற்காடு போலீஸ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதில் 5 மூட்டைகளில் சுமார் 45 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் வெளியூர்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்வதாக ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏற்காடு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (34). இவர் தனது ஆம்னி வேனில் பொம்மிடியில் இருந்து ஏற்காடு மலை கிராமங்களில் உள்ள கடைகளுக்கு மளிகை பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்.

    இவர் தனது ஆம்னி வேனில் மளிகை பொருட்களுடன் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வதாக ஏற்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இந்த தகவலை தொடர்ந்து ஏற்காடு போலீசார் நேற்று மஞ்சகுட்டை கிராமத்தில் தீவிர வாகன சோதனை செய்தனர். அப்போது மளிகை சரக்கு கொண்டு வந்த கார்த்திக்கின் ஆம்னி வேனை மஞ்சக்குட்டை கிராமத்திற்கு செல்லும் மலைப்பாதையில் வழிமறித்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    இதில் 5 மூட்டைகளில் சுமார் 45 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றிய ஏற்காடு போலீசார் போதை பொருட்களை கொண்டு வர பயன்படுத்திய ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர். மேலும் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பரபரப்பு தகவல்கள்
    • 4 மாத ஆண் குழந்தையை பெண் ஒருவர் தூக்கி சென்றார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலைய பகுதியில் தங்கி ஊசி பாசி மாலை விற்பனை செய்து வந்த வள்ளியூர் பூங்கா நகர் நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துராஜா (வயது 24).

    இவரது மனைவி ஜோதிகா (20). இவர்களின் 4 மாத ஆண் குழந்தையை பெண் ஒருவர் தூக்கி சென்றார். இது தொடர்பாக வடசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    டி.எஸ்.பி. நவீன்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது குழந்தையை ரெயிலில் கேரளாவுக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் புகைப்படத்தை கேரளாவில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் கொல்லம் ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக இருந்த 2 பேரை அங்குள்ள ரெயில்வே போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். பின்னர் அவர்கள் நாகர்கோவிலில் இருந்து குழந்தையை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து குமரி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குமரி மாவட்ட போலீசார் அங்கு விரைந்து சென்று கேரளா போலீஸ் பிடியில் இருந்த 2 பேரை கைது செய்தவுடன் அவர்களிடம் இருந்த குழந்தையை மீட்டனர்.

    கைது செய்யப்பட்ட இருவரையும் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது அவர்கள் வட்டக்கோட்டை பகுதியை சேர்ந்த நாராயணன் (48) அவரது மனைவி சாந்தி (50) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் கிடுக்குபிடி விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குழந்தையை கடத்திச்சென்று கேர ளாவை சேர்ந்த ஒரு கும்பலி டம் ரூ.70 ஆயிரத்திற்கு விற்பனை செய்வதற்காக விலைபேசி உள்ளனர். பின்னர் அந்த திட்டத்தை கைவிட்டு குழந்தையை பிச்சை எடுக்கும் தொழிலில் பயன்படுத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர் நாராயணனை நாகர்கோவில் ஜெயிலிலும் சாந்தியை தக்கலை ஜெயிலிலும் அடைத்தனர்.

    ×