search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிய"

    வாழப்பாடி தொழிலதிபரின் வீட்டில் 2 மணிநேரத்தில் வீட்டு சமையலறையிலும், நுழைவுவாயில் தூணிலும் 2 ராட்சத கூடுகளை கட்டிய தேனீக்கள்.

     வாழப்பாடி:

    வாழப்பாடி எழில் நகரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில், கட்டுமான தொழிலதிபர் தேவராஜன் என்பவரின் பங்களா வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டிற்குள், நேற்று பகல் 12 மணி அளவில் திடீரென படையெடுத்து வந்த ஆயிரக்கணக்கான தேனீக்கள், வீட்டு சமையலறையிலும், நுழைவுவாயில் தூணிலும் 2 ராட்சத கூடுகளை கட்டின.

    இதனைக்கண்ட தொழிலதிபர் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக 2 மணி நேரத்திற்குப் பிறகு, தேன் கூடுகள் இருந்த சுவடே தெரியாத அளவுக்கு கூடுகளை காலி செய்து கொண்டு வெளியேறின. குடியிருப்பு பகுதியில் வீட்டிற்குள் ராட்சத தேனீக்கள் திடீரென படையெடுத்து வந்த கூடுகட்டியதும், 2 மணி நேரத்திற்குப் பிறகு தானாக கலைந்து சென்றதும் இப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து வனத்து–றையினர் மற்றும் தீயணைப்பு படையினர் கூறுகையில், ஆள்நடமாட்டம் குறைவாகவும், அமைதியாக காணப்படும் உயரமான கட்டிடங்களில் ராட்சத தேனீக்கள் கூடு கட்டுவது வாடிக்கை தான். வசிப்பதற்கேற்ப சூழல் இல்லையெனில் தேனீக்கள் உடனடியாக வெளியேறி விடும். அதன்படியே வாழப்பாடி தொழிலதிபர் வீட்டில் 2 மணிநேரத்திற்குள் ராட்சத கூடு கட்டிய தேனீக்கள், அதே வேகத்தில் வெளியேறிவிட்டது என்றனர்.

    ×