search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி
    X

    கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி

    • 45 அடி ஆழ விவசாய கிணற்றின் வழியாக வந்தவர் கால் தவறி கிணற்றிற்கு உள்ளே விழுந்தார்.
    • தீயணைப்பு துறையினர் வருவதற்க்குள் முதியவர் நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தார்.

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த தெல்லனஅள்ளி கிராமத்தில் வசித்து வந்த விவசாயி சின்னசாமி (வயது.75) .

    முதியவரான இவர் சம்பவத்தன்று மாலை அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்க்கு நடந்து வந்து கொண்டிருந்தர், வீட்டின் அருகே உள்ள நைனா கவுண்டர் என்பவரின் 45 அடி ஆழ விவசாய கிணற்றின் வழியாக வந்தவர் கால் தவறி கிணற்றிற்கு உள்ளே விழுந்தார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக பாலக்கோடு தீயனணப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வருவதற்க்குள் முதியவர் நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தார்.

    இறந்த முதியவரின் சடலத்தை மீட்ட தீயணைப்பு துறையினர் பிரேத பரிசோத–னைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×