search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் விழுந்த ஆடு
    X

    கிணற்றில் விழுந்த ஆடு

    • அம்மா புதுப்பட்டி கிராமத்தில் விவசாயியின் ஆடு கிணற்றில் விழுந்தது
    • தீயணைப்பு வீரர்கள் ஆட்டை உயிருடன் மீட்டு விவசாயிடம் ஒப்படைத்தனர்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த அம்மா புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ். விவசாயியான இவர் ஆடு வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று மேய்ச்சலுக்கு செல்லும்போது 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதனை பார்த்த ரெங்கராஜ் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆட்டை உயிருடன் மீட்டு விவசாயிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×