search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிய வகை உயிரினங்கள்"

    • விலங்கியல் மொழியில் பைசே, அரபைப்மா கைகாஸ் என அழைக்கப்படுகிறது
    • வளர்ச்சி பெற்ற பைசே சுமார் 12 அடி நீளமும், 20 கிலோகிராம் எடையும் கொண்டவை

    பிரேசில், கொலம்பியா, பெரு மற்றும் பல தென் அமெரிக்க நாடுகளில் பரந்து விரிந்திருக்கும் மழைக்காடுகள், அமேசான் (Amazon). மத்திய தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா (Bolivia) நாட்டிலும் இது சுமார் 4 சதவீதம் உள்ளது.

    பொலிவியாவை ஒட்டிய அமேசான் நீர்நிலைகளில் மீன்பிடி தொழில் செய்து வந்தவர் கில்லர்மோ ஒட்டா பாரம். இவரது வலையில் முன்னெப்போதும் இல்லாத அரிய வகை மீன் சிக்கியது.

    வழக்கத்தில் பைசே (paiche) என அழைக்கப்படும் இம்மீன், விலங்கியல் மொழியில் அரபைப்மா கைகாஸ் (Arapaipma gigas) என அழைக்கப்படுகிறது.


    நன்னீர் (freshwater) மீன் வகைகளில் மிக பெரிய மீனான இது சுமார் 4 மீட்டர் (12 அடி) வரை நீளமும் 200 கிலோகிராம் நீளமும் உடையது.

    எப்பொழுதும் அதிக பசியுடன் இருக்கும் பைசே, கூட்டம் கூட்டமாக வரும் பிற சிறிய மீன் வகைகளை உண்டு விடும். பைசேவிற்கு அஞ்சி பிற மீன் வகைகள், வேறு நீர்நிலைகளை தேடி ஓடி விடுகின்றன.

    இவ்வகை மீன்கள் இருக்கும் இடங்களில் பிற வகை மீன்கள் வாழ்வது அரிதாவதால் உயிரியல் ஏற்றத்தாழ்வுக்கு இவை காரணமாவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


    பொலிவியா நீர்நிலையில் இந்த மீன் வந்த காலகட்டம் குறித்து சரிவர தகவல்கள் இல்லை. பெரு நாட்டில் உள்ள மீன் பண்ணைகளில் உற்பத்தியாகி இங்கு வந்திருக்கலாம் என தெரிகிறது.

    பைசேவிற்கு அதன் வாழ்நாளில் வருடத்திற்கு சராசரியாக 10 கிலோ வரை எடை கூடிக்கொண்டே போகும். பல சிறிய பற்களை கொண்டிருந்தாலும் அவை கூரானதாக இருக்காது. ஆனாலும், பிரன்ஹா (piranha) போன்ற ஆபத்தான மீன் வகைகளை பைசே கடித்து தின்று விடும்.

    அரிதான பைசேவின் இனம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக உயிரியல் நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    அவ்வப்போது சுவாசத்திற்காக நீருக்கு மேலே தோன்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், பைசே அமைதியான நீர்நிலைகளை விரும்புகின்றன. அங்கு வரும் போது இவை பிடிபடுவது சுலபமாகிறது.


    ஆரம்பத்தில் இவ்வகை மீன் ஆபத்தானது என நினைத்து பிடிக்க அஞ்சிய மீன்பிடி தொழிலாளர்கள், இவற்றிற்கு பெருகி வரும் தேவைக்காக தேடி பிடிக்கின்றனர்.

    • உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
    • விசாரணைக்கு வராத நபர் குறித்தும் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கோவை:

    சிங்கப்பூரில் இருந்து விமானம் ஒன்று கடந்த 6-ந் தேதி கோவை விமான நிலையம் வந்தது. பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் இடத்தில் 3 பெட்டிகள் அனாதையாக இருந்தது. அந்த பெட்டிகளுக்கு யாரும் உரிமை கோரவில்லை.

    ஒருநாள் முழுவதும் 3 பெட்டிகளும் அங்கேயே இருந்ததால் விமான நிலைய அதிகாரிகள் சந்தேகம் அடைந்து 3 பெட்டியை யார் எடுத்து வந்தார்கள் என்று கண்காணிப்பு கேமிரா மூலம் சோதனை செய்தனர்.

    அப்போது 3 நபர்கள் பெட்டியை எடுத்து வந்து வைப்பதும், அவர்கள் சிங்கப்பூரில் இருந்து வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அவர்களை விமான நிலையத்திற்கு வரவழைத்தனர். 3 பேரில் 2 பேர் டொமினிக், ராமசாமி ஆகியோர் விசாரணைக்கு வந்தனர். ஒரு நபர் வரவில்லை.

    இதுகுறித்து விசாரணை மேற்கண்டபோது பெட்டியில் சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு உயிரினங்களான 11 ஆயிரம் ஆமைகள், சிலந்தி வகைகள், அரியவகை பாம்புகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் அரியவகை வெளிநாட்டு விலங்குகள் என்பதால் மீண்டும் சிங்கப்பூருக்கு அனுப்ப சுங்கத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். விசாரணைக்கு வராத நபர் குறித்தும் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ×