search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகரில்"

    • பரபரப்பு தகவல்கள்
    • 4 மாத ஆண் குழந்தையை பெண் ஒருவர் தூக்கி சென்றார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலைய பகுதியில் தங்கி ஊசி பாசி மாலை விற்பனை செய்து வந்த வள்ளியூர் பூங்கா நகர் நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துராஜா (வயது 24).

    இவரது மனைவி ஜோதிகா (20). இவர்களின் 4 மாத ஆண் குழந்தையை பெண் ஒருவர் தூக்கி சென்றார். இது தொடர்பாக வடசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    டி.எஸ்.பி. நவீன்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது குழந்தையை ரெயிலில் கேரளாவுக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் புகைப்படத்தை கேரளாவில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் கொல்லம் ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக இருந்த 2 பேரை அங்குள்ள ரெயில்வே போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். பின்னர் அவர்கள் நாகர்கோவிலில் இருந்து குழந்தையை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து குமரி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குமரி மாவட்ட போலீசார் அங்கு விரைந்து சென்று கேரளா போலீஸ் பிடியில் இருந்த 2 பேரை கைது செய்தவுடன் அவர்களிடம் இருந்த குழந்தையை மீட்டனர்.

    கைது செய்யப்பட்ட இருவரையும் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது அவர்கள் வட்டக்கோட்டை பகுதியை சேர்ந்த நாராயணன் (48) அவரது மனைவி சாந்தி (50) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் கிடுக்குபிடி விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குழந்தையை கடத்திச்சென்று கேர ளாவை சேர்ந்த ஒரு கும்பலி டம் ரூ.70 ஆயிரத்திற்கு விற்பனை செய்வதற்காக விலைபேசி உள்ளனர். பின்னர் அந்த திட்டத்தை கைவிட்டு குழந்தையை பிச்சை எடுக்கும் தொழிலில் பயன்படுத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர் நாராயணனை நாகர்கோவில் ஜெயிலிலும் சாந்தியை தக்கலை ஜெயிலிலும் அடைத்தனர்.

    • 40 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்
    • ஆர்ப்பாட்டம், மறியல், தீப்பந்தம் ஏந்தி போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    கன்னியாகுமரி:

    பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்து நாடாளுமன்ற செயலாக்கம் உத்தரவிட்டது.

    இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்திலும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டம், மறியல், தீப்பந்தம் ஏந்தி போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து இளைஞர் காங்கிரசார் செட்டிக்குளம் நோக்கி கையில் காங்கிரஸ் கொடியை ஏந்தியவாறு பேரணியாக வந்தனர். அப்போது பாரதிய ஜனதா அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமரை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். பாரதிய ஜனதா அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதாகவும் கூறப்படுகிறது.

    அப்போது பாரதிய ஜனதா அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர். பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினார். அப்போது பாரதிய ஜனதா, காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனால் அந்த பகுதியே போர்க்களமாக மாறியது. கற்கள் மற்றும் கம்பியால் சரமாரியாக தாக்கியதில் காங்கிரஸ் நிர்வாகிகள் லாரன்ஸ், டைசன் ஆகியோர் காயமடைந்தனர். பாரதிய ஜனதா நிர்வாகிகள் ஜெகநாதன், ஆறுமுகம், கிருஷ்ணன், மாதவன் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் அலுவலகத்திற்கு முன்பு குவிந்தனர். இதனால் பதட்டமான சூழல் நிலவியது. இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பாரதிய ஜனதா அலுவலகம் முன்பு நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் நடந்த போராட்டத்தால் பரபரப்பு நிலவியது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். காயமடைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரியிலும், தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் கொடுத்த புகாரின் பேரில் பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், பொதுச்செயலாளர் ஜெகநாதன் மற்றும் மகாதேவன் பிள்ளை, மகாராஜன், மாதவன், கிருஷ்ணன், ஆறுமுகம் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 147, 148, 294பி, 323, 324, 435, 506(2) ஐ.பி.சி. ஆகிய பிரிவுகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பாரதிய ஜனதா பொதுச்செயலாளர் ஜெகநாதன் கொடுத்த புகாரின் பேரிலும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன், மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் மற்றும் டைட்டஸ், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், விமல், ஜோண் உள்பட 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன், ஜெஸ்லின் உள்பட 11 பேரையும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மகாராஜன், சொக்கலிங்கம் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மகாராஜன் நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா முன்னாள் தலைவர் ஆவார். தற்போது தென்காசி மாவட்ட பார்வையாளராக உள்ளார். தலைமறைவான மற்றவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை வைத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காங்கிரஸ்-பாரதிய ஜனதா நிர்வாகிகள் மோதலை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    ×