search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரிந்துணர்வு ஒப்பந்தம்"

    • அக்னி வீரர்கள் வரும் ஜனவரி மாதம் பயிற்சி மையங்களில் சேருவார்கள்.
    • அக்னிபாத் திட்ட வீரர்களுக்கு முதல் வருடம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும்.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் 4 ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 14 ந் தேதி மத்திய அரசு அறிவித்தது.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் முப்படைகளுக்கும் வீரர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் தொகுதி அக்னி வீரர்கள் வரும் ஜனவரி மாதம் பயிற்சி மையங்களில் சேருவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டடத்தின் கீழ் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 4வது வருடம் அவர்களது சம்பளம் ரூ. 40,000 ஆக இருக்கும்.

    இந்நிலையில் அக்கினிபாத் வீரர்களுக்கு சம்பளம் வழங்க வங்கி வசதிகளை அளிக்கும் விதமாக பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஐடிபிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, பந்தன் வங்கி ஆகிய 11 வங்கிகளுடன் ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் பன்சி போனப்பா தலைமையில் லெப்டினன்ட் ஜெனரல் வி ஸ்ரீஹரி, வங்கிகளின் மூத்த அதிகாரிகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அக்னிவீரர் சம்பளத் தொகுப்பின் கீழ் வழங்கப்படும் பலன்கள் பாதுகாப்புத்துறை சம்பளத் தொகுப்பைப் போல இருக்கும் என்றும், கூடுதலாக, பணி நிறைவின்போது தொழில் முனைவராக மாற விரும்பும் அக்னிவீரர்களுக்கு வங்கிகள் கடன் உதவி வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேசிய கல்விக் கொள்கையின் கீழ் பாடத்திட்டத்தை வடிவமைக்க திட்டம்.
    • தேர்ந்த பட்டய கணக்காளர்களின் தேவை அதிகரித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழக மேலாண்மை வணிகவியல் துறை, லண்டனில் உள்ள சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் பட்டய (ஏசிசிஏ) சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய பல்கலைக்கழக இயக்குனர் கே.தரணிக்கரசு, தேசிய கல்விக் கொள்கையின் தேவைகளை பூர்த்தி செய்ய ஏ.சி.சி.ஏ. கல்வித் திட்டத்துடன் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை வடிவமைப்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்று தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகளாவிய சூழ்நிலையில் தேர்ந்த பட்டய கணக்காளர்களின் தேவை மற்றும் பணிச் சூழல் மாறுதல்களின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் அமரேஷ் சமந்தராய, ஏ.சி.சி.ஏ-வின் தென்னிந்திய தலைவர் சரவணகுமார், சர்வதேச உறவுகள் துறை பேராசிரியர் சுப்பிரமணியம் ராஜூ, வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஆண்டுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் மெட்ரிக் டன் பொட்டாசியம் உரம் கிடைக்கும்.
    • உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், விலையை பராமரிக்கவும் இது உதவும்.

    நாடு முழுவதும் உணவு பாதுகாப்புக்காக விவசாயிகளுக்கு தடையின்றி உரம் கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.இதற்காக வெளிநாட்டு உர நிறுவனங்களுடன் இந்திய உர நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் ராஷ்டிரிய ரசாயன உர நிறுவனமும், ஜெர்மனியின் கே.பிளஸ்.எஸ்.நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.  இந்த புரிந்துணரவு ஒப்பந்தத்திற்கு ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை மந்திரி பகவந்த் குபா அப்போது உடனிருந்தார்.

    இந்த ஒப்பந்தம், கலப்பு உரங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், விவசாயிகளுக்கு எம்.ஓ.பி. உரம் கிடைப்பதை மேம்படுத்தவும் வகை செய்கிறது. உர உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடுகளுடன் நீண்டகால நட்புறவுக்கும் வழிவகை செய்கிறது.

    மேலும் உரம் மற்றும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதை நம்பியிருக்கும் இந்தியா, உள்நாட்டிலேயே அவற்றை உற்பத்தி செய்வதன் மூலம் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், நிலையான விலையை பராமரிக்கவும் இது உதவும்.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கே.பிளஸ்.எஸ் நிறுவனம் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் மெட்ரிக் டன் பொட்டாசியம் உரங்களை 2022-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை சப்ளை செய்யும் என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • வனவியல் மற்றும் பட்டுப்புழுவியல் மாணவர்களுக்கு தொழில்முனைவு கருத்தரங்கம் நடைபெற்றது.
    • வணிக மேம்பாட்டு மையத்தை இதர சேவைகள் பெறுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் வேளாண்காடுகள் வணிக மேம்பாட்டு மையம் சார்பில் வனவியல் மற்றும் பட்டுப்புழுவியல் மாணவர்களுக்கு தொழில்முனைவு கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதனை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் முனைவர் சோமசுந்தரம் தலைமையேற்று துவக்கி வைத்தார்.

    சென்னை சார்ந்த தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை கூடுதல் இயக்குனர் முத்துராமன் நிகழ்த்தினார்.

    விழாவில் அங்கமாக ஈரோடு மாவட்ட நிர்வாகத்துடன் மேட்டுப்பாளையம் வேளாண் காடுகள் வணிக மேம்பாட்டு மையம் திறன் மேம்பாடு, தொழில் மேம்பாடு மற்றும் வணிக மேம்பாட்டு மையத்தை இதர சேவைகள் பெறுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அதிகாரி தாமோதரன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாற்றம் செய்து கொண்டார். இதில் வணிக மேம்பாட்டு மையத்தின் உறுப்பினரான பிருந்தாபாரதியின் புத்தாக்க படைப்பான நாற்றங்காலுக்கு தேவையான கரிம வளர்ச்சி ஊக்கி சந்தை படுத்தப்பட்டது. மேலும் மாணவர்களான கபினேஷ் மற்றும் கவுசல்யாவின் புத்தாக்க தொழில் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

    மேலும் புத்தாக்க பற்று சீட்டு திட்டத்தின் வாயிலாக ஆதார நிதி காயத்ரி, சங்கீதா, அபிகுமார், பிருந்தா பாரதி ஆகியோருக்கு காசோலைகளாக வழங்கப்பட்டது. மேலும் பாரத ஸ்டேட் வங்கி வாயிலாக வணிக மேம்பாட்டு மையத்தின் உறுப்பினரான தட்சணாமூர்த்திக்கு வங்கி மேலாளர் வனிதா நடராஜன் காசோலை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் பார்த்திபன் வேளாண்காடுகள் வணிக மேம்பாட்டு மையத்தின் செயல்பாடுகளையும் வளர்ச்சியும் பற்றி விவரித்தார். மேலும் மாணவர்களுக்கு வணிக மேம்பாட்டு மையத்தின் சார்பாக கிடைக்கப்பெரும் சேவைகளையும் திறன் மேம்பாட்டு பயிற்சிளையும் குறித்து பேசினார். முன்னதாக முனைவர் ஜூடு சுதாகர் வனவியல் துணைப் பேராசிரியர் வரவேற்றார் . வேளாண் காடுகள் வணிக மேம்பாட்டு மையத்தின் தொழில் மேலாளர் சி. காயத்ரி சதீஷ்குமார் நன்றி கூறினார்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
    • பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள குளோபல் நோட்ஸ் என்ஜினீயரிங் சொல்யூசன்ஸ் தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

    பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் உயிர்த் தொழில் நுட்பவியல் துறை தலைவர் சபருன்னிஷாபேகம் வரவேற்றார். பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் மற்றும் குளோபல் நோட்ஸ் என்ஜினீயரிங் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்-பொறியாளர் ராஜீ கோவிந்தராஜன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இந்த ஒப்பந்தம் மூலமாக கல்லூரி மாணவர்களுக்கு உயிர்செல் முறைகளுக்கு கணக்கீட்டு திரவ இயக்கவியல் பயிற்சி அளிக்கப்படும். மேலும் திரவ இயக்கவியல் பற்றிய பயிற்சி மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும். எடுத்துரைக்கப்பட்டது.

    சிறப்பு விருந்தினரான பொறியாளர் ராஜீ கோவிந்தராஜன் பேசுகையில், உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளான மருந்து தொழிற்சாலை மற்றும் கெமிக்கல் தொழிற்சாலைகளில் உயிர் செயல் முறைகளில் திரவ இயக்கவியலின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினார். உருவகப் படுத்துதல், தொழிற்முறை பயன்பாடு ஆகியவற்றை பற்றியும் எடுத்துரைத்தார்.

    திரவ இயக்கவியலில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்தும் பேசினார். இதனால் மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொள்வதுடன், இந்த துறை சம்பந்தமாக ஆராய்ச்சிகளில் ஈடுபட திரவ இயக்கவியல் ஆய்வகம் துணைபுரியும் என்றார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், ராஜேஸ்வரி, சுேரஷ்குமார் மற்றும் துறைப்பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • திருச்சி தேசியக்கல்லூரி மற்றும் கரூர் ஸ்ரீசாரதா நிகேதன் மகளிர் கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
    • பழமைக்கும், புதுமைக்கும் பாலம் அமைத்து ஆன்மீகம், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை மாணவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படை பயன் ஆகும்.

    திருச்சி :

    தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் இணைந்து வளர்க்கும் பாரம்பரிய பெருமைகொண்ட திருச்சி தேசியக்கல்லூரி மற்றும் கரூர் ஸ்ரீசாரதா நிகேதன் மகளிர் கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் தேசியக்கல்லூரியில் கையெழுத்தானது. பழமைக்கும், புதுமைக்கும் பாலம் அமைத்து ஆன்மீகம், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை மாணவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படை பயன் ஆகும்.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்து நிகழ்ச்சியில் கரூர் ஸ்ரீசாரதா நிகேதன் மகளிர் கல்லூரி செயலர் யாதீஸ்வரி நீலகண்ட பிரியா, திருச்சி தேசியக்கல்லூரி செயலர் கே.ரகுநாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் தேசியக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் கே.குமார் வரவேற்றார். சாரதா நிகேதன் கல்லூரி முதல்வர் முனைவர் என்.நாகதீபா சிறப்புரையாற்றினார்.

    இதில் பங்கேற்று பேசிய மாதாஜி, தேகம், தேசம், தெய்வம் இவற்றில் தேசம் என்பது தேசியக்கல்லூரி, தெய்வம் என்பது ஸ்ரீசாரதா நிகேதன் கல்லூரி, இந்த இரு கல்லூரிகளும் யெல்பாட்டில், கருத்துணர்வில் இணைந்தவை. மாணவர் நலன் காக்க நாம் இணைந்து செயல்படுவோம் என்றார். நிறைவில் வேதியியல் துறை பேராசிரியர் டாக்டர் கணேஷ் ராஜா நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
    • மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக சர்வதேச காலணி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

    சென்னை:

    சென்னையில் இன்று காலணிகள் மற்றும் தோல் துறை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் 2,250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 37,450 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 5 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

    ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள்:

    1. கோத்தாரி - ஃபீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட் (காலணி உற்பத்தி)

    2. கோத்தாரி - ஃபீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட் (ஆயத்த நிலை மாதிரி சூழலமைப்பு)

    3. கோத்தாரி - SEMS குழுமம் (தோல் அல்லாத காலணி உற்பத்தி)

    4. வேகன் குழுமம் (தோல் அணிகலன் மற்றும் பரிசு அணிகலன்களின் உபகரணங்கள் உற்பத்தி)

    5. வாக்கரூ இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் (தோல் அல்லாத காலணி உற்பத்தி)

    இத்திட்டங்கள், பெரம்பலூர் மற்றும் இராணிப்பேட்டை (பனப்பாக்கம்) மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

    இதுதவிர காலணித்துறை மற்றும் தோல் பொருட்கள் துறையில், தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    துறைவாரியாக, ஆய்வுகள் மேற்கொண்டு அத்துறை வளர்ச்சியை சீரான முறையில் நெறிப்படுத்தும் வகையில், துறை சார்ந்த கொள்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், தோல் அல்லாத காலணிப் பொருட்கள் துறையில் முதலீடுகளை ஈர்த்திடவும், வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்கிடவும், ஏற்றுமதியைப் பன்மடங்கு பெருக்கிடும் வகையிலும் இக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக சர்வதேச காலணி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். சர்வதேச காலணி உற்பத்தியாளர்கள், காலணி உற்பத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர், தமிழ்நாட்டில் உள்ள சந்தை நிலவரங்களையும் அதன்மூலம் உருவாகும் முதலீடு வாய்ப்புகளையும் பற்றி உரையாடினார்கள்.

    • டீமா உறுப்பினர் நிறுவனங்களின் அலுவலர் தேவையை, 'டீசா' உறுப்பினர்களைக் கொண்டு பூர்த்தி செய்தல்.
    • பின்னலாடை தொழில் துறை வளர்ச்சிக்காக, இரு சங்கங்களும் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) மற்றும் திருப்பூர் டேலன்ட் எக்ஸ்போர்ட் ஸ்டாப் அசோசியேஷன் (டீசா) சங்கங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்ச்சி டீசா அரங்கில் நடந்தது.டீமா தலைவர் முத்துரத்தினம், டீசா தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    ஒப்பந்த ஷரத்துக்களானது பின்னலாடை தொழில் துறை வளர்ச்சிக்காக, இரு சங்கங்களும் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும்.தொழில்முனைவோர், தொழிலாளர், அலுவலர்கள் என3 தரப்பினரையும் இணைத்து, பின்னலாடை தொழில் துறையை மேம்படுத்துதல், 'டீமா' உறுப்பினர் நிறுவனங்களில் அலுவலர்களாக பணிபுரிவோரை டீசா உறுப்பினராக இணைத்தல், டீமா உறுப்பினர் நிறுவனங்களின் அலுவலர் தேவையை, 'டீசா' உறுப்பினர்களைக் கொண்டு பூர்த்தி செய்தல்.

    அலுவலர்களின் பணித்திறன், நிர்வாக திறன், தொழில் திறன்களை மேம்படுத்த இரு சங்கங்களும் இணைந்து பயிற்சி அளித்தல், டீமா உறுப்பினர் நிறுவனங்களில் அலுவலர்களாக பணிபுரியும் டீசா உறுப்பினர்களின் பணியிடம் மாற்றம், குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்துவைத்தல், அலுவலர்களின் பொறுப்புணர்வு மற்றும் அவர்களின் செயல்திறன்களை மேம்படுத்த குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளித்தல்.

    பின்னலாடை நிறுவன அலுவலர்களின் மனச்சோர்வை போக்க வாரம் ஒருநாள், விளையாட்டு போட்டி நடத்துதல், சிறப்பாக பணிபுரியும் அலுவலர்களுக்கு டீசா மூலம் பாராட்டு சான்று வழங்குதல், அலுவலர்களின் சம்பளம், போனஸ் குறித்த சிக்கல்களுக்கு டீமா மற்றும் டீசா சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுதல், பின்னலாடை உற்பத்தி துறை பாதிக்கப்பட்டால் இரு சங்கங்களும் கரம்கோர்த்து செயல்பட்டு தொழிலை மீட்டல்உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    • 3 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஏற்று செயல்பட நடவடிக்கை.

    மத்திய ஆயுஷ் அமைச்சகத்தை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொழில் நுட்ப ஒத்துழைப்பை அளிப்பதற்காக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன்  3 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைநகர் டெல்லியில் கையெழுத்தானது.

    இந்த ஒப்பந்தத்தில், ஆயுஷ் அமைச்சகம் சார்பாக அதன் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் சார்பாக அதன் செயலாளர் அல்கேஷ் குமார் சர்மா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    இரு அமைச்சகங்களும் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்படுவது என்றும், மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழுள்ள நிறுவனங்களுடன் இணைந்து, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வது மற்றும் ஆயுஷ் கிரிட் திட்டத்துக்கு தேவையான அனைத்து ஆதரவையும் அளிப்பது உள்ளிட்டவை இந்த ஒப்பந்தம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

    • சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
    • நிகழ்ச்சிக்கு இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி மற்றும் நாகர்கோவிலில் உள்ள பிரபல ரோபோடிக்ஸ் நிறுவனமான ''மேட் ஆட்டோமேசன்'' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    இதில் பி.எஸ்.ஆர்.கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி, மேட் ஆட்டோமேசன் நிர்வாக இயக்குநர் பிரவீன் மேத்தியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் மூலம் கல்லூரியில் உள்ள ரோபோடிக்ஸ் ஆய்வு கூடத்தை புதிய தொழில்நுட்பம் மூலம் விரிவாக்கம் செய்து மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் இந்த துறையில் வேலைவாய்ப்பிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் மேம்படுத்தி கொள்ள முடியும்.

    நிகழ்ச்சிக்கு இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம் தொடக்க உரையாற்றினார். டீன் மாரிசாமி சிறப்புரையாற்றினார். மின்னனுவியல் துறைத்தலைவர் வளர்மதி வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் பேசுகையில், ரோபோக்கள் பற்றியும், பல்வேறு துறைகளில் ரோபோக்கள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றியும் எடுத்துரைத்தார். மருத்துவம், பெயிண்டிங், பாதுகாப்புத்துறை, விண்வெளி ஆய்வு, விவசாயி, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதை பற்றி எடுத்துரைத்தார்.மேலும் மனிதர்களின் மனதை கட்டுப்படுத்தும் ரோபோ பற்றியும், அதன் சிறப்பம்சங்களையும் விளக்கினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், மின்னனுவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் ஐ.இ.டி.இ. மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், மீனா பிரகாஷ், ஐ.ஐ.சி. ஒருங்கிணைப்பாளர் தனம், கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • முதலீட்டாளர்கள் மாநாட்டில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பாக ரூ.1000 கோடிக்கான தொழில் முதலீட்டில், நூற்பு நெசவு மற்றும் பதப்படுத்தும் ஆலையை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
    • முதல்-அமைச்சரிடம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் வழங்கினார்.

    திருப்பூர் :

    சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பாக ரூ.1000 கோடிக்கான தொழில் முதலீட்டில் 4 ஆயிரம் ேபருக்கு வேலைவாய்ப்பு, நூற்பு நெசவு மற்றும் பதப்படுத்தும் ஆலையை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் தொழில் முதலீட்டு வழிகாட்டு குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி பூஜா குல்கர்னி செய்திருந்தார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து கே.ஆர்.நாகராஜன் கூறும்போது , தமிழக அரசுடன் இணைந்து செயல்படுத்தவிருக்கும் தொழில் முதலீடுகள் மூலமாக இ்ன்னும் பல்லாயிரக்கணக்கான நெசவாளர்களுக்கு முழுமையான வேலைவாய்ப்பு அமைவதுடன், தொழில் முன்னேற்றத்தில் தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்ல பேருதவியாக இருக்கும் என்றார்.

    • ஜப்பான் நாட்டைச்சார்ந்த டெக்னோ ஸ்மைல் இன்கார்பரேஷன் நிறுவன தலைவர் கென்யா அபே மற்றும் அந்நிறுவன ஆலோசகர் யாசுபுமிமேனகா ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
    • புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜப்பானில் உள்ள உயர்மட்ட நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்களை பெற்று தருவது பற்றியும் இடம் பெற்றிருந்தது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்கள் அயல்நாடுகளில் வேலைவாய்ப்பை பெறுவதற்கும் மற்றும் உயர் கல்வி கற்பதற்கும் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் ஜப்பான் நாட்டைச்சார்ந்த டெக்னோ ஸ்மையில் இன்கார்பரேஷன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி கல்வி நிறுவன தலைவர் பிஎஸ்கே பெரியசாமி தலைமையில் நடை பெற்றது.

    ஜப்பான் நாட்டைச்சார்ந்த டெக்னோ ஸ்மைல் இன்கார்பரேஷன் நிறுவன தலைவர் கென்யா அபே மற்றும் அந்நிறுவன ஆலோசகர் யாசுபுமிமேனகா ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    மேலும் இந்நிகழ்வில் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் டாக்டர் அசோகன், கேட்வே டு ஜப்பான் பிரைடே லிமிடெட் நிறுவன தலைவர் சரவணன், ஜப்பான் டோக்கியோ நெக்ஸ்ட்ஜென் கார்பரேசன் இயக்குநர் ராஜேஸ்குமார் சங்கரலிங்கம், பொறியியல் கல்லூரி டீன் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறை யோகப்பிரியா, பொறியியல் கல்லூரி டீன் திட்டங்கள் மற்றும் ஆலோசனை துறை முனைவர் விஜயகுமார் மற்றும் கல்வி நிறுவன வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநர் ஸ்ரீதர் பங்கு பெற்றனர்.

    மேலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2022-ம் ஆண்டு முதல் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கேட்வே டு ஜப்பான் பிரைவேட் லிமிடெட் மூலம் எளிதில் ஜப்பானிய மொழியை கற்கவும் மற்றும் டெக்னோ ஸ்மைல் இன்கார்ப்பரேஷன் மூலம் ஜப்பானில் உள்ள உயர்மட்ட நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்களை பெற்று தருவது பற்றியும் இடம் பெற்றிருந்தது.

    மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களிடையே மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் பொருட்டு கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஜப்பானிய பல்கலைக்கழகங்களுக்கு இடையே கல்விசார் ஒத்துழைப்பு குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    ×