கனிம வளங்கள் ஏற்றிச்சென்ற 6 வாகனங்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம்

குமரி மாவட்டத்தில் தொடரும் சோதனை
கனிம வளங்கள் ஏற்றிச்சென்ற 6 வாகனங்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம்
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட் டத்தில் அதிக பாரம் ஏற்றிய அல்லது அனுமதி இல்லாமல் கொண்டு வரப்படுகின்ற கனிம பொருட்களை கண் காணித்து அபராதம் விதிப்பது தொடர்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக் கப்பட்டு வருகிறது.

இந்த குழு விதிகளை மீறி வந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து வரு கிறது. மேலும் 9 வாகனங்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரையில் இந்த குழு நடத்திய சோதனையில், 6 வாகனங்கள் கைப்பற் றப்பட்டு, அந்த வாகனங் களுக்கு ரூ.3 லட்சத்து 13 ஆயிரம் அபராதம் வட்டார போக்குவரத்து அலுவல ரால் விதிக்கப்பட்டு உள்ள தாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சில வாக னங்களை சாலை யோரம் நிறுத்திவிட்டு டிரை வர்கள் தப்பியோடி விடு கின்றனர். சில வாக னங்களை நேரம் தவறி இயக்குவதாகவும் தெரி கிறது. அத்தகைய வாகன உரிமையாளர்களின் உரி மங்கள் ரத்து செய்ய நட வடிக்கை எடுக்கப்படு வதுடன் அத்தகைய வாகனங்கள் தொடர்ந்து பயன்படுத்துவது தெரிய வரும் பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com