என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாடு குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளோடு கால்வாயில் விழுந்து முதியவர் பலி
- காலையில் அருகே உள்ள கடையில் பால் வாங்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் கடையில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
- அதிகாலை நேரத்தில் சாலையின் குறுக்கே அடிக்கடி கால்நடைகள் செல்கின்றன.
ஆலந்தூர்:
நங்கநல்லூர், 18வது தெருவில் மழை நீர் வடிகால்வாய் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணி முழுமையாக நடைபெறாமல் ஆங்காங்கே சிறிய சிறிய பள்ளங்களாக மூடப்படாமல் இருக்கிறது.
இந்த நிலையில் உள்ளகரம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (வயது84) காலையில் அருகே உள்ள கடையில் பால் வாங்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் கடையில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அப்போது மாடு ஒன்று சாலையின் குறுக்கே சென்றதாக தெரிகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த முதியவர் ஜெயராஜ் மோட்டார் சைக்கிளோடு அருகில் மழைநீர் வடிகால்வாய் பகுதியில் விழுந்தார். இதில் அவர் மயங்கினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜெயராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஜெயராஜ் தவறி விழுந்து இடத்தில் கால்வாய் பணி நடைபெறுகிறது. ஆனால் இது முடிவடையாமல் சரியாக மூடப்படாமல் உள்ளது. இதேபோல் பல இடங்களில் கால்வாய் பணி முடியாமல் உள்ளன. அதிகாலை நேரத்தில் சாலையின் குறுக்கே அடிக்கடி கால்நடைகள் செல்கின்றன என்றார்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, சாலையின் குறுக்கே மாடு சென்றதால் விபத்தில் ஜெயராஜ் இறந்து போனதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. எனினும் இதுபற்றி விசாரித்து வருகிறோம் என்றார்.






