search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "start direct"

    • 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம்.
    • பயிற்சியில் சேர விரும்பும் மகளிருக்கு உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை.

    கோவை,

    கோவை அரசு மகளிர் ஐ.டிஐ.-யில் நாளை முதல் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் இயங்கிவரும் அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் முன்னுரிமை விண்ணப்பதாரர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நாளை (ஜூலை 13) முதல் நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதில், 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம். இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது நேரில் வருவோருக்கு உதவி மையம் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    பயிற்சியில் சேர விரும்பும் மகளிருக்கு உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை மற்றும் சிறப்பு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. இங்கு ஓராண்டு பயிற்சிகளான டெஸ்க்டாப் பப்ளிஷிங் ஆபரேட்டர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அண்ட் புரோகிராமிங் அசிஸ்டன்ட், ஐஓடி டெக்னீ சியன் (ஹெல்த் கேர்), சூவிங் டெக்னாலஜி தொழிற்பிரிவுகளும், இரண்டு ஆண்டு பயிற்சி களான இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்பர்மே ஷன் டெக்னாலஜி, மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் டெக்னீஷியன் ெதாழிற்பி ரிவுகளும், 6 மாத கால பயிற்சியான ஸ்மார்ட் போன் டெக்னாலஜி-ஆப் டெஸ்டர் தொழிற்பிரிவும் பயிற்றுவிக்கப்படுகிறது. பயிற்சியில் தேர்ச்சி பெற்றால் மத்திய அரசின் தேசிய தொழிற்சான்றிதழ் (என்சிவிடி) வழங்கப்படும்.

    அனைத்து பயிற்சியாளர்களுக்கும் மாதம் தலா ரூ.750 உதவித்தொகை புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கு மாதம் ரூ.1,000, மடிக்கணினி, மிதி வண்டி, சீருடை, தையற்கூலி, காலணி, பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், 30 கிலோ மீட்டர் தொலைவு வரை இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படுகிறது.

    இதுதவிர நவீன தொழிற்வளர்ச்சியை அறிந்து கொள்ளும் பொருட்டு இன்டர்ன்ஷிப் பயிற்சி, தொழில்நிறுவ னங்களை பார்வையிடுதல் போன்றவை ஏற்பாடு செய்யப்படுகிறது. பயிற்சி முடியும் தருவாயில் வளாக நேர்காணல் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×