search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி தேசியக்கல்லூரியில் கலாசாரத்தை வளர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
    X

    திருச்சி தேசியக்கல்லூரியில் கலாசாரத்தை வளர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

    • திருச்சி தேசியக்கல்லூரி மற்றும் கரூர் ஸ்ரீசாரதா நிகேதன் மகளிர் கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
    • பழமைக்கும், புதுமைக்கும் பாலம் அமைத்து ஆன்மீகம், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை மாணவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படை பயன் ஆகும்.

    திருச்சி :

    தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் இணைந்து வளர்க்கும் பாரம்பரிய பெருமைகொண்ட திருச்சி தேசியக்கல்லூரி மற்றும் கரூர் ஸ்ரீசாரதா நிகேதன் மகளிர் கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் தேசியக்கல்லூரியில் கையெழுத்தானது. பழமைக்கும், புதுமைக்கும் பாலம் அமைத்து ஆன்மீகம், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை மாணவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படை பயன் ஆகும்.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்து நிகழ்ச்சியில் கரூர் ஸ்ரீசாரதா நிகேதன் மகளிர் கல்லூரி செயலர் யாதீஸ்வரி நீலகண்ட பிரியா, திருச்சி தேசியக்கல்லூரி செயலர் கே.ரகுநாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் தேசியக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் கே.குமார் வரவேற்றார். சாரதா நிகேதன் கல்லூரி முதல்வர் முனைவர் என்.நாகதீபா சிறப்புரையாற்றினார்.

    இதில் பங்கேற்று பேசிய மாதாஜி, தேகம், தேசம், தெய்வம் இவற்றில் தேசம் என்பது தேசியக்கல்லூரி, தெய்வம் என்பது ஸ்ரீசாரதா நிகேதன் கல்லூரி, இந்த இரு கல்லூரிகளும் யெல்பாட்டில், கருத்துணர்வில் இணைந்தவை. மாணவர் நலன் காக்க நாம் இணைந்து செயல்படுவோம் என்றார். நிறைவில் வேதியியல் துறை பேராசிரியர் டாக்டர் கணேஷ் ராஜா நன்றி கூறினார்.

    Next Story
    ×