search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் சேர்க்கை"

    • ஆண்களுக்கு, 40 வயது வரை மட்டும் பயிற்சியில் சேரலாம்.
    • இதுவரை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்காதவர்களும் நேரில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து சேர்ந்து கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சுப்பிரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில், 2023-24-ம் ஆண்டு நிர்வாக இட ஒதுக்கீட்டில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில், ஒரு ஆண்டு கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பும், இரண்டு ஆண்டு மின்சார பணியாளர்களுக்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது.

    பயிற்சி முடித்தவுடன் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில், அப்ரண்டீஸ் ஷிப் பயிற்சி சம்பளத்துடன் பெற்று தரப்படும். அரசுப் பள்ளியில் படித்த பெண் பயிற்சியாளருக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம், 1000 ரூபாய்- பெற்றுத் தரப்படும்.

    பயிற்சியில் சேரும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் சிறப்புக் கட்டணம் அரசு செலுத்தும். இதர கட்டணங்களாக, 1,275 ரூபாயை மட்டும் செலுத்தி சேர்க்கை செய்து கொள்ளலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.

    ஆண்களுக்கு, 40 வயது வரை மட்டும் பயிற்சியில் சேரலாம். சேர்க்கைக்கு, மாற்றுச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் அசல் மற்றும் நகல்கள்- 2 காப்பி, ஆதார் அட்டை நகல் (விண்ணப்பதாரர், தாய் மற்றும் தந்தை) -2 நகல்கள் ஆகியவற்றுடன் பயிற்சி நிலையத்திற்கு வந்து இதுவரை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்காதவர்களும் நேரில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து சேர்ந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04343-265652 என்ற எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜிப்மரின் மாணவர் சேர்க்கை, 2 ஆண்டுகளுக்கு முன்னர் 62 ஆக உயர்த்த ப்பட்டது.
    • 62 லிருந்து, மத்திய அரசின் மற்ற புதிய மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது போல 150 ஆக உயர்த்த ஆவன செய்ய வேண்டும்.

     புதுச்சேரி:

    காரைக்கால் ஜிப்மர் உயர்சிகிச்சை மருத்துவக் கல்லூரிக்கான முன்னாள் ஆலோசகர் மோகன், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர் மன்சுக் மாண்டாவியாவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது:-

    2016-ல் சுமார் 50 மாணவர்களுடன் துவ ங்கப்பட்ட காரைக்கால் ஜிப்மரின் மாணவர் சேர்க்கை, 2 ஆண்டுகளுக்கு முன்னர் 62 ஆக உயர்த்த ப்பட்டது. 506 படுக்கைகள் கொண்ட காரைக்கால் மாவட்ட அரசு மருத்துவமனை மாண வர்களின் பயிற்சிக்காக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. மாணவ மற்றும் மாணவியர் விடுதிகள் புதுச்சேரி அரசின் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது.

    தற்போது ரூ.460 கோடி செலவில் கல்லூரி மற்றும் நிர்வாக வளாக கட்டிடம், மாணவர் விடுதிகள், மாணவியர் விடுதிகள், டீன், பேராசிரியர்கள், மருத்து வர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கான வீடுகள் மற்றும் குடியிருப்புகள், உணவுக்கூடங்கள் மற்றும் சமையல் கூடங்கள் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு போதுமான அறைகள் கொண்ட மாணவர் விடுதி களும் முழுமையாக உபயோ கப்படுத்தப்பட உள்ளது. காரைக்கால் ஜிப்மரின் மாணவர் சேர்க்கையை எதிர்வரும் கல்வியாண்டிலேயே தற்போதைய 62 லிருந்து, மத்திய அரசின் மற்ற புதிய மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது போல 150 ஆக உயர்த்த ஆவன செய்ய வேண்டும். இதன் மூலம் காரைக்கால் உட்பட புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 40 மாணவர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட ப்ப்பட்டுள்ளது.

    • 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம்.
    • பயிற்சியில் சேர விரும்பும் மகளிருக்கு உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை.

    கோவை,

    கோவை அரசு மகளிர் ஐ.டிஐ.-யில் நாளை முதல் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் இயங்கிவரும் அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் முன்னுரிமை விண்ணப்பதாரர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நாளை (ஜூலை 13) முதல் நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதில், 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம். இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது நேரில் வருவோருக்கு உதவி மையம் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    பயிற்சியில் சேர விரும்பும் மகளிருக்கு உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை மற்றும் சிறப்பு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. இங்கு ஓராண்டு பயிற்சிகளான டெஸ்க்டாப் பப்ளிஷிங் ஆபரேட்டர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அண்ட் புரோகிராமிங் அசிஸ்டன்ட், ஐஓடி டெக்னீ சியன் (ஹெல்த் கேர்), சூவிங் டெக்னாலஜி தொழிற்பிரிவுகளும், இரண்டு ஆண்டு பயிற்சி களான இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்பர்மே ஷன் டெக்னாலஜி, மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் டெக்னீஷியன் ெதாழிற்பி ரிவுகளும், 6 மாத கால பயிற்சியான ஸ்மார்ட் போன் டெக்னாலஜி-ஆப் டெஸ்டர் தொழிற்பிரிவும் பயிற்றுவிக்கப்படுகிறது. பயிற்சியில் தேர்ச்சி பெற்றால் மத்திய அரசின் தேசிய தொழிற்சான்றிதழ் (என்சிவிடி) வழங்கப்படும்.

    அனைத்து பயிற்சியாளர்களுக்கும் மாதம் தலா ரூ.750 உதவித்தொகை புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கு மாதம் ரூ.1,000, மடிக்கணினி, மிதி வண்டி, சீருடை, தையற்கூலி, காலணி, பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், 30 கிலோ மீட்டர் தொலைவு வரை இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படுகிறது.

    இதுதவிர நவீன தொழிற்வளர்ச்சியை அறிந்து கொள்ளும் பொருட்டு இன்டர்ன்ஷிப் பயிற்சி, தொழில்நிறுவ னங்களை பார்வையிடுதல் போன்றவை ஏற்பாடு செய்யப்படுகிறது. பயிற்சி முடியும் தருவாயில் வளாக நேர்காணல் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஐ.டி.ஐ.யில் நேரடி மாணவர் சேர்க்கை நாளை நடக்கிறது.
    • இத்தகவலை செக்கானூரணி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் செக்கானூரணி அரசினர் தொழிற்பயற்சி நிலையத்தில் பிட்டர், டர்னர், எலக்ட்ரீ–சியன், குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப் பபடுத்துதல் போன்ற இரண்டு வருட தொழிற் பிரிவுகளுக்கும், வெல்டர், உலோகத்தகடு வேலையாள் போன்ற ஓராண்டு தொழிற் பிரிவுகளுக்கு ஆன்லைன் மூலம் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    மேற்கண்ட தொழிற்பி–ரிவுகளில் காலியாக உள்ள ஒரு சில இடங்களுக்கு சேர விருப்பம் உள்ள 8, 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நாளை (13.07.2023) முதல் செக்கா–னூரணி அரசு தொழிற்ப–யிற்சி நிலையத்திற்கு நேரடி–யாக வந்து விண்ணப்பித்து பயிற்சியில் சேர்ந்து கொள் ளலாம்.

    மேலும், இங்கு சேர்ந்து பயிற்சி பெறுகின்ற மாண–வர்களுக்கு இலவச பேருந்து கட்டண சலுகை, விலை–யில்லா மிதிவண்டி, சீருடை–கள், காலணி, வரைபடக்க–ருவிகள், புத்தகங்கள் வழங் கப்படும்.

    மேலும் பயிற்சியா–ளர்க–ளுக்கு மாதம் ரூ.750 உத–வித்தொகை யும், பயிற்சி முடித்த மாணவ ர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடு–களில் 100 சதவீத வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும்.

    கூடுதல் விபரங்க ளுக்கு 04549-287224, 96260 67302, 98409 47460, 95669 03149 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள லாம். இத்த கவலை செக்கானூ ரணி அரசி னர் தொழி ற்ப யிற்சி நிலைய முதல்வர் அசோகன் தெரி–வித்து ள்ளார்.

    • நாளை கடைசி நாள்
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், 330

    தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில்

    தற்போது 2023-24-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடை பெற்று வருகிறது. தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீடு சேர்க் கைக்கான விவரங்கள் www.skilltraining. tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப தாரர்கள் தற்காலிக ஒதுக்கீடு ஆணையை மேற்குறிப்பிட்ட இணை யதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    அதன் பிறகு சம்பந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அசல் சான்றிதழுடன் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி சேர்க்கையினை உறுதி செய்ய வேண்டும். இதற்கான கடைசி நாள் நாளை (புதன்கிழமை) ஆகும். இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • தோப்புத்துறை ஊராட்சிபள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைவர் நிஷாந்தி தலைமையில் நடந்தது.

    முன்னதாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மாணிக்கம் அனைவரையும் வரவேற்றார்.

    பள்ளி தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்தி, கூட்ட பொருள் குறித்து பேசினார்.

    தொடர்ந்து, துணை தலைவர் உமா மகேஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர் அம்சவல்லி கோவிந்தராஜுலு, கல்வியாளர் ஆர்த்தி, உறுப்பினர்கள் ரபியத்துல் பஜ்ரியா, மீனா, முருகானந்தம், சுரேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்துவது, 10, 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கல்லூரி கல்வி பெற வழிகாட்டுவது மற்றும் உதவி செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் ஆசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    • மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து, யுஜிசி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
    • அக்டோபர் 30ம் தேதிக்குள் விலகும் மாணவர்களிடம் ரூ.1000 சேவை கட்டணம் பிடித்தம் செய்ய வேண்டும்.

    புதுடெல்லி:

    நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்து பின்னர் விலகும் மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்ளாக கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்றும், அக்டோபர் 30ம் தேதிக்குள் கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களிடம் ரூ.1000 சேவை கட்டணம் பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.

    மாணவர் சேர்க்கையை ரத்து செய்த பிறகும் அல்லது கல்லூரியில் இருந்து விலகிய பிறகும் உயர் கல்வி நிறுவனங்கள் கட்டணத்தை திரும்ப வழங்காதது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து, இதுதொடர்பாக யுஜிசி சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 

    • நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • இணையதளம் வழியாக விண்ணப்பித்தவருக்கு முழுமையாக 4 வழிகளில் கலந்தாய்வு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆங்கிலம், கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பித்தவருக்கு முழுமையாக 4 வழிகளில் கலந்தாய்வு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

    தற்போது மேற்கண்ட பாடப்பிரிவுகளில் நிறைய காலியிடங்கள் இருப்பதால் அந்த பாடப்பிரிவினருக்கு இன ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    அந்த 6 பாடப்பிரிவுகளுக்கு மட்டும் இன்று கல்லூரியில் நேரடியாக விண்ணப்பங்களை பெற்று கல்லூரி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை பூர்த்தி செய்து வழங்கலாம்.

    இணையதளம் வழியாக விண்ணப்பித்து தாங்கள் விரும்பிய பாடப்பிரிவுகளுக்கும் இடங்களை மேற்கண்ட காலியான பாடப்பிரிவுகளுக்கு விருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்தால் அந்த பாடப்பிரிவினருக்கு தகுதியானவர்கள் இன ஒதுக்கீடு, மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் கூறியுள்ளார்.

    • தொண்டி பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது.
    • ஆசிரியைகள் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடம் கலந்துரையாடினர்.

    தொண்டி

    தொண்டியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் ஜெயந்தன் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா வரவேற்றார். பள்ளி மாணவ, மாணவிகள் அரசு பள்ளி சேர்க்கை, கல்வியின் முக்கியத்துவம் குறித்த பதாதைகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவிகளை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    மேலும் மழலையர் பள்ளி துவக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பேரீச்சம் பழம், பென்சில் கொடுத்து பள்ளி ஆசிரியைகள் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆசிரியைகள் வரவேற்றனர். பின்னர் ஆசிரியைகள் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடம் கலந்துரையாடினர்.

    • இப்பள்ளியில் பயிலும் மாணக்கர்களுக்கு விடுதியில் மூன்று வேளையும் சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன.
    • இலவச சீருடை, சிறப்பு கல்வி உபகரணங்கள், இலவச பேருந்து சலுகை, கல்வி உதவித்தெகை போன்ற அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.

    தருமபுரி, 

    தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பார்வை யற்றோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 2023-2024 ஆம் ஆண்டு மாணக்கர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள பார்வையற்றோருக்கான அரசு தொடக்கப் பள்ளியானது தருமபுரி செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைபள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளியானது 1 முதல் 5 வகுப்பு வரை ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கி பயிலும் வகையில் தனித்தனி விடுதி வசதியுடன் கூடிய பள்ளியாகும். இப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கல்வி பயின்ற ஆசிரியர்களால் கல்வி கற்பிக்கப்படுகிறது.

    இப்பள்ளியில் பயிலும் மாணக்கர்களுக்கு விடுதியில் மூன்று வேளையும் சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன.

    மேலும் இலவச சீருடை, சிறப்பு கல்வி உபகரணங்கள், இலவச பேருந்து சலுகை, கல்வி உதவித்தெகை போன்ற அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.

    மேலும் தொடர்புக்கு தலைமையாசிரியர் (பொ), அரசு பார்வைத்திறன் குறையுடையோருக்கான பள்ளி, செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், இலக்கியம்பட்டி தருமபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறும் மற்றும் 7373773486, 043432-232418 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக ்கொள்ளப்படுகிறது.

    எனவே பார்வைதிறன் குறைபாடுடைய மாணவர்கள் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்தி பள்ளியில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • பாரம்பரிய கலைகளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • இப்பள்ளி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் முழுநேரப் பள்ளியாகும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2023-24ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இது குறித்து இசைப்பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ், கிருஷ்ணகிரியில் மாவட்ட அரச இசைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பாரம்பரிய கலைகளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இப்பள்ளி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் முழுநேரப் பள்ளியாகும். 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

    பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு தேர்வுத் துறையால் தேர்வு நடத்தப்பட்டு, அரசுத் தேர்வுகள் இயக்குநரால் இசைப் பள்ளி தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் ஏதுமில்லை. சிறப்பு கட்டணமாக ஆண்டிற்கு ரூ.350 மட்டும் செலுத்த வேண்டும்.

    மாணவ, மாணவியர்களுக்கு நகரப் பேருந்தில் இலவச பேருந்து பயணச் சலுகை உண்டு. அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    தமிழகத்தின் பாரம்பரியமிக்க கலைகளை பயிலுவதற்கு உரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் சேர்ந்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.

    இப்பள்ளியில் சேர விரும்புவோர் உடனடியாக தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், திருமலை நகர் ராமாபுரம், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவர் சேர்க்கைக் குறைவு என்ற ஒற்றைக் காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு பட்டப்படிப்புகளை நிறுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது
    • அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு கணிதம் தான் அடிப்படை ஆகும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மாணவர் சேர்க்கை குறைந்ததைக் காரணம் காட்டி, 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளம் அறிவியல் (பி.எஸ்சி) கணிதம் பட்டப்படிப்பையும், ஒரு கல்லூரியில் இயற்பியல் படிப்பையும், இன்னொரு கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் படிப்பையும் நிறுத்துவதற்கும், அவற்றுக்கு மாற்றாக மாணவர்களிடம் அதிக வரவேற்பு உள்ள புதிய பட்டப்படிப்புகளை தொடங்குவதற்கும் கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அனுமதி அளித்திருக்கிறது.

    மாணவர் சேர்க்கைக் குறைவு என்ற ஒற்றைக் காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு பட்டப்படிப்புகளை நிறுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது. மாணவர்களிடம் அதிக வரவேற்பு உள்ள, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் புதிய பட்டப்படிப்புகளைத் தொடங்குவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், அது கூடுதல் நடவடிக்கையாக இருக்க வேண்டுமே தவிர, கணிதம் பட்டப்படிப்பை மூடிவிட்டு, வேறு படிப்பை தொடங்க வேண்டிய தேவையில்லை.

    அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு கணிதம் தான் அடிப்படை ஆகும். எனவே, கணிதம் கற்றலை இனிமையாக மாற்றுவது, கணிதம் படிப்பவர்களுக்கு கூடுதல் கல்வி உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கணிதம் படிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×