search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் பெற்றோருக்கு பயந்து ஊட்டிக்கு சென்ற 4 பள்ளி  மாணவர்கள் மீட்பு
    X

    கோவையில் பெற்றோருக்கு பயந்து ஊட்டிக்கு சென்ற 4 பள்ளி மாணவர்கள் மீட்பு

    • டி.சி. கொடுத்து விடுவேன் என தலைமை ஆசிரியர் மிரட்டியதால் வேதனை
    • பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர்

    கோவை,

    கோவை மதுக்கரை அருகே உள்ள குரும்பபாளையம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சக்திபாபு. இவரது மகன் யோகேஷ் (வயது 13).

    திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் லோகேஷ் (13). கல்யாண சுந்தரனார் வீதியை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மகன் அஸ்வந்த் (13), வீரமாத்தி அம்மன் கோவில் விதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு. இவரது மகன் ரோகித் (13). இவர்கள் 4 பேரும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து பள்ளியில் தலைமை ஆசிரியர் மாணவர்கள் 4 பேரையும் அழைத்து டி.சி. கொடுத்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.

    இதனால் பெற்றோருக்கு பயந்த மாணவர்கள் 4 பேரும் வீட்டிற்கு செல்லாமல் இருந்தனர். மேலும் அவர்கள் ஊட்டிக்கு செல்லலாம் என முடிவு செய்தனர். அதன்படி கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு புறப்பட்டு சென்றனர். மாணவர்கள் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த அவர்களின் பெற்றோர் மதுக்கரை போலீசில் மாயமான தங்களது மகன்களை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்களை தேடி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவர்கள் ஊட்டி செல்வதற்காக மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் நிற்பது தெரிய வந்தது. பின்னர் மதுக்கரை போலீசார் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று மாணவர்கள் 4 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×