search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உத்தமபாளையம் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதி முதியவர் பலி
    X

    கோப்பு படம்

    உத்தமபாளையம் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதி முதியவர் பலி

    • க.விலக்கு பிரிவு பகுதியில் வந்தபோது சரக்குவாகனம் பைக் மீது மோதியதில் முதியவர் படுகாயமடைந்தார்.
    • ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியிலேயே முதியவர் உயிரிழந்தார்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் சிவாஜி(62). தற்போது சுருளிபட்டியில் வசித்து வந்தார். இவர் தனது சகோதரர்உடன் 2 மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    சுருளிபட்டி- சுருளிதீர்த்தம் சாலையில் உள்ள க.விலக்கு பிரிவு பகுதியில் வந்தபோது சரக்குவாகனம் அதிவேகமாக வந்து பைக் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த சிவாஜியை அக்கம்பக்கத்தி னர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே சிவாஜி இறந்து விட்டதாக பரிசோதனை செய்த டாக்ட ர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து ராயப்ப ன்பட்டி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×