search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேல்மலையனூர் அருகே தேனீக்கள் கொட்டியதில் விவசாயி சாவு
    X

    மேல்மலையனூர் அருகே தேனீக்கள் கொட்டியதில் விவசாயி சாவு

    • மேல்மலையனூர் அருகே தேனீக்கள் கொட்டியதில் விவசாயி பலியானார்.
    • ஏரிக்கரையில் வரும்போது கூட்டமாக வந்த தேனீக்கள் அவரை கொட்டிவிட்டன.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே செவலபுரை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(66) விவசாயி. நேற்று முன்தினம் (5-ந்தேதி) முருகேசன் மாடுகளை மேய்த்துவிட்டு வீட்டுக்கு ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். ஏரிக்கரையில் வரும்போது கூட்டமாக வந்த தேனீக்கள் அவரை கொட்டிவிட்டன. இதனால் அலறித்துடித்த முருகேசனை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் முருகேசன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×