search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்து விவசாயி தற்கொலை
    X

    விஷம் குடித்து விவசாயி தற்கொலை

    • மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டார்.
    • மயங்கி கிடந்தவரை உடனடியாக சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள வீராஞ்சேரி மெயின் ரோட்டில் வசிப்பவர் கோவிந்தராஜ் மகன் முருகானந்தம் (வயது 45) விவசாயி.

    இவருக்கு சரிதா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளன.

    விவசாயி முருகானந்தத்திற்கு நீண்ட நாளாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் மணமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது வயலுக்கு அடிக்க வைத்திருந்த விஷப்பூச்சி மருந்து குடித்து விட்டார்.

    மயங்கி கிடந்தவரை வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகானந்தம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து அவரது மனைவி சரிதா கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜகமல், சிறப்பு

    சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×