search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூக்கடை"

    • பலியானவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது.
    • கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த முருகேசனை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    ராயபுரம்:

    பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65) முதியவர். இவர் சென்னை பூக்கடையில் உள்ள நடைபாதையில் தங்கி செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.

    நேற்று இரவு வேலை முடிந்ததும் சுப்பிரமணி சாலை ஓரத்தில் படுத்து தூங்கினார். அப்போது அந்த வழியாக வந்த லாரி திடீரென சாலையோரம் தூங்கிய சுப்பிரமணியன் மீது ஏறி இறங்கியது. இதில் தலை மற்றும் முகம் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

    இதுகுறித்து பூக்கடை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியானவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது.

    இது குறித்து யானை கவுனி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரான கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த முருகேசனை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அங்குள்ள கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது.
    • பூ மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட்டு சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவில் அருகே பூ மார்க்கெட் செயல்பட்டு வந்தது. பின்னர் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அங்குள்ள கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது. இதனால் அங்கு செயல்பட்டு வந்த பூக்கடைகள் திருப்பூர் பல்லடம் சாலை காட்டன் மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வந்தது.

    இந்தநிலையில் வீரராகவப்பெருமாள் கோவில் பூ மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட்டு சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் திருப்பூர் பல்லடம் சாலை காட்டன் மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வந்த பூக்கடை வியாபாரிகள் அங்கு செல்லவில்லை. மேலும் காட்டன் மார்க்கெட் வளாகத்திலேயே பூ மார்க்கெட் செயல்படும் என தெரிவித்துள்ளனர். இது குறித்து காட்டன் மார்க்கெட் பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    அதில், காட்டன் மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட் கடைகள் அனைத்தும் தொடர்ந்து இதே வளாகத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கள்ளக்காதலி வீட்டில் பூக்கடைக்காரர் தூக்கில் தொங்கினார்.
    • சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே முள்ளிசெவல் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி வேல் (வயது 50), பூக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி முத்துலட்சுமி (48). சக்திவேலுக்கு அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணுடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்பு இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று சக்திவேல் ரத்த காயங்களுடன் வீட்டுக்கு வந்துள்ளார். மனைவி முத்துலட்சுமி அதுபற்றி விசாரிக்கும்போது, கீழே விழுந்து விட்டதாக கூறி உள்ளார்.

    ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக மனைவி கூறியபோது, அதை மறுத்து விட்டு கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் லட்சுமி வீட்டுக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக முத்துலட்சுமி அளித்த புகாரின்பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×