search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேனீக்கள்"

    • தென்னை மரத்தில் பெரிய அளவில் மலைத்தேனீக்கள் கூடு இருந்தது.
    • அப்பகுதியை கடந்து செல்லும் பொது மக்கள் மற்றும் குழந்தைகளை தேனீக்கள் தீண்டி தொல்லை கொடுத்து வந்தது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர்கள் காந்தி மற்றும் சம்பத். இவர்களது விவசாய தோட்டம் அருகாமையில் உள்ளது. அதில் தென்னை மரங்கள் பயிர் செய்துள்ளார். அங்கிருந்த தென்னை மரத்தில் பெரிய அளவில் மலைத்தேனீக்கள் கூடு இருந்தது. அப்பகுதியை கடந்து செல்லும் பொது மக்கள் மற்றும் குழந்தைகளை தேனீக்கள் தீண்டி தொல்லை கொடுத்து வந்தது. மேலும் அப்பகுதிகளில் விவசாய பணியை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர்.பொதுமக்களால் தேன் கூட்டை அகற்ற முடியாததால் இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு விவசாயிகள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் நிலைய அலுவலர் வெங்கடாசலம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து வந்து தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த மலைத்தேனீக்களை தண்ணீரை பீச்சி அடித்து முழுமையாக அகற்றினார்கள் .இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    வாழப்பாடி தொழிலதிபரின் வீட்டில் 2 மணிநேரத்தில் வீட்டு சமையலறையிலும், நுழைவுவாயில் தூணிலும் 2 ராட்சத கூடுகளை கட்டிய தேனீக்கள்.

     வாழப்பாடி:

    வாழப்பாடி எழில் நகரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில், கட்டுமான தொழிலதிபர் தேவராஜன் என்பவரின் பங்களா வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டிற்குள், நேற்று பகல் 12 மணி அளவில் திடீரென படையெடுத்து வந்த ஆயிரக்கணக்கான தேனீக்கள், வீட்டு சமையலறையிலும், நுழைவுவாயில் தூணிலும் 2 ராட்சத கூடுகளை கட்டின.

    இதனைக்கண்ட தொழிலதிபர் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக 2 மணி நேரத்திற்குப் பிறகு, தேன் கூடுகள் இருந்த சுவடே தெரியாத அளவுக்கு கூடுகளை காலி செய்து கொண்டு வெளியேறின. குடியிருப்பு பகுதியில் வீட்டிற்குள் ராட்சத தேனீக்கள் திடீரென படையெடுத்து வந்த கூடுகட்டியதும், 2 மணி நேரத்திற்குப் பிறகு தானாக கலைந்து சென்றதும் இப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து வனத்து–றையினர் மற்றும் தீயணைப்பு படையினர் கூறுகையில், ஆள்நடமாட்டம் குறைவாகவும், அமைதியாக காணப்படும் உயரமான கட்டிடங்களில் ராட்சத தேனீக்கள் கூடு கட்டுவது வாடிக்கை தான். வசிப்பதற்கேற்ப சூழல் இல்லையெனில் தேனீக்கள் உடனடியாக வெளியேறி விடும். அதன்படியே வாழப்பாடி தொழிலதிபர் வீட்டில் 2 மணிநேரத்திற்குள் ராட்சத கூடு கட்டிய தேனீக்கள், அதே வேகத்தில் வெளியேறிவிட்டது என்றனர்.

    ×