search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேனீக்கள்"

    • தென்னை மரத்தில் பெரிய அளவில் மலைத்தேனீக்கள் கூடு இருந்தது.
    • அப்பகுதியை கடந்து செல்லும் பொது மக்கள் மற்றும் குழந்தைகளை தேனீக்கள் தீண்டி தொல்லை கொடுத்து வந்தது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர்கள் காந்தி மற்றும் சம்பத். இவர்களது விவசாய தோட்டம் அருகாமையில் உள்ளது. அதில் தென்னை மரங்கள் பயிர் செய்துள்ளார். அங்கிருந்த தென்னை மரத்தில் பெரிய அளவில் மலைத்தேனீக்கள் கூடு இருந்தது. அப்பகுதியை கடந்து செல்லும் பொது மக்கள் மற்றும் குழந்தைகளை தேனீக்கள் தீண்டி தொல்லை கொடுத்து வந்தது. மேலும் அப்பகுதிகளில் விவசாய பணியை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர்.பொதுமக்களால் தேன் கூட்டை அகற்ற முடியாததால் இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு விவசாயிகள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் நிலைய அலுவலர் வெங்கடாசலம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து வந்து தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த மலைத்தேனீக்களை தண்ணீரை பீச்சி அடித்து முழுமையாக அகற்றினார்கள் .இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • 26 பெண் தொழிலாளர்கள் மினி மேனில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்டனர்.
    • தேனீக்கள் அவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் 26 பெண்களும் காயமடைந்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபிசெட்டிபாளையம் போன்ற பகுதிகளில் தேனீக்கள் கொட்டியதில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது தொடர்கதையாகி வருகிறது. இதேபோன்று ஒரு சம்பவம் நேற்று கோபிசெட்டிபாளையம் அருகே நடந்துள்ளது. இந்த சம்பவம் வருமாறு:-

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள இண்டியன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகரடு பகுதியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஏராளமான பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று 26 பெண் தொழிலாளர்கள் மினி மேனில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்டனர். அவர்கள் மினிவேனை விட்டு கீழே இறங்கியதும் அந்தப் பகுதியில் இருந்த தேனீக்கள் திடீரென அந்த 26 பெண் தொழிலாளர்களையும் கொட்டத் தொடங்கியது. இதனால் அந்த பெண்கள் அலறடித்து ஓடினர். எனினும் தேனீக்கள் அவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் 26 பெண்களும் காயமடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர்கள் பின்னர் சிறிது நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    • தொண்டூர் ஊராட்சி பூதேரியில் கன்னிமார் கோவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அப்போது அருகில் இருந்த புதரில் இருந்து கிளம்பிய தேனீக்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களை கொட்டியது.

    விழுப்புரம்:

    வல்லம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தொண்டூர் ஊராட்சி பூதேரியில் கன்னிமார் கோவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை அதே கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது அருகில் இருந்த புதரில் இருந்து கிளம்பிய தேனீக்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களை கொட்டியது. இதனால் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் அக்கம் பக்கத்தில் சிதறி ஓடினார்கள். ஆனாலும் 26 பேரை தேனீக்கள் கொட்டியது. அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மேல்ஒலக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் .அங்கு முதலுதவி பெற்ற அவர்கள் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினார்கள்.

    • திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது தேனீக்கள் கூட்டம் பறந்து அங்கிருந்தவர்களை கொட்ட ஆரம்பித்தது.
    • பாதிக்கப்பட்டவர்கள் அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஈட்டியம்பட்டி கிராமத்தில் முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.

    இந்த திருவிழாவில் அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கிடையே அங்கிருந்த அரசமரத்தில் மலைத்தேனீக்கள் கூடு கட்டியிருந்தது.

    இந்த நிலையில் திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது தேனீக்கள் கூட்டம் பறந்து அங்கிருந்தவர்களை கொட்ட ஆரம்பித்தது. இதில் 60-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

    இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் திருப்பதி, சக்தி, மாரியப்பன், ராணி, மேனகா, பழனியம்மாள், தேவராஜன், சத்யா உள்பட 12 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். தேனீக்கள் கொட்டியவர்களும் உறவினர்களும் மருத்துவமனையில் குவிந்ததால் நேற்று அரூர் அரசு மருத்துவமனையே பரபரப்பாக காணப்பட்டது.

    • பூங்காவில் பூத்து குலுங்கிய மலர் செடிகள், இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுத்து ரசித்தபடி பூங்காவை சுற்றி வந்தனர்.
    • மரத்தில் இருந்த தேன்கூட்டம் கலைந்து பூங்கா முழுவதும் தேனீக்கள் சுற்றின.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பல்வேறு வகையிலான மலர்கள் மலர்மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர அரிய வகை மரங்களும் இங்கு உள்ளன.

    இந்த பூங்காவை சுற்றி பார்ப்பதற்காக தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றிலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்.

    இந்த நிலையில் நேற்று மாலை கோவையை சேர்ந்த லிங்கேஷ், சொக்கலிங்கம், காவ்யாராணி ஆகியோர் குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு வந்தனர்.

    அவர்கள் பூங்கா முழுவதும் சுற்றி பார்த்து விட்டு அங்கு இருந்த புல் தரையில் அமர்ந்து சிறிது நேரம் பேசினர்.

    பின்னர் பூங்காவில் பூத்து குலுங்கிய மலர் செடிகள், இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுத்து ரசித்தபடி பூங்காவை சுற்றி வந்தனர்.

    அப்போது அங்குள்ள மரத்தில் இருந்த தேன்கூட்டம் கலைந்து பூங்கா முழுவதும் தேனீக்கள் சுற்றின. இதில் எதிர்பாராத விதமாக இவர்கள் 3 பேரையும் தேனீக்கள் கொட்டி விட்டது.

    இதில் அவர்கள் 3 பேருக்கு காயம் ஏற்பட்டு வலியால் துடித்தனர். இதை பார்த்த பூங்கா ஊழியர்கள், அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று பின்னர் ஊர் திரும்பினர்.

    சிம்ஸ் பூங்காவை சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்து ரசித்த சுற்றுலா பயணிகளை தேனீக்கள் கொட்டிய சம்பவம் பூங்காவில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தேன்கூடு தானாக கலைந்ததா? அல்லது யாராவது கல்லை எறிந்து தேன் கூட்டை கலைத்து விட்டனரா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

    • வேளாண்மை துறை உதவி இயக்குனர் அருள்வடிவு தலைமை வகித்தார்.
    • வேளாண்மை உதவி அலுவலர் வினோத், அலுவலர்கள் சுஜி, அனுசியா உட்பட பலர் பேசினர்.

    அவிநாசி:

    அவிநாசி வேளாண்மை துறை சார்பில் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டம் சார்பில் அசநல்லிபாளையத்தில் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. வேளாண்மை துறை உதவி இயக்குனர் அருள்வடிவு தலைமை வகித்தார். இதில் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி கலையரசன் பேசியதாவது:-

    தேனீ வளர்ப்பின் போது புகை மூட்டி தேன் எடுப்பதை விவசாயிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். புகையில்லாமல் தேன் எடுப்பது குறித்த பயிற்சியை வழங்கி வருகிறோம். தரமான தேன் கிலோ 1,000 ரூபாய் வரை கூட விற்கப்படுகிறது. அதற்கு சந்தையில் நிலையான கிராக்கி உள்ளது.விவசாய தோட்டங்களில் தேனீ வளர்ப்பதன் மூலம் 10 முதல் 20 சதவீதம் வரை அயல் மகரந்த சேர்க்கை நடக்கும். இதனால் விவசாயிகளுக்கு தெரியாமலேயே மகசூல் அதிகரிக்கும். சாகுபடி பெருக, விவசாயிகளுக்கு மறைமுக நண்பனாக தேனீக்கள் உள்ளன. தேனீ வளர்ப்பு என்பது விவசாயத்தின் ஒரு அங்கம் என்பதை விவசாயிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். வேளாண்மை உதவி அலுவலர் வினோத், அலுவலர்கள் சுஜி, அனுசியா உட்பட பலர் பேசினர்.

    • மேல்மலையனூர் அருகே தேனீக்கள் கொட்டியதில் விவசாயி பலியானார்.
    • ஏரிக்கரையில் வரும்போது கூட்டமாக வந்த தேனீக்கள் அவரை கொட்டிவிட்டன.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே செவலபுரை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(66) விவசாயி. நேற்று முன்தினம் (5-ந்தேதி) முருகேசன் மாடுகளை மேய்த்துவிட்டு வீட்டுக்கு ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். ஏரிக்கரையில் வரும்போது கூட்டமாக வந்த தேனீக்கள் அவரை கொட்டிவிட்டன. இதனால் அலறித்துடித்த முருகேசனை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் முருகேசன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழுப்புரம் அருகே இன்று 15 மாணவர்கள் தேனீக்கள் கொட்டியதில் மயக்கம் அடைந்தனர்.
    • சத்தம் கேட்டு சக ஆசிரியர்கள் விரைந்துவந்து மாணவர்களை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேர்த்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே வடவாம் பாளையத்தில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடத்தை சுற்றிலும் ஏராளமான மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த மரங்களில் தற்போது தேனீக்கள் அதிக அளவில் கூடுகட்டி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இயற்கை உபாதைக்காக மரத்தடி யில் ஒதுங்குவது உண்டு. அதன்படி இன்று காலை 9.30 மணி அளவில் மாணவர்கள் மரத்த டிக்கு சென்றனர். அப்போது அங்கிருந்து படை யெடுத்து வந்த தேனீக்கள் மாண வர்களை கொட்டியது. இதனால் அவர்கள் அலறி துடித்தனர். சிறிது நேரத்தில் 15 மாணவர்கள் தேனீக்கள் கொட்டியதில் மயங்கினர். சத்தம் கேட்டு சக ஆசிரியர்கள் விரைந்துவந்து மாணவர்களை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங் களில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலு வலர் காளிதாஸ் விரைந்து சென்று மாணவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    வாழப்பாடி தொழிலதிபரின் வீட்டில் 2 மணிநேரத்தில் வீட்டு சமையலறையிலும், நுழைவுவாயில் தூணிலும் 2 ராட்சத கூடுகளை கட்டிய தேனீக்கள்.

     வாழப்பாடி:

    வாழப்பாடி எழில் நகரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில், கட்டுமான தொழிலதிபர் தேவராஜன் என்பவரின் பங்களா வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டிற்குள், நேற்று பகல் 12 மணி அளவில் திடீரென படையெடுத்து வந்த ஆயிரக்கணக்கான தேனீக்கள், வீட்டு சமையலறையிலும், நுழைவுவாயில் தூணிலும் 2 ராட்சத கூடுகளை கட்டின.

    இதனைக்கண்ட தொழிலதிபர் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக 2 மணி நேரத்திற்குப் பிறகு, தேன் கூடுகள் இருந்த சுவடே தெரியாத அளவுக்கு கூடுகளை காலி செய்து கொண்டு வெளியேறின. குடியிருப்பு பகுதியில் வீட்டிற்குள் ராட்சத தேனீக்கள் திடீரென படையெடுத்து வந்த கூடுகட்டியதும், 2 மணி நேரத்திற்குப் பிறகு தானாக கலைந்து சென்றதும் இப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து வனத்து–றையினர் மற்றும் தீயணைப்பு படையினர் கூறுகையில், ஆள்நடமாட்டம் குறைவாகவும், அமைதியாக காணப்படும் உயரமான கட்டிடங்களில் ராட்சத தேனீக்கள் கூடு கட்டுவது வாடிக்கை தான். வசிப்பதற்கேற்ப சூழல் இல்லையெனில் தேனீக்கள் உடனடியாக வெளியேறி விடும். அதன்படியே வாழப்பாடி தொழிலதிபர் வீட்டில் 2 மணிநேரத்திற்குள் ராட்சத கூடு கட்டிய தேனீக்கள், அதே வேகத்தில் வெளியேறிவிட்டது என்றனர்.

    ×