search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் பலி"

    • க.விலக்கு பிரிவு பகுதியில் வந்தபோது சரக்குவாகனம் பைக் மீது மோதியதில் முதியவர் படுகாயமடைந்தார்.
    • ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியிலேயே முதியவர் உயிரிழந்தார்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் சிவாஜி(62). தற்போது சுருளிபட்டியில் வசித்து வந்தார். இவர் தனது சகோதரர்உடன் 2 மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    சுருளிபட்டி- சுருளிதீர்த்தம் சாலையில் உள்ள க.விலக்கு பிரிவு பகுதியில் வந்தபோது சரக்குவாகனம் அதிவேகமாக வந்து பைக் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த சிவாஜியை அக்கம்பக்கத்தி னர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே சிவாஜி இறந்து விட்டதாக பரிசோதனை செய்த டாக்ட ர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து ராயப்ப ன்பட்டி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வெளியூருக்கு சென்று சங்கு ஊதி பொதுமக்களிடம் பணம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.
    • சம்வத்தன்று வழக்கம் போல் சங்கு ஊதிக் கொண்டு சாலையில் சென்றபோது பின்னால் வந்த வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட குழந்தைகவுண்டர் படுகாயம் அடைந்தார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகில் உள்ள குண்டுராமபாளையம் பகுதியை சேர்ந்தவர் குழந்தைகவுண்டர் (வயது 75).

    இவர் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வெளியூருக்கு சென்று சங்கு ஊதி பொதுமக்களிடம் பணம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.

    வாகனம் மோதியது

    இந்த ஆண்டும் புரட்டாசி மாதத்தில் சங்கு ஊதுவதற்காக பாப்பம்பாடி அருகில் உள்ள கொண்டக்காரனூர் பகுதியில் வந்து தங்கியுள்ளார். சம்வத்தன்று வழக்கம் போல் சங்கு ஊதிக் கொண்டு சாலையில் சென்றபோது பின்னால் வந்த வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட குழந்தைகவுண்டர் படுகாயம் அடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    வழக்கு

    இது குறித்து குழந்தை கவுண்டரின் மகள் மாதம்மாள் (45 )என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மப்பேடு-சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விபத்து குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த வாசனாம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(67). இவர் திருவள்ளூரில் உள்ள உறவினரை சந்தித்து விட்டு மீண்டும் வாசனாம்பேடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    கண்ணூர் எடை மேடை அருகே மப்பேடு-சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தராஜ் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 45 அடி ஆழ விவசாய கிணற்றின் வழியாக வந்தவர் கால் தவறி கிணற்றிற்கு உள்ளே விழுந்தார்.
    • தீயணைப்பு துறையினர் வருவதற்க்குள் முதியவர் நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தார்.

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த தெல்லனஅள்ளி கிராமத்தில் வசித்து வந்த விவசாயி சின்னசாமி (வயது.75) .

    முதியவரான இவர் சம்பவத்தன்று மாலை அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்க்கு நடந்து வந்து கொண்டிருந்தர், வீட்டின் அருகே உள்ள நைனா கவுண்டர் என்பவரின் 45 அடி ஆழ விவசாய கிணற்றின் வழியாக வந்தவர் கால் தவறி கிணற்றிற்கு உள்ளே விழுந்தார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக பாலக்கோடு தீயனணப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வருவதற்க்குள் முதியவர் நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தார்.

    இறந்த முதியவரின் சடலத்தை மீட்ட தீயணைப்பு துறையினர் பிரேத பரிசோத–னைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பலியானவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது.
    • கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த முருகேசனை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    ராயபுரம்:

    பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65) முதியவர். இவர் சென்னை பூக்கடையில் உள்ள நடைபாதையில் தங்கி செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.

    நேற்று இரவு வேலை முடிந்ததும் சுப்பிரமணி சாலை ஓரத்தில் படுத்து தூங்கினார். அப்போது அந்த வழியாக வந்த லாரி திடீரென சாலையோரம் தூங்கிய சுப்பிரமணியன் மீது ஏறி இறங்கியது. இதில் தலை மற்றும் முகம் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

    இதுகுறித்து பூக்கடை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியானவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது.

    இது குறித்து யானை கவுனி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரான கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த முருகேசனை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    • ராஜா (62) கூலி தொழிலாளியான. இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் ஹனி மேடு சென்று கொண்டிருந்தார்.
    • தனக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு மயக்க ம் அடைந்தார்.

    சேலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள கோட்டைமேடு. எருமக்காரன் வளவு பகுதியை சேர்ந்தவர் ராஜா (62) கூலி தொழிலாளியான. இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் ஹனி மேடு சென்று கொண்டிருந்தபோது, தனக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு மயக்க ம் அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜாவின் மகன் மணி தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தனக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு மயக்க ம் அடைந்தார்.

    • குளிக்க சென்றபோது பரிதாபம்
    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்

    சேத்துப்பட்டு:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், ஈருடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனிஷ்லாஸ் (வயது 60). திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த செய்யானந்தல் மதுரா கர்ணாம்பாடி ஏரியில் ஒருவர் மீன் பிடிப்பதற்காக குத்தகை எடுத்துள்ளார்.

    அதில் தனிஷ்லாஸ் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று குளிப்பதற்காக அவர் ஏரியில் இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி கொண்டு நீரில் மூழ்கினார்.

    இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து சேத்துப்பட்டு தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினரும், போலீசாரும் ஏரியில் படகு மூலமும், தண்ணீரில் இறங்கியும் தனிஷ்லாசை தேடினர்.

    இரவு 8 மணி வரையும் தேடியும் அவர் கிடை க்கவில்லை . இதனால் தேடும் பணி கைவிடப்பட்டது. இன்று காலை தீயணைப்புத் துறையினர் தனிஷ்லாசை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேர தேடலுக்கு பின்பு அவரை பிணமாக மீட்டனர்.

    போலீசார் தனிஷ்லாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் குளிக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • பெரியகுப்பம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.
    • திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சம்பவ இடத்திலேயே முதியவர் பலியானார். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.

    இது தொடர்பாக திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
    • சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிரா மத்தை சேர்ந்தவர் அர்ச்சு ணன்.

    கள்ளகுறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிரா மத்தை சேர்ந்தவர் அர்ச்சு ணன் (வயது 75). அதே பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. குடிநீர் வீணாகி செல்வதால் மி்ன்மோட்டரை நிறுத்த அங்கிருந்து சுவிட்ச்சை அணைக்க அர்ச்சுணன் முயன்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய மணி வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    உறவினர்களை பார்க்க செல்வதாக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பழைய கரூர் சாலை செல்லமந்தாடி, ஜி.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது70). இவரது மனைவி வாசுகி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகளும் உள்ளனர். பாண்டித்துரைக்கு காது சரிவர கேட்காது.

    இந்நிலையில் உறவினர்களை பார்க்க செல்வதாக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை தேடிப்பார்த்தபோது முள்ளிப்பாடி அருகே ரயில் மோதி இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாண்டித்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலையில் அருகே உள்ள கடையில் பால் வாங்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் கடையில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
    • அதிகாலை நேரத்தில் சாலையின் குறுக்கே அடிக்கடி கால்நடைகள் செல்கின்றன.

    ஆலந்தூர்:

    நங்கநல்லூர், 18வது தெருவில் மழை நீர் வடிகால்வாய் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணி முழுமையாக நடைபெறாமல் ஆங்காங்கே சிறிய சிறிய பள்ளங்களாக மூடப்படாமல் இருக்கிறது.

    இந்த நிலையில் உள்ளகரம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (வயது84) காலையில் அருகே உள்ள கடையில் பால் வாங்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் கடையில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மாடு ஒன்று சாலையின் குறுக்கே சென்றதாக தெரிகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த முதியவர் ஜெயராஜ் மோட்டார் சைக்கிளோடு அருகில் மழைநீர் வடிகால்வாய் பகுதியில் விழுந்தார். இதில் அவர் மயங்கினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜெயராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஜெயராஜ் தவறி விழுந்து இடத்தில் கால்வாய் பணி நடைபெறுகிறது. ஆனால் இது முடிவடையாமல் சரியாக மூடப்படாமல் உள்ளது. இதேபோல் பல இடங்களில் கால்வாய் பணி முடியாமல் உள்ளன. அதிகாலை நேரத்தில் சாலையின் குறுக்கே அடிக்கடி கால்நடைகள் செல்கின்றன என்றார்.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, சாலையின் குறுக்கே மாடு சென்றதால் விபத்தில் ஜெயராஜ் இறந்து போனதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. எனினும் இதுபற்றி விசாரித்து வருகிறோம் என்றார்.

    • கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப்பில் சாலையை கடந்து செல்லும்போது இரு சக்கர வாகனம் மோதி படுகாயமடைந்தார்
    • தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்


    கிருஷ்ணராயபுரம்,

    கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கீழ அக்ரஹரத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 65). இவர் கரூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றார். திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப்பில் சாலையை இவர் கடந்து செல்லும்போது கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், சிந்தலவாடி ஊராட்சி, மகிளிபட்டியை சேர்ந்த பாண்டியன் மகன் மணிகண்டன் (26) என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி படுகாயமடைந்தார்.கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.உடலை கைப்பற்றிய மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    ×