search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே ரெயில் மோதி முதியவர் பலி
    X

    கோப்பு படம்.

    திண்டுக்கல் அருகே ரெயில் மோதி முதியவர் பலி

    உறவினர்களை பார்க்க செல்வதாக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பழைய கரூர் சாலை செல்லமந்தாடி, ஜி.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது70). இவரது மனைவி வாசுகி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகளும் உள்ளனர். பாண்டித்துரைக்கு காது சரிவர கேட்காது.

    இந்நிலையில் உறவினர்களை பார்க்க செல்வதாக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை தேடிப்பார்த்தபோது முள்ளிப்பாடி அருகே ரயில் மோதி இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாண்டித்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×