search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elderly man dead"

    • மப்பேடு-சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விபத்து குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த வாசனாம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(67). இவர் திருவள்ளூரில் உள்ள உறவினரை சந்தித்து விட்டு மீண்டும் வாசனாம்பேடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    கண்ணூர் எடை மேடை அருகே மப்பேடு-சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தராஜ் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை அருகே சாலை குண்டும், குழியுமாக இருந்ததால் நடந்து சென்ற முதியவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி, அனிபீரான் தெரு பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது77).

    இவர் கடந்த 14-ந்தேதி வீட்டில் இருந்து திருப்பத்தூர் பகுதிக்கு சென்று மீண்டும் திருப்பத்தூரில் இருந்து ஆட்டோவில் பக்கிரிதக்கா தென்றல் நகர் பகுதியில் இறங்கி அவரது வீட்டிற்கு செல்ல திருப்பத்தூர் வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    சாலை குண்டும், குழியுமாக இருந்ததால் நடந்து சென்ற முதியவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரபத்திரன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அரசு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
    ×