என் மலர்
உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து: முதியவர் பலி
- பெரியகுப்பம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.
- திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சம்பவ இடத்திலேயே முதியவர் பலியானார். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.
இது தொடர்பாக திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






