search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ministry of ayush"

    • ‘யோகா-பிரேக்’ எனும் செயலியை மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
    • ஆசனங்கள், பிராணாயாமம் மற்றும் தியானம் ஆகியவற்றை உள்ளடக்கிய 5 நிமிட நெறிமுறை இந்த மொபைல் செயலி மூலம் கிடைக்கும்.

    புதுடெல்லி:

    யோகா தற்போது உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இது உலகின் அனைத்து பகுதிகளையும் அடைந்துள்ளது.

    யோகா ஏதோ ஒரு வடிவத்தில், ஆன்மீக அல்லது ஆரோக்கிய நோக்கங்களுக்காக நன்மை பயப்பதாக உள்ளது.

    இதையடுத்து பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கு மன அழுத்தத்தைத் தணிக்கவும், புத்துணர்ச்சியடையவும், அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், பணியிடத்தில் மீண்டும் கவனம் செலுத்தவும் 'யோகா-பிரேக்' எனும் செயலியை மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிமுகப்படுத்தி உள்ளது.

    ஆசனங்கள், பிராணாயாமம் மற்றும் தியானம் ஆகியவற்றை உள்ளடக்கிய 5 நிமிட நெறிமுறை இந்த மொபைல் செயலி மூலம் கிடைக்கும்.

    எனவே இதுதொடர்பாக ஆயுஷ் அமைச்சகம், மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, அரசு அலுவலர்கள் அடிக்கடி மன அழுத்தம் மற்றும் உடல்ரீதியான பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர்.

    இத்தகைய பிரச்சனைகளில் இருந்து விலக்கு அளிக்க, இந்த செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இது பணியாளர்களுக்கு பணியிடத்தில் ஆறுதல் அளிக்கும். இந்த 'யோகா-பிரேக்' செயலியை கூகுள் பிளேஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் மொரார்ஜி தேசாய் நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் யோகா ஆகிய யூடியூப் சேனல்களிலும் இது தொடர்பான வீடியோக்கள் உள்ளது.

    எனவே அனைத்து துறை அரசு ஊழியர்கள் இடையே இந்த செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • 3 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஏற்று செயல்பட நடவடிக்கை.

    மத்திய ஆயுஷ் அமைச்சகத்தை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொழில் நுட்ப ஒத்துழைப்பை அளிப்பதற்காக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன்  3 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைநகர் டெல்லியில் கையெழுத்தானது.

    இந்த ஒப்பந்தத்தில், ஆயுஷ் அமைச்சகம் சார்பாக அதன் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் சார்பாக அதன் செயலாளர் அல்கேஷ் குமார் சர்மா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    இரு அமைச்சகங்களும் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்படுவது என்றும், மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழுள்ள நிறுவனங்களுடன் இணைந்து, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வது மற்றும் ஆயுஷ் கிரிட் திட்டத்துக்கு தேவையான அனைத்து ஆதரவையும் அளிப்பது உள்ளிட்டவை இந்த ஒப்பந்தம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

    டெல்லியில் நிலுவையில் உள்ள ரசீதுகளுக்கு ஒப்புதல் அளிக்க 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரியை சிபிஐ போலீசார் கைது செய்தனர். #Ayush #CBI
    புதுடெல்லி:

    மத்திய ‘ஆயுஷ்’ அமைச்சகத்தில் சார்பு செயலாளராக பணியாற்றி வருபவர் ஆர்.கே.காத்ரி. ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய மருந்து மற்றும் மருந்து பொருட்கள் கழகத்தின் நிர்வாக இயக்குனராகவும் இவர் இருந்து வருகிறார்.

    இதற்கிடையே, மருந்து பொருட்கள் விற்பனை ஏஜென்ட் ஒருவர் தனக்கு வரவேண்டிய பணம் நிலுவையில் உள்ளது எனக்கூறி  அதற்கான ரசீதுகளை சமர்ப்பித்துள்ளார்.
     
    அப்போது அவரிடம் காத்ரி, ரசீதுகளுக்கு ஒப்புதல் அளிக்க தனக்கு 10 லட்சம் ரூபாய் தரவேண்டும் என கேட்டுள்ளார்.இதனால் மனா உளைச்சல் அடைந்த அந்த ஏஜென்ட் இதுகுறித்து சிபிஐயிடம் புகார் அளித்தார்.

    அவர்கள் வகுத்த திட்டப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் அடங்கிய பணத்தை ஆர்.கே.காத்ரியிடம் கொடுத்தார். அதை பெற்றுக் கொண்டபோது ஆர்.கே.காத்ரியை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும், அவரது வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி விசாரித்து வருகின்றனர். #Ayush #CBI
    ×