என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஸ் நிலையத்தில் இறந்து கிடந்த முருகன்
தக்கலை பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த தொழிலாளி சாவு
- கல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
- தக்கலை அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.
கன்னியாகுமரி:
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி சர்வோதயா தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52).
இவர் தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு கல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்ட முருகன் தக்கலை அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று மாலை ஊருக்கு செல்வதாக கூறி மருத்துவ மனையில் இருந்து வீட்டிற்கு புறப்பட்ட அவர் தக்கலை பஸ் நிலையம் வந்தபோது மயங்கி விழுந்தார்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் தக்கலை போலீசார் விரைந்து சென்று முருகனை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக தக்கலை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






