search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரியில் மூழ்கி முதியவர் பலி
    X

    ஏரியில் மூழ்கி முதியவர் பலி

    • குளிக்க சென்றபோது பரிதாபம்
    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்

    சேத்துப்பட்டு:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், ஈருடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனிஷ்லாஸ் (வயது 60). திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த செய்யானந்தல் மதுரா கர்ணாம்பாடி ஏரியில் ஒருவர் மீன் பிடிப்பதற்காக குத்தகை எடுத்துள்ளார்.

    அதில் தனிஷ்லாஸ் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று குளிப்பதற்காக அவர் ஏரியில் இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி கொண்டு நீரில் மூழ்கினார்.

    இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து சேத்துப்பட்டு தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினரும், போலீசாரும் ஏரியில் படகு மூலமும், தண்ணீரில் இறங்கியும் தனிஷ்லாசை தேடினர்.

    இரவு 8 மணி வரையும் தேடியும் அவர் கிடை க்கவில்லை . இதனால் தேடும் பணி கைவிடப்பட்டது. இன்று காலை தீயணைப்புத் துறையினர் தனிஷ்லாசை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேர தேடலுக்கு பின்பு அவரை பிணமாக மீட்டனர்.

    போலீசார் தனிஷ்லாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் குளிக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×