search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீட்பு"

    • படுகாயங்களுடன் கிடந்தவரை தீயணைப்பு படையினர் கயிறு கட்டி மீட்டனர்
    • அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர்- மேட்டுப்பாளை யம் மலைபாதையில் பல்வேறு இடங்களில் புதிதாக நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன. அவற்றில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    குன்னூர் அடுத்த சேலாஸ் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது46). கூலித்தொழிலாளி. அவர் குரும்பாடி அருகே உள்ள அருவியில் குளிக்க சென்றார். அப்போது அவர் கால் தவறி 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். தகவலின்பே ரில் போலீசார் மற்றும் தீயனைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் 100 அடி ஆழம் உடைய பள்ளத்தாக்கில் கயிறு கட்டி கீழே இறங்கி சென்று, 4 மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ரவிச்சந்திரன் பள்ளத்தாக்கின் மத்தியில் தலை மற்றும் கால்களில் படுகாயங்களுடன் கிடப்பதை பார்த்தனர்.

    உடனடியாக அவரை மீட்டு மேலே கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் அங்குள்ள அரசு மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • சேலம் மாவட்டம் ஏற்காடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் இன்று காலை சுமார் 9 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள தனக்கு சொந்தமான கிணற்றை சுற்றி இருந்த முட்புதர்களை வெட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
    • அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து முதல் உதவி செய்யப்பட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (55). இவர் இன்று காலை சுமார் 9 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள தனக்கு சொந்தமான கிணற்றை சுற்றி இருந்த முட்புதர்களை வெட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். கடந்த 2 நாட்களாக பெய்து வந்த மழையினால் கிணற்றை சுற்றி சேறும், சகதியுமாக இருந்துள்ளது.

    இதனால் எதிர்பாராத விதமாக கால் வழுக்கி 20 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில் செல்வமணி தவறி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் செல்வகுமாரை உயிருடன் மீட்டனர். அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து முதல் உதவி செய்யப்பட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • முசிறியில் தொழிலாளி தவறவிட்ட பணத்தை மீட்டு போலீசார்ஒப்படைத்தனர்
    • பணத்தை பெற்ற தொழிலாளி, போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்

    முசிறி,

    முசிறி துறையூர் சாலையில் உள்ள வங்கி பகுதியில் முசிறி போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது வங்கியின் ஏ.டி.எ.ம் அருகில் பர்ஸ் ஒன்று கிடந்தது. இதை எடுத்து பார்த்ததில் ரூ.11 ஆயிரம் மற்றும் அதில் தவறவிட்டவரின் புகைப்படம் ஒன்று இருந்ததை கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பர்சை தவறவிட்டது வடுகப்பட்டியை சேர்ந்த தொழிலாளி விஸ்வநாதன் என்பது தெரிந்து அவரை முசிறி காவல் நிலையத்திற்கு வரவழைத்து மேல் விசாரணை செய்து அவரிடம் உரிய அடையாளம் உண்மை சான்றிதழ் நகல் பெற்ற பின்னர் ரூ.11 ஆயிரம் பணத்துடன் மணி பர்சை காவல் ஆய்வாளர் கதிரேசன், பணத்தை தவறவிட்ட உரியவரான விஸ்வநாதனிடம் வழங்கினார். தொலைந்து போன தனது பணம் கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறையால் பெற்ற விசுவநாதன் காவல் துறைக்கு நன்றி தெரிவித்தார்.

    • காதலனுக்கு போலீஸ் வலை வீச்சு
    • கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள வடக்கு குண்டல் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண், பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி அவர் திடீ ரென மாயமாகி விட்டார். இதைத் தொடர்ந்து உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் பெ ற்றோர் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த அனீஸ் குமார் என்பவரையும் காணவில்லை என பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. எனவே அவர் தான், தங்கள் மகளை கடத்தி சென்று உள்ளார் என்று கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வந்தனர்.

    இதற்கிடையில் அனீஸ்குமாரும் இளம்பெண்ணும் காதலித்து வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் வடக்கு குண்டல் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு இளம்பெண் மட்டுமே இருந்துள்ளார். அனீஸ்குமார் தப்பி சென்று விட்டார். இதை த்தொட ர்ந்து போலீசார், மாண வியை மீட்டு கொண்டு வந்தனர். பின்னர் அவரை மருத்துவப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் அனீஸ் குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
    • விசாரணைக்கு வராத நபர் குறித்தும் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கோவை:

    சிங்கப்பூரில் இருந்து விமானம் ஒன்று கடந்த 6-ந் தேதி கோவை விமான நிலையம் வந்தது. பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் இடத்தில் 3 பெட்டிகள் அனாதையாக இருந்தது. அந்த பெட்டிகளுக்கு யாரும் உரிமை கோரவில்லை.

    ஒருநாள் முழுவதும் 3 பெட்டிகளும் அங்கேயே இருந்ததால் விமான நிலைய அதிகாரிகள் சந்தேகம் அடைந்து 3 பெட்டியை யார் எடுத்து வந்தார்கள் என்று கண்காணிப்பு கேமிரா மூலம் சோதனை செய்தனர்.

    அப்போது 3 நபர்கள் பெட்டியை எடுத்து வந்து வைப்பதும், அவர்கள் சிங்கப்பூரில் இருந்து வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அவர்களை விமான நிலையத்திற்கு வரவழைத்தனர். 3 பேரில் 2 பேர் டொமினிக், ராமசாமி ஆகியோர் விசாரணைக்கு வந்தனர். ஒரு நபர் வரவில்லை.

    இதுகுறித்து விசாரணை மேற்கண்டபோது பெட்டியில் சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு உயிரினங்களான 11 ஆயிரம் ஆமைகள், சிலந்தி வகைகள், அரியவகை பாம்புகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் அரியவகை வெளிநாட்டு விலங்குகள் என்பதால் மீண்டும் சிங்கப்பூருக்கு அனுப்ப சுங்கத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். விசாரணைக்கு வராத நபர் குறித்தும் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • மரத்தின் கிளையை பிடித்து மேடான பகுதியில் நின்றதால் தப்பினார்.
    • தீயணைப்பு படையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்

    கவுண்டம்பாளையம்,

    கோவை இடிகரை அத்திபாளையம் பகுதியில் கவுசிகாநதி பெரும்பள்ளம் செல்கிறது. இந்த பள்ளத்தின் நடுவே பொதுமக்கள் நடந்து செல்ல மற்றும் போக்குவரத்து வாகனங்களில் செல்வதற்கு வசதியாக தரைப்பாலமும் உள்ளது.

    இன்று அதிகாலை பெய்த மழை காரணமாக இந்த பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் தரைப்பாலம் மூழ்கியது.அப்போது அத்திபாளையத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். தரைப்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

    அவரது சத்தம்கேட்டும் அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து, தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர் மரத்தின் கிளையை பிடித்து மேடான பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

    தீயணைப்பு படையினர் விரைந்து சென்று அவரை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

    • செய்வதறியாத நிலையில் வீட்டிற்குள்ளேயே பொன்னுசாமி முடங்கி கிடந்தார்.
    • சுமார் 10 அடி ஆழமுடைய ஒரு கசிவுநீர் கால்வாய் மாயமானது தெரியவந்தது.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு அருகே லக்காபுரத்தில் வசித்து வருபவர் பொன்னுசாமி (85). முன்னாள் கிராமநிர்வாக அலுவலர். இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவர் தற்போது கோவையில் வசித்து வருகிறார். உடல்நலம் பாதிக்கப்பட்ட பொன்னுசாமி எழுந்து நடமாட முடியாத நிலையில் உள்ளார்.

    இந்நிலையில் ஈரோடு பகுதியில் பெய்த மழையின் மழைநீரும், கீழ்பவானி பாசன பகுதிகளில் இருந்து வெளியேறிய கசிவுநீரும் லக்காபுரத்தில் பொன்னுசாமி வசித்து வரும் வீட்டிற்குள் புகுந்து சூழ்ந்தது. இதனால் செய்வதறியாத நிலையில் வீட்டிற்குள்ளேயே பொன்னுசாமி முடங்கி கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் தாசில்தார் இளஞ்செழியன் ஆகியோர் அங்கு சென்று பொன்னுசாமியை அங்கிருந்து மீட்டு மொடக்குறிச்சி டாக்டர்.சரஸ்வதி எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான மருத்துவ மனையில் தற்காலிகமாக தங்கவைத்தனர்.

    பின்னர் பொன்னுசாமி வசித்து வரும் வீட்டின் பகுதிக்கான வரைபடத்தை ஆய்வு செய்தபோது அந்த பகுதியில் சுமார் 10 அடி ஆழமுடைய ஒரு கசிவுநீர் கால்வாய் மாயமானது தெரியவந்தது.

    இதனையடுத்து எந்திரங்களுடன் சென்ற அதிகாரிகள் அந்த பகுதியில் ஆக்கிரமித்து மறைக்கப்பட்டிருந்த கசிவு நீர்கால்வாயை கண்டுபிடித்து அதற்குள் நிரப்பட்டிருந்த மண் மற்றும் கான்கிரீட் கட்டுமானங்களை அகற்றி பல ஆண்டுகளாக காணாமல் போன அந்த கால்வாயை மீட்டனர். இதனால் பொன்னு சாமியின் வீட்டையும், அந்த பகுதியையும் சூழ்ந்திருந்த மழைநீர் மற்றும் பாசன கசிவுநீர் வடிந்தது. 

    • அம்மா புதுப்பட்டி கிராமத்தில் விவசாயியின் ஆடு கிணற்றில் விழுந்தது
    • தீயணைப்பு வீரர்கள் ஆட்டை உயிருடன் மீட்டு விவசாயிடம் ஒப்படைத்தனர்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த அம்மா புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ். விவசாயியான இவர் ஆடு வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று மேய்ச்சலுக்கு செல்லும்போது 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதனை பார்த்த ரெங்கராஜ் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆட்டை உயிருடன் மீட்டு விவசாயிடம் ஒப்படைத்தனர்.

    • கந்தர்வகோட்டை குப்பையன்பட்டியில் கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
    • 40 அடி கழிவுநீர் கிடக்கும், கிணற்றில் தவறி விழுந்து

    கந்தர்வகோட்டை 

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த குப்பையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜ். இவருக்கு சொந்தமான நிறைமாத பசுமாடு மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் 40 அடி கழிவுநீர் கிடக்கும், கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. தகவல் அறிந்த கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல் ரஹ்மான் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பசுமாட்டை போராடி உயிருடன் மீட்டனர்.

    • தக்கலை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
    • தக்கலை சுற்று வட்டார பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    தக்கலை:

    தக்கலை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தக்கலை சுற்று வட்டார பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் தக்கலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

    மேலும் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் முட்டைக்காடு குமாரபுரம் பகுதியில் ஒரு முதியவர் தண்ணீரில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள வர்கள் தக்கலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு துறை அதிகாரி ஜவான்ஸ் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து முதியவரை மீட்கும் பணி யில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் முதியவர் தீய ணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டார்.

    • டி.சி. கொடுத்து விடுவேன் என தலைமை ஆசிரியர் மிரட்டியதால் வேதனை
    • பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர்

    கோவை,

    கோவை மதுக்கரை அருகே உள்ள குரும்பபாளையம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சக்திபாபு. இவரது மகன் யோகேஷ் (வயது 13).

    திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் லோகேஷ் (13). கல்யாண சுந்தரனார் வீதியை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மகன் அஸ்வந்த் (13), வீரமாத்தி அம்மன் கோவில் விதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு. இவரது மகன் ரோகித் (13). இவர்கள் 4 பேரும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து பள்ளியில் தலைமை ஆசிரியர் மாணவர்கள் 4 பேரையும் அழைத்து டி.சி. கொடுத்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.

    இதனால் பெற்றோருக்கு பயந்த மாணவர்கள் 4 பேரும் வீட்டிற்கு செல்லாமல் இருந்தனர். மேலும் அவர்கள் ஊட்டிக்கு செல்லலாம் என முடிவு செய்தனர். அதன்படி கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு புறப்பட்டு சென்றனர். மாணவர்கள் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த அவர்களின் பெற்றோர் மதுக்கரை போலீசில் மாயமான தங்களது மகன்களை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்களை தேடி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவர்கள் ஊட்டி செல்வதற்காக மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் நிற்பது தெரிய வந்தது. பின்னர் மதுக்கரை போலீசார் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று மாணவர்கள் 4 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    • மாங்கோட்டை கீழப்பட்டி கிராமத்தில் உள்ள வறண்ட கிணற்றில் ஆடு தவறி விழுந்தது
    • ஆலங்குடி தீயணைப்புத்துறை வீரர்கள் கயிறு கட்டி, உள்ளே இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டனர்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை கீழப்பட்டி கிராமத்தில் ராசு என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில், அதே பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவருக்கு சொந்தமான ஆடு ஒன்று இரை தேடி சென்ற போது தவறி விழுந்துள்ளது.

    இது குறித்து அப்பகுதியினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குடி தீயணைப்புத்துறை வீரர்கள் கயிறு கட்டி, உள்ளே இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டனர். 

    ×