search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயக்கம்"

    • கல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
    • தக்கலை அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.

    கன்னியாகுமரி:

    திருநெல்வேலி மாவட்டம் பணகுடி சர்வோதயா தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52).

    இவர் தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு கல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்ட முருகன் தக்கலை அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று மாலை ஊருக்கு செல்வதாக கூறி மருத்துவ மனையில் இருந்து வீட்டிற்கு புறப்பட்ட அவர் தக்கலை பஸ் நிலையம் வந்தபோது மயங்கி விழுந்தார்.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் தக்கலை போலீசார் விரைந்து சென்று முருகனை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக தக்கலை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 7-ம் வகுப்பு மாணவி பள்ளியின் அருகே உள்ள சாலையோர கடையில் குளிர்பானம் வாங்கி குடித்தார். திடீரென அந்த மாணவி மயக்கமடைந்தார்.
    • இதனால் அரசு பெண்கள் பள்ளி எதிரே சாலையோர கடைகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 7-ம் வகுப்பு மாணவி பள்ளியின் அருகே உள்ள சாலையோர கடையில் குளிர்பானம் வாங்கி குடித்தார்.

    இந்த நிலையில் பள்ளிக்குள் சென்ற மாணவி சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். மாணவியை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எடப்பாடி தாசில்தார் லெனின் மற்றும் நகராட்சி அதிகாரிகள், போலீசார் மாணவியிடம் விசாரித்தனர். தொடர்ந்து அவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

    கடைகள் அகற்றம்

    இதனை தொடர்ந்து நகராட்சி அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், மாணவி குளிர்பானம் வாங்கி குடித்த பள்ளி அருகே சந்தை திடலில் சாலையோர கடை மற்றும் பல்வேறு கடைகளில் சோதனை நடத்தினர். அங்கு ரூ.2, ரூ.5, ரூ.10 விலையில் கலர் குளிர்பானங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிறமூட்டி குளிர்பானங்கள் விற்க அரசால் அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதி பெறாமல் குளிர்பானங்கள் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த அந்த குளிர்பானங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் நகராட்சி ஊழியர்கள், அங்கிருந்த கடைகளை அகற்றினர். கடை உரிமையாளர்களிடம் இனிமேல் இங்கு கடை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    கைப்பற்றப்பட்ட கலர் குளிர்பானங்கள் தரம் இல்லாதவை. உள்ளூரில் தயாரிக்கப்பட்டவை. இந்த குளிர்பானங்கள் தயாரித்தவர்கள் யார்? விற்பனைக்கு பயன்படுத்திய வாகனங்கள்? எங்கு வைத்து தயாரிக்கிறார்கள்? என்பது பற்றி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    • ஒரு தென்னைமரத்தில் கதண்டுகள் கூடு கட்டி இருந்த நிலையில் ஆடுகள் கீழே மேய்ந்தன.
    • இதில் வண்டுகள் ஆடுகளை கடித்தது ஆடு கத்திய படி இறந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை தெருவைச் சேர்ந்த சுந்தர் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள, வடகோவனூர் மேலத்தெருவில் உள்ளது.

    இந்த தென்னந்தோப்பில் உள்ள ஒரு தென்னைமரத்தில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தது. இந்த நிலையில், அந்த தென்னை தோப்பையொட்டி உள்ள வயலில் 7 ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது கதண்டுகள் கூடு கட்டியிருந்த தென்னை மரத்தில் இருந்த ஒரு மட்டை காற்றில் பறந்து கீழே விழுந்தது. இதனால் கதண்டுகள் நாலாபக்கமும் சிதறி பறந்து அங்கு மேய்ந்து கொண்டிருந்த 7 ஆடுகளையும் கடித்தது.

    இதில் ஆடுகள் வலியால் துடிதுடித்து கத்தியபடியே கீழே விழுந்தது. பின்னர், உடனடியாக, கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயங்கி விழுந்த ஆடுகளை மீட்டனர். இதை தொடர்ந்து 7ஆடுகளுக்கும் கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ஒரு ஆடு இறந்தது.

    இதையடுத்து இரவு நேரத்தில் தீயணைப்பு வீரர்கள்தென்னை மட்டையில் கூடு கட்டி இருந்த கதண்டுகளை தீயிட்டு அழித்தனர்.

    • மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டார்.
    • மயங்கி கிடந்தவரை உடனடியாக சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள வீராஞ்சேரி மெயின் ரோட்டில் வசிப்பவர் கோவிந்தராஜ் மகன் முருகானந்தம் (வயது 45) விவசாயி.

    இவருக்கு சரிதா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளன.

    விவசாயி முருகானந்தத்திற்கு நீண்ட நாளாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் மணமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது வயலுக்கு அடிக்க வைத்திருந்த விஷப்பூச்சி மருந்து குடித்து விட்டார்.

    மயங்கி கிடந்தவரை வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகானந்தம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து அவரது மனைவி சரிதா கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜகமல், சிறப்பு

    சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
    • சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவா ஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் முருகவேல் (வயது 55) விவசாயி.

    இவர் கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

    அக்கம் பக்கத்தினர் முருகவேலை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி முருகவேல் உயிரிழந்தார்.

    இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார்.
    • திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆத்தூர் பஸ்கள் நிற்கும் இடத்தில் கடந்த 2-ந்தேதி சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார். இதனை கண்டவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 12-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக பெரம்பலூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் அகிலன் பெரம்பலூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சியப்பன் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


    • நாகர்கோவிலில் மனு கொடுக்க வந்த போது பரிதாபம்
    • கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்து செல்கிறார்கள்.மனு கொடுக்க வருபவர்கள் சிலர் தற்கொலைக்கு முயலும் சம்பவங்களும் நடந்து வந்ததையடுத்து கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களை போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பி வைத்து வருகிறார்கள்.

    இன்று காலையில் மனுகொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். போலீசார் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்தனர்.மனு கொடுக்க வந்த முதியவர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அந்த முதியவரை அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவகத்தில் மீன் சாப்பாடு சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது
    • பாதிக்கப் பட்டவர்களுக்கு நல்ல முறையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

    நாகர்கோவில்:

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கீழப்பெருவிளையை சேர்ந்த பணி அடிமை, சுஜில் வாத்தியார்விளையை சேர்ந்த அஜித், வடசேரியை சேர்ந்த ஆனந்த் ஆகியோர் உணவு சாப்பிட்டனர். சாப்பிட்டு சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்கள் 4 பேரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 4 பேரையும் நேரில் பார்த்து உடல் நலம் விசாரித்தார்.

    பின்னர் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து டாக்டரிடம் கேட்டு அறிந்தார். பின்னர் மேயர் கூறியதாவது:-

    மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவகத்தில் மீன் சாப்பாடு சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் ஆய்வு செய்ததாக கூறினார்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல முறையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஆய்வின் போது மருத்துவக் கல்லூரி முதல் வர் திருவாசக மணி, மருத்துவமனை கண்காணிப்பாளர் அருள் பிரகாஷ், உறைவிட மருத்துவர் விஜயலட்சுமி, துணை உறைவிட மருத்துவர் ரெனிமோள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கவிமணி பள்ளியில் அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு
    • சிகிச்சையில் இருந்த 21 பேர் டிஸ்சார்ஜ் ; 4 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டாரில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது.

    இங்கு ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் நேற்று மதியம் மாணவிகளுக்கு சாதம், சாம்பார், அவித்த முட்டை ஆகியவை மதிய உணவாக வழங்கப்பட்டது. மாணவிகள் சாப்பிட்ட சிறிது நேரத்தில் சில மாணவி களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து வாந்தி மயக்கம் எடுத்த மாணவிகளை 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனும தித்தனர். 25 மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான பெற்றோர் பள்ளியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கலெக்டர் அரவிந்த், முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை சந்தித்து அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் நலம் விசாரித்தனர். நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை சந்தித்து பேசினார்.

    மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார். மாணவிகள் மதிய உணவு சாப்பிட்டதில் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.குமரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை எடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் என அனைவரும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர் .

    மாணவிகள் சாப்பிட்ட உணவு பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு உள்ளது. மாணவிகள் சாப்பிட்ட உணவில் வண்டு கிடந்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிைலயில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 25 மாணவிகளில் 21 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதை எடுத்து தற்போது 4 மாணவிகள் மட்டுமே ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். 4 மாணவிகளையும் டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் கல்வி அதிகாரிகளும் இன்று காலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை சந்தித்து பேசினர். மேலும் கவிமணி பள்ளியில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கவிமணி பள்ளியில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள குடிநீர் தொட்டியை பார்வையிட்டனர். அதை உடனடியாக சுத்தம் செய்ய அறிவுறுத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கவிமணி பள்ளியில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் குமரி மாவட் டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட் டுள்ளது. மதிய உணவை தயாரிக்கும்போது பின்பற்ற வேண்டிய தகவல்களை அதில் குறிப்பிட்டுள்ளனர்.

    • விழுப்புரம் அருகே இன்று 15 மாணவர்கள் தேனீக்கள் கொட்டியதில் மயக்கம் அடைந்தனர்.
    • சத்தம் கேட்டு சக ஆசிரியர்கள் விரைந்துவந்து மாணவர்களை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேர்த்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே வடவாம் பாளையத்தில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடத்தை சுற்றிலும் ஏராளமான மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த மரங்களில் தற்போது தேனீக்கள் அதிக அளவில் கூடுகட்டி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இயற்கை உபாதைக்காக மரத்தடி யில் ஒதுங்குவது உண்டு. அதன்படி இன்று காலை 9.30 மணி அளவில் மாணவர்கள் மரத்த டிக்கு சென்றனர். அப்போது அங்கிருந்து படை யெடுத்து வந்த தேனீக்கள் மாண வர்களை கொட்டியது. இதனால் அவர்கள் அலறி துடித்தனர். சிறிது நேரத்தில் 15 மாணவர்கள் தேனீக்கள் கொட்டியதில் மயங்கினர். சத்தம் கேட்டு சக ஆசிரியர்கள் விரைந்துவந்து மாணவர்களை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங் களில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலு வலர் காளிதாஸ் விரைந்து சென்று மாணவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    • செல்வகுமார் என்பவருக்கும் அவரது மனைவி சுமதிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.
    • மனவேதனையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கல்லூலி திருவாசல் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவி சுமதிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த செல்வகுமார் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வகுமார் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×