search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளங்கள்"

    • தனிப்பிரிவு போலீசார் அதிரடி
    • சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்

    கன்னியாகுமரி:
    குமரிமாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் கனிமவளங்களை நூற்றுக்கணக்கான வாகனங்களில் அதிகமாக கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் நடக்கிறது.

    கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி மாவட்ட கண்காணிப்பாளர் அதிகபாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வானத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்தநிலையில் இன்று காலை குமரி மாவட்ட தனிப்பிரிவு போலீசார் படந்தாலுமூடு பகுதியில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 4 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் கனிமவளங்களை அதிக அளவு ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த வாகனங்களை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் அந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? உரிமையாளர் யார்? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் தொடரும் சோதனை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட் டத்தில் அதிக பாரம் ஏற்றிய அல்லது அனுமதி இல்லாமல் கொண்டு வரப்படுகின்ற கனிம பொருட்களை கண் காணித்து அபராதம் விதிப்பது தொடர்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக் கப்பட்டு வருகிறது.

    இந்த குழு விதிகளை மீறி வந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து வரு கிறது. மேலும் 9 வாகனங்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரையில் இந்த குழு நடத்திய சோதனையில், 6 வாகனங்கள் கைப்பற் றப்பட்டு, அந்த வாகனங் களுக்கு ரூ.3 லட்சத்து 13 ஆயிரம் அபராதம் வட்டார போக்குவரத்து அலுவல ரால் விதிக்கப்பட்டு உள்ள தாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில் சில வாக னங்களை சாலை யோரம் நிறுத்திவிட்டு டிரை வர்கள் தப்பியோடி விடு கின்றனர். சில வாக னங்களை நேரம் தவறி இயக்குவதாகவும் தெரி கிறது. அத்தகைய வாகன உரிமையாளர்களின் உரி மங்கள் ரத்து செய்ய நட வடிக்கை எடுக்கப்படு வதுடன் அத்தகைய வாகனங்கள் தொடர்ந்து பயன்படுத்துவது தெரிய வரும் பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    ×