search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்தவர் சாவு
    X

    பெரம்பலூர் பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்தவர் சாவு

    • பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார்.
    • திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆத்தூர் பஸ்கள் நிற்கும் இடத்தில் கடந்த 2-ந்தேதி சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார். இதனை கண்டவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 12-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக பெரம்பலூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் அகிலன் பெரம்பலூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சியப்பன் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


    Next Story
    ×