search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயங்கி விழுந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் சாவு
    X

    மயங்கி விழுந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் சாவு

    • திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
    • சிகிச்சை பலனின்றி ரமணி பரிதாபமாக இறந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை அனில்நகரை சேர்ந்தவர் ரமணி (வயது 50). இவர் சி.ஆர்.சி போக்குவரத்து துறையில் கேசியராக வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றிருந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமணி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×