search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dizzy"

    • திருச்சி வண்ணாங்கோவில் அருகே தார் உற்பத்தி ஆலையின் புகை மூட்டத்தால் 10 பேர் மயக்கம் அடைந்தனர்
    • அரசு மருத்துவமனையில் சிகிச்சை

    திருச்சி:

    திருச்சி வண்ணாங்கோவில் அருகே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனியார் தார் உற்பத்தி ஆலைஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தார் உற்பத்தி ஆலையில் அவ்வபோது மிகவும் கடுமையான புகை மூட்டத்துடன் கரும்புகை வெளி வருகிறது.இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிக்கடி சுவாசக் கோளாறுகள் ஏற்படுவது உடன் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று ஏற்பட்ட புகை மூட்டத்தின் காரணமாக வண்ணாங் கோயில் திருநகர் பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது.

    இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் வாயிலாக அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இதில் 3 பேருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




    • சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 7-ம் வகுப்பு மாணவி பள்ளியின் அருகே உள்ள சாலையோர கடையில் குளிர்பானம் வாங்கி குடித்தார். திடீரென அந்த மாணவி மயக்கமடைந்தார்.
    • இதனால் அரசு பெண்கள் பள்ளி எதிரே சாலையோர கடைகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 7-ம் வகுப்பு மாணவி பள்ளியின் அருகே உள்ள சாலையோர கடையில் குளிர்பானம் வாங்கி குடித்தார்.

    இந்த நிலையில் பள்ளிக்குள் சென்ற மாணவி சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். மாணவியை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எடப்பாடி தாசில்தார் லெனின் மற்றும் நகராட்சி அதிகாரிகள், போலீசார் மாணவியிடம் விசாரித்தனர். தொடர்ந்து அவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

    கடைகள் அகற்றம்

    இதனை தொடர்ந்து நகராட்சி அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், மாணவி குளிர்பானம் வாங்கி குடித்த பள்ளி அருகே சந்தை திடலில் சாலையோர கடை மற்றும் பல்வேறு கடைகளில் சோதனை நடத்தினர். அங்கு ரூ.2, ரூ.5, ரூ.10 விலையில் கலர் குளிர்பானங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிறமூட்டி குளிர்பானங்கள் விற்க அரசால் அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதி பெறாமல் குளிர்பானங்கள் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த அந்த குளிர்பானங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் நகராட்சி ஊழியர்கள், அங்கிருந்த கடைகளை அகற்றினர். கடை உரிமையாளர்களிடம் இனிமேல் இங்கு கடை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    கைப்பற்றப்பட்ட கலர் குளிர்பானங்கள் தரம் இல்லாதவை. உள்ளூரில் தயாரிக்கப்பட்டவை. இந்த குளிர்பானங்கள் தயாரித்தவர்கள் யார்? விற்பனைக்கு பயன்படுத்திய வாகனங்கள்? எங்கு வைத்து தயாரிக்கிறார்கள்? என்பது பற்றி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    • செல்வகுமார் என்பவருக்கும் அவரது மனைவி சுமதிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.
    • மனவேதனையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கல்லூலி திருவாசல் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவி சுமதிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த செல்வகுமார் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வகுமார் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    5.78 கோடி ரெயில் கொள்ளையில் கைது செய்யப்பட்ட கொள்ளையனை சிபிசிஐடி போலீசார் விசாரணையின் போது திடீரென மயங்கி விழுந்ததையடுத்து உடனடியாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். #SalemChennaiTrainRobbery #ChennaiTrainRobbery #RBIMoney

    ராயபுரம்:

    சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ரெயில் பெட்டி மேற்கூரையில் துளை போட்டு ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தினேஷ், ரோஹன்பார்த்தி ஆகிய 2 பேர் கடந்த 12-ந்தேதி கைது செய்யப்பட்டனர். மேலும் கொள்ளையில் தொடர்புடைய மோஹர்சிங், ருசிபார்த்தி, காலியா என்ற கிருஷ்ணா, மகேஷ்பார்த்தி, பில்தியா என்ற பிரஜ்மோகன் ஆகியோர் வேறொரு வழக்கில் கைதாகி அங்கு சிறையில் இருப்பது தெரிந்தது.

    அவர்கள் 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். ரெயில் கொள்ளையில் மோஹர்சிங் தலைவனாக செயல்பட்டு இருந்தார்.

    இதையடுத்து மோஹர் சிங், பில்தியா என்ற பிரஜ் மோகன் உள்பட 5 பேரையும் 14 நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் அனுமதி பெற்றனர். அவர்களிடம் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு விசாரணையின் போது பில்தியா என்கிற பிரஜ்மோகன் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அவருக்கு ஆஸ்பத்திரியில் உள்ள 4-வது மாடியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவனது உடலில் சோர்வு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. #SalemChennaiTrainRobbery #ChennaiTrainRobbery #RBIMoney

    ×