search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷ வண்டுகள்"

    • அந்த ரப்பர் மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தது.
    • திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    திருவட்டார் :

    திருவட்டார் அருகே கொசுவன்பிலாவிளை மாத்தார் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் (வயது 53), கட்டிட தொழிலாளி.

    இவர் தனது தம்பியின் பக்கத்து வீட்டின் மாடியில் சாய்ந்து கிடந்த ரப்பர் மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றுவதற்காக சென்றார். அந்த ரப்பர் மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தது.

    இதை பார்க்காமல் கிறிஸ்துராஜ் மரத்தின் கிளைகளை வெட்டும்போது இவர் மீது விஷ வண்டுகள் கொட்டியது. இதில் இவரின் உடல் முழுவதும் வீக்கம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கிறிஸ்துராஜ் பரிதாபமாக இறந்தார். இவரது மகன் ஸ்டாலின் கொடுத்த புகாரின் பேரின் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • தீயணைப்பு வீரர்கள் அழித்தனர்
    • தென்னை மரத்தில் விஷ பூச்சிகள் கூடு கட்டியிருந்தது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூர் மேல்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமான தென்னை மரத்தில் விஷ பூச்சிகள் கூடு கட்டி உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் பொது மக்களை விஷ வண்டுகள் அச்சு றுத்தி வந்தன. இதனையடுத்து முருகேசன் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சென்று தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை தீ பந்தம் மூலம் அழித்த னர். மேலும் நாட்டறம்பள்ளி அடுத்த தகரகுப்பம் பகுதியை சேர்ந்த சத்யராஜ் என்பவரது வீட்டின் அருகே மலை பாம்பு ஒன்றையும் தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையினரி டம் ஒப்படைத்தனர்.

    • வாழை இலைகள் வெட்டுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு சென்றுள்ளார்.
    • புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே கிள்ளியூர் பகுதி வாறுவிளையை சேர்ந்தவர் ஜாண்றோஸ். இவரது மனைவி சாரதா (65).

    இவர் வீட்டில் வாத்துகள் வளர்த்து வருகிறார். சம்பவ தினம் சாரதா வாத்துகளின் தீவனத்துக்காக வாழை இலைகள் வெட்டுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு சென்றுள்ளார்.

    அங்கு இலைகளை வெட்டும் போது, வாழை மரத்தில் விஷ வண்டுகள் (கடந்தை) கூடு கட்டி யிருந்துள்ளது. இதை கவனிக்காமல் சாரதா இலை வெட்டிய போது, விஷ வண்டுகள் அவரை கொட்டியதில் படுகாய மடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, குலசேக ரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சாரதா உயிரிழந்தார். இது தொடர்பாக சாரதா மகன் ஜாண் ஜெயசிங் என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.]

    • வீட்டின் பின் புறத்தில் உள்ள சுமார் 8 அடி உயரம் உள்ள மா மரத்தில், கதண்டு விஷ வண்டுகள் கூடு கட்டி உள்ளது.
    • அந்த வழியாக செல்லும் பொதுமக்களை தினந் தோறும் அச்சுறுத்தி வந்தது.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே, கோவி லானூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் வியாபாரி மைக்கேல் ராயன் (வயது.60). இவரது வீட்டின் பின் புறத்தில் உள்ள சுமார் 8 அடி உயரம் உள்ள மா மரத்தில், கதண்டு விஷ வண்டுகள் கூடு கட்டிக்கொண்டு, அவரது வீட்டில் உள்ள வர்கள், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை தினந் தோறும் அச்சுறுத்தி வந்தது. இது குறித்து, மங்கலம் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் பாண்டியன், முஹமது புன்யாமீன், சிவசங்கரன், அன்புமணி, அருள்செல்வன், பார்த்திபன், ராஜதுரை ஆகியோர் அங்கு விரைந்து சென்று, விஷ வண்டு கூட்டினை முற்றிலும் அப்புறப் படுத்தினர்.

    • கோபுரத்தில் ஏராளமான விஷ வண்டுகள் கூடு கட்டி உள்ளது.
    • வண்டுகள் கோவிலுக்கு வரும் பக்தர் களை அச்சுறுத்தியதோடு அடிக்கடி கடித்தும் வந்தன.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தின மும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்த கோவிலின் பிரதான நுழைவு வாசலான வடக்கு வாசலில் கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தில் ஏராளமான விஷ வண்டுகள் கூடு கட்டி உள்ளது. இந்த வண்டுகள் கோவிலுக்கு வரும் பக்தர் களை அச்சுறுத்தியதோடு அடிக்கடி கடித்தும் வந்தன.

    இது பற்றி கோவில் நிர்வாகத்தினர் கன்னியா குமரி தீயணைப்பு நிலை யத்துக்கு தகவல் தெரிவித்த னர். அதன் பேரில் நிலைய அலுவலர் ஆரோக்கியதாஸ் உத்தரவின் பேரில் தீய ணைக்கும் படை வீரர்கள், ஆறுமுக பெருமாள் தலை மையில் விரைந்து வந்தனர்.

    அவர்கள் பல மணி நேரம் போராடி கோபுரத்தில் கூடு கட்டி இருந்த விஷ வண்டுகளை தீ வைத்து அழித்தனர்.

    • ஒரு தென்னைமரத்தில் கதண்டுகள் கூடு கட்டி இருந்த நிலையில் ஆடுகள் கீழே மேய்ந்தன.
    • இதில் வண்டுகள் ஆடுகளை கடித்தது ஆடு கத்திய படி இறந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை தெருவைச் சேர்ந்த சுந்தர் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள, வடகோவனூர் மேலத்தெருவில் உள்ளது.

    இந்த தென்னந்தோப்பில் உள்ள ஒரு தென்னைமரத்தில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தது. இந்த நிலையில், அந்த தென்னை தோப்பையொட்டி உள்ள வயலில் 7 ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது கதண்டுகள் கூடு கட்டியிருந்த தென்னை மரத்தில் இருந்த ஒரு மட்டை காற்றில் பறந்து கீழே விழுந்தது. இதனால் கதண்டுகள் நாலாபக்கமும் சிதறி பறந்து அங்கு மேய்ந்து கொண்டிருந்த 7 ஆடுகளையும் கடித்தது.

    இதில் ஆடுகள் வலியால் துடிதுடித்து கத்தியபடியே கீழே விழுந்தது. பின்னர், உடனடியாக, கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயங்கி விழுந்த ஆடுகளை மீட்டனர். இதை தொடர்ந்து 7ஆடுகளுக்கும் கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ஒரு ஆடு இறந்தது.

    இதையடுத்து இரவு நேரத்தில் தீயணைப்பு வீரர்கள்தென்னை மட்டையில் கூடு கட்டி இருந்த கதண்டுகளை தீயிட்டு அழித்தனர்.

    ×