search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயக்கம்"

    • அமுதவல்லி அதே பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
    • அங்கிருந்து புதுவை ஜிப்மர் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் .

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே உள்ள காட்டு கொள்ளை செய்யாங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணு. கூலித் தொழிலாளி. இவரது மனைவி அமுதவல்லி (வயது 55) இவர் நேற்று மதியம்அதே பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அந்த கிராமத்தில் ஒரே ஒரு ரேஷன் கடை மட்டுமே உள்ளது இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது இதன் காரணமாக அமுதவல்லி கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் வரிசையில் நின்று ள்ளார். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது .

    இது பற்றி தகவல் அறிந்த அவரது மகன் ஆனந்த் தனது தாயை ரேஷன் கடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மயக்கம் அதிகமானதால் அமுதவல்லி மோட்டார் சைக்களில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரது உறவினர்கள் அவரை புதுவை கனக செட்டி குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை அளித்து ள்ளனர். அங்கிருந்து புதுவை ஜிப்மர் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு சிகிச்சை பலனின்றி அமுதவல்லி பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • இன்று காலை காட்டுச் சிவிரி ஏரிக்கரையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வந்துள்ளனர்.
    • அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள காட்டுச்சிவிரி கிராமத்தில் ஏராளமான பெண்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இன்று காலை காட்டுச் சிவிரி ஏரிக்கரையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது புதர் பகுதியை தூய்மை செய்ய முயன்றுள்ளனர். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அங்கு இருந்து வெளியேறிய விஷ தேனீக்கள் அங்கு பணிபுரிந்து வந்த பெண்களை விரட்டி விரட்டி கொட்ட ெதாடங்கியது.இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தேனீக்கள் கொட்டியதால் காயமடைந்துள்ளனர்.இதன் காரணமாக அவர்கள் வலி தாங்க முடியாமல் அலற தொடங்கினர்.

    சில பெண்கள் மயக்கம் அடைந்து விழுந்தனர்.இதையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் அனைவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச் சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திண்டிவனம் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் படுக்கை கிடைக்காமல் காயமடைந்தவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய 50-க்கும் மேற்பட்ட பெண்கள் விஷத்தேனீக்கள் கொட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • செந்தில்குமார் ராமலிங்கத்தை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
    • வயலுக்கு சென்ற ராமலிங்கம் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் அடுத்த மனக்குன்னம் மேல தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 45). கூலி தொழிலாளி. இவரது மனைவி காந்திமதி.இவரது எதிர்வீட்டில் செந்தில்குமார் (41) என்பவர் வசித்து வருகிறார்.

    இவர் வீட்டில் வளர்க்கும் ஆடுகள் அடிக்கடி ராமலிங்கம் வீட்டிற்கு சென்று பூச்செடிகளை மேய்ந்து விடுவது வழக்கம்.

    இதனையடுத்து, நேற்றும் அதேபோல் ஆடுகள் பூச்செடிகளை மேய்ந்த போது ராமலிங்க மும், அவரது மனைவியும், செந்தில்குமாரை சத்தம் போட்டுள்ளனர். மேலும், ஆடுகளை கட்டிப்போட்டு வளர்க்கும்படி கூறியுள்ளனர்.

    இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் ராமலிங்கத்தை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், இருவருக்கும் தகராறும் ஏற்பட்டுள்ளது.

    பின்னர், வயலுக்கு சென்ற ராமலிங்கம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பனந்தாள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எதிர்பாராத விதமாக பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து, ராமலிங்கம் மனைவி கொடுத்த புகாரின் பேரில் பந்தநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      ராசிபுரம்:

      நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் குருசாமிபாளையத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி உள்ளனர்.

      நேற்று 24 மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்தனர். இவர்களுக்கு காலையில் முள்ளங்கி சாம்பார் சாதம் போடப்பட்டு உள்ளது. இதனை சாப்பிட்டு விட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.

      இந்த நிலையில், விடுதியில் சாப்பிட்டு சென்ற மாணவர்களில் சிலருக்கு வயிற்று வலி ஏற்பட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக பாதிக்கப்பட்ட 9 மாணவர்களை பிள்ளால்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

      மாணவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பிள்ளா நல்லூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் தவசீலன் தலைமையில் விடுதியில் தங்கி இருந்த மற்ற மாணவர்கள் மற்றும் பள்ளிக்குச் சென்றிருந்த மாணவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

      கெட்டுப்போன உணவு காரணமாக மாணவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டி ருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதனிடையே தரமற்ற உணவு வழங்கியதால் மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக பொது மக்கள் குற்றம்சாட்டினர்.

      இதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஆதிதிரா விடர் நல அதிகாரி சுகந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை பார்த்து நலம் விசாரித்தார். மேலும் அவர் விடுதிக்குச் சென்று விசாரணை நடத்தினார். ராசிபுரம் ஒன்றிய குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், பிள்ளாநல்லூர் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் சிகிச்சை பெரும் மாணவர் களை சந்தித்து நலம் விசாரித்தனர்.

      அதேபோல் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் டாக்டர் சரோஜா, மாணவர்களை சந்தித்து பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தார். மேலும் பிஸ்கட், பழங்கள் கொடுத்து நலம் விசாரித்தார். அவர் மாணவர்கள் தங்கி இருந்த விடுதிக்குச் சென்று அவர்களுக்கு வழங்கப்படும் உணவு போன்றவற்றை பரிசோதித்தார். ராசிபுரம் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் வேம்பு சேகரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் பிள்ளாநல்லூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் தனபால், ராமசாமி ஆகியோரும் சென்று நலம் விசாரித்தனர்.

      • வயலில் பருத்தி எடுக்கும் பணியில் அந்த பெண் ஈடுபட்டுள்ளார்.
      • பாம்பு கடித்து அவர் வயலில் மயங்கி கிடந்துள்ளார்.

      நாகப்பட்டினம்:

      திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடி நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால்.

      இவரது மனைவி ஜெயா (வயது 42).விவசாய கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள வயலில் பருத்தி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

      அப்போது அவரை பாம்பு கடித்து அவர் வயலில் மயங்கி கிடந்துள்ளார்.

      இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஜெயாவை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

      பின்னர் மேல் சிகிச்சைக்கு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

      ஜெயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

      இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

      • பைபர் படகில், மூன்று மீனவர்களுடன் சம்பா நண்டு பிடிக்க சென்றுள்ளார்.
      • திடீரென மயங்கி நிலையில் கடலில் மூழ்கி கிடந்துள்ளார் கரைக்கு சென்ற போது இறந்து விட்டது தெரியவந்தது.

      பேராவூரணி:

      தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே வல்லவன்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 54).

      இவர் நேற்று (புதன்கிழமை) காலை பைபர் படகில், மூன்று மீனவர்களுடன் சம்பா நண்டு பிடிக்க சென்றுள்ளார்.

      சுமார் 2 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில், சேகர் கடலில் இறங்கி சம்பா நண்டு பிடிப்பதற்காக வலையை இறக்கிக் கொண்டு இருந்துள்ளார். சேகருடன் வந்த மீனவர்கள் வேறு பக்கம் வலையை கடலில் இறக்கிக் கொண்டு இருந்தனர்.

      அவர்கள் படகுக்கு திரும்பிய நிலையில், சேகர் வலையை இறக்கிய பகுதியில் பார்த்த போது, மயங்கி நிலையில், கடலில் மூழ்கி கிடந்துள்ளார்.

      உடனடியாக சக மீனவர்கள் அவரை மீட்டு, கரைக்கு கொண்டு வந்து பார்த்த போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

      இதுகுறித்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் கடலோர காவல்துறை ஆய்வாளர் மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சேகர் உடலை கைப்பற்றி, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

      இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • கீரையை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மூதாட்டி வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தார்.
      • வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      வால்பாறை,

      வால்பாறை அருகே மானாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 62). இவர் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

      இந்நிலையில் வழக்கம்போல் விஜயலட்சுமி தோட்டத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் காட்டில் இருந்த ஒருவகை கீரையை பிடுங்கி விட்டு, வீட்டிற்கு கொண்டு வந்து சமைத்து சாப்பிட்டார்.

      கீரையை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்து, மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

      அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • திருச்சி வண்ணாங்கோவில் அருகே தார் உற்பத்தி ஆலையின் புகை மூட்டத்தால் 10 பேர் மயக்கம் அடைந்தனர்
      • அரசு மருத்துவமனையில் சிகிச்சை

      திருச்சி:

      திருச்சி வண்ணாங்கோவில் அருகே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனியார் தார் உற்பத்தி ஆலைஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தார் உற்பத்தி ஆலையில் அவ்வபோது மிகவும் கடுமையான புகை மூட்டத்துடன் கரும்புகை வெளி வருகிறது.இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிக்கடி சுவாசக் கோளாறுகள் ஏற்படுவது உடன் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று ஏற்பட்ட புகை மூட்டத்தின் காரணமாக வண்ணாங் கோயில் திருநகர் பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது.

      இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் வாயிலாக அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இதில் 3 பேருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




      • திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
      • சிகிச்சை பலனின்றி ரமணி பரிதாபமாக இறந்தார்.

      தஞ்சாவூர்:

      தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை அனில்நகரை சேர்ந்தவர் ரமணி (வயது 50). இவர் சி.ஆர்.சி போக்குவரத்து துறையில் கேசியராக வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றிருந்தார்.

      இந்த நிலையில் நேற்று மாலை தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமணி பரிதாபமாக இறந்தார்.

      இது குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • வாலிபர்கள் இருவரும் கடையிலேயே கேக்கை சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் இருவருக்கும் வாந்தி, வயிற்று வலி, மயக்கம் ஏற்பட்டது.
      • அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட ராஜேஷ், சக்திவேலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

      காஞ்சிபுரம்:

      காஞ்சிபுரம் அடுத்த ஏகனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ் (18), சக்திவேல் (20). இவர்கள் இருவரும் தங்களது சித்தி மகளின் பிறந்தநாளுக்காக கருக்குப்பேட்டை பஸ் நிலையம் அருகே உள்ள பேக்கரி கடையில் கேக் வாங்கி இருந்தனர்.

      அவர்கள் பிறந்தநாள் விழாவை உற்சாகத்துடன் கொண்டாடி கேக்கை வெட்ட முயன்றனர். அப்போது வெட்ட முடியாத அளவுக்கு கேக் மிகவும் கடினமாக இருந்ததாக தெரிகிறது.

      இதையடுத்து ராஜேசும், சக்திவேலும் அந்த கேக்கை எடுத்துக்கொண்டு பேக்கரி கடைக்கு சென்று இது குறித்து அங்கிருந்த ஊழியரிடம் தெரிவித்தனர்.

      ஆனால் பேக்கரி கடை ஊழியர்கள் கேக் நன்றாக உள்ளது. இப்போதே நீங்கள் கேக்கை சாப்பிடலாம் என்று கூறினர்.

      இதையடுத்து ராஜேசும், சக்திவேலும் கடையிலேயே அந்த கேக்கை சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் இருவருக்கும் வாந்தி, வயிற்று வலி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட ராஜேஷ், சக்திவேலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

      கெட்டுப்போன கேக்கை சாப்பிட்டதால் அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      • வாந்தி, வயிற்று வலி, மயக்கம் இருந்ததாக அந்தியூர் அரசு மருத்துவமனையில் 29 மாணவர்கள் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
      • இச்சம்பவம் குறித்து அந்தியூர் தாசில்தார் மற்றும் பவானி டி.எஸ்பி. தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.

      ஆப்பக்கூடல்:

      ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி அருகே கரட்டூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 157 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

      தலைமையாசிரியர் விஜயலட்சுமி உள்பட 5 ஆசிரியர்கள் பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். கரட்டூர் பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் சமையலராக கடந்த 20 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.

      இந்நிலையில் பள்ளியில் படிக்கும் 132 மாணவ-மாணவிகள் நேற்று வழக்கம் போல 12 மணிக்கு மதிய உணவு சாப்பிட சென்றனர். வெஜிடபிள் சாப்பாடு மதிய உணவாக சமைக்கப்பட்டது.

      அப்போது ஒரு சில மாணவிகள் உணவில் ஏதோ கிடப்பதாக எடுத்து வந்து சமையலர் வள்ளியம்மாளிடம் கொடுத்த போது மீதி உள்ள உணவை யாரும் சாப்பிட வேண்டாம் என்று அவர் நிறுத்தியுள்ளார்.

      இந்நிலையில் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிய ஒரு சில மாணவ, மாணவிகள் மதிய உணவில் பல்லி கிடந்ததாக அவரவர் வீட்டில் பேசி வரும் போது வாந்தி, மயக்கம் வந்ததாக கூறப்படுகிறது.

      ஒரு சில பள்ளி குழந்தைகளை பெற்றோர்கள் அத்தாணி கருவல்வாடிபுதூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

      இத்தகவல் பரவிய நிலையில் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளை பெற்றோர்கள் கருவல்வாடிபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சை அழைத்து சென்னர்.

      இதைத்தொடர்ந்து வாந்தி, வயிற்று வலி, மயக்கம் இருந்ததாக அந்தியூர் அரசு மருத்துவமனையில் 29 மாணவ, மாணவிகள் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

      இத்தகவலறிந்த அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரித்ததோடு, குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

      பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

      இச்சம்பவம் குறித்து அந்தியூர் தாசில்தார் மற்றும் பவானி டி.எஸ்பி. தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.

      இந்த நிலையில் கரட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள பயன்படுத்தப்படும் தண்ணீர் மற்றும் மதிய உணவுகளின் மாதிரிகளை எடுத்து இந்த உணவில் விஷத்தன்மை கலந்து உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய உணவு கட்டுப்பாடு அதிகாரிகள் கோவையில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக ஆப்பக்கூடல் போலீசார் தெரிவித்தனர்.

      பரிசோதனைக்கு பின்னரே மதிய உணவில் பல்லி விழுந்து விஷம் கலந்து இருக்குமா? இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்று தெரியவரும்.

      • ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
      • கன்னியாகுமரியில் கொட்டாரம் , நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் உள்ள 3 மேல்நிலைப்பள்ளிகளுக்கு என்.சி.சி. முகாம் நடைபெற்றது.

      கன்னியாகுமரி:

      கன்னியாகுமரியில் கொட்டாரம் , நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் உள்ள 3 மேல்நிலைப்பள்ளிகளுக்கு என்.சி.சி. முகாம் நடை பெற்றது.

      முகாமில் இந்த பள்ளி களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளுக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்டவர்களில் சுமார் 43 பேர் வாந்தி, மயக்கம் எடுத்தனர். இதனால் அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 13 பேர் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

      இது குறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து சிகிச்சை பெற்று வரும் மாணவ-மாணவிகளிடம் ஆறுதல் கூறினார். அப்போது அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெஸீம், தென்தாமரைகுளம் பேரூர் செயலாளர் தாமரை தினேஷ்உள்பட பலர் உடனிருந்தனர்.

      ×