என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரியல்மி ஜிடி 2 ப்ரோ"
வடமதுரை:
திண்டுக்கல் அருகே உள்ள எரியோடு பண்ணைப்பட்டியை சேர்ந்தவர் வனிதா (வயது17), மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் காவியா (17). இவர்கள் 2 பேரும் வடமதுரை அருகே உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர்.
கடைசி தேர்வு எழுத சென்ற மாணவிகள் 2 பேரும் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதோடு மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
வடமதுரை போலீசார் 2 மாணவிகளையும் தீவிரமாக தேடி வந்தனர். அவர்கள் பயன்படுத்தி வந்த செல்போன் எண்களை ஆய்வு செய்து பார்த்த போது மாணவிகள் ஐதராபாத்தில் இருப்பது தெரியவந்தது. மேலும் சென்ட்ரிங் வேலை பார்த்து வரும் நாட்ராயன் என்பவரும், பிளஸ்-2 மாணவர் பாலமுருகன் என்பவரும் மாணவிகளை கடத்தி சென்றது தெரியவந்தது.
போலீசார் உடனே ஐதராபாத்துக்கு விரைந்தனர். மாணவிகளையும், அவர்களை கடத்தி சென்ற வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு உத்தரவுபடி மைனர் பெண்களை கடத்தியதாக 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
தர்மபுரி:
தர்மபுரியை அடுத்த குப்பூர் பகுதியில் உள்ள எஸ்.கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
சம்பவத்தன்று அவர் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலையில் நீண்ட நேரமாகியும் மாணவி வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இதுகுறித்து மாணவி யின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கா ததால் மாணவி மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அதே பகுதியைச் சேர்ந்தவரும் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் கோபாலகிருஷ்ணன் என்பவர் மாணவியை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாணவியை கடத்தி சென்ற உதவி பேராசிரியர் கோபால கிருஷ்ணனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை போக்சோ சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்குபதிந்து போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து மாணவியை மீட்டு தொப்பூர் அருகே உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.
சென்னை:
தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தின் படி இந்த தேர்வு நடத்தப்பட்டது.
பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ- மாணவிகள் எழுதினார்கள். 2941 தேர்வு மையங்களில் பிளஸ்-2 தேர்வு நடந்தது.
கணிதம், விலங்கியல், வணிகவியல், வேதியியல் ஆகிய பாடங்களை தவிர மற்ற பாடங்கள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த பணி ஏப்ரல் 11-ந்தேதி முடிவடைகிறது. அதன்பிறகு ஏப்ரல் 19-ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. #Plus2Exam
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் அருகே கொட்டரை கிராமத்தை சேர்ந்தவர் நல்லத்தம்பி, விவசாயி. இவரது மகள் சினேகா (வயது 17). இவர் குன்னத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இவர் பிளஸ்-2 தேர்வினை சரியாக எழுத வில்லை என கூறப்படுகிறது. இது குறித்து தோழிகள், வீட்டில் உள்ளவர்களிடம் கூறி கவலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனை பார்த்த உறவினர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே சினேகா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
சேதராப்பட்டு:
காலாப்பட்டு அருகே தமிழக பகுதியை சேர்ந்த ஒரு மாணவி காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
சம்பவத்தன்று தேர்வு எழுத செல்வதாக கூறி சென்ற அந்த மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவியை அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரது செல்போன் டவர் மூலம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் புதுவையில் தங்கி இருந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த மாணவி பெற்றோருடன் செல்ல மறுத்து அடம்பிடித்தாள். இதையடுத்து அந்த மாணவியை அவரது உறவினருடன் அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவியை கடத்தி சென்ற லாரி டிரைவரை கண்டித்ததோடு தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். #tamilnews
தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தேர்வுக்கான வினாத்தாள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் 41 ஆயிரத்து 422 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். அவர்கள் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 169 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மையத்திலும் 2 ஆசிரியர்கள் தேர்வு கண்காணிப்பாளராக பணியாற்றுவார்கள். தேர்வு மையங்களை கண்காணிக்கவும், காப்பியடிப்பவர்களை பிடிக்கவும் 200 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. அதுதவிர கலெக்டர், முதன்மைக்கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் வருவாய் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மையங்களை கண்காணிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்துக்கான வினாத்தாள்கள் வந்து சேர்ந்து விட்டன. வினாத்தாள்கள் 16 இடங்களில் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு, அந்த அறைக்கதவுகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் அந்த அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். அந்த வளாகத்திற்குள் எந்தக் காரணத்தைக் கொண்டும் தனி நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வினாத்தாள்கள் 44 வழித்தடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
தமிழ் பாடத்துக்கான தேர்வு நாளை நடக்கிறது. தேர்வு தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். சரியாக காலை 10 மணிக்கு மாணவ-மாணவிகளுக்கு வினாத்தாள்கள் வழங்கப்படும்.
முதல் 10 நிமிடம் கேள்வித்தாளை படித்துப் பார்ப்பதற்கும், பின்னர் விடைத்தாளை பூர்த்தி செய்வதற்கு 5 நிமிடமும் அனுமதி வழங்கப்படும். தேர்வுகள் 10.15 மணிக்கு தொடங்கி பகல் 12.45 மணிவரை நடைபெறும். தேர்வு நேரம் தொடங்கியதும் மாணவ-மாணவிகள் முதலில் தங்களுக்கு எந்தக் கேள்விக்குப் பதில் நன்றாக தெரியுமோ அதனை எழுதிவிட வேண்டும். பின்னர் மற்ற கேள்விகளுக்குப் பதில் எழுத முயற்சிக்க வேண்டும்.
தேர்வு மையங்களில் இருந்து முன் கூட்டியே வெளியேறக்கூடாது. அனுமதிக்கப்பட்ட நேரம் முழுவதும் தேர்வு மையத்தில் மாணவர்கள் இருக்க வேண்டும். மாணவ-மாணவிகள் தேர்வு மையத்தில் காப்பி அடிக்கவோ, மற்றவர்கள் விடைத்தாளை பார்த்து எழுதுவது போன்ற தவறான செயல்களில் ஈடுபட முயற்சிக்க வேண்டாம். மீறி தவறாக நடக்க முயன்றால், நிச்சயமாக கண்காணிப்பாளரால் கையும், களவுமாக பிடிபடுவதுடன், தேர்வு மையத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள். மாணவர்கள் தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
2018-19-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 19-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-2 பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7 ஆயிரத்து 82 பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 107 மாணவர்கள் மற்றும் பழைய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண்கள் என மொத்தம் 1,200 மதிப்பெண்கள்) 25 ஆயிரத்து 741 தனித்தேர்வர்களும், புதிய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண்கள் என மொத்தம் 600 மதிப்பெண்கள்) 1,144 தனித்தேர்வர்கள் என மொத்தத்தில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
பள்ளி மாணவிகள் 4 லட்சத்து 60 ஆயிரத்து 6 பேர். மாணவர்கள் 4 லட்சத்து ஆயிரத்து 101 ஆகும். மாணவர்களை விட மாணவிகள் எண்ணிக்கை 58 ஆயிரத்து 905 அதிகம் ஆகும். தனித்தேர்வர்களில் 8 ஆயிரத்து 855 பெண்களும், 18 ஆயிரத்து 28 ஆண்களும், 2 திருநங்கைகளும் தேர்வு எழுதுகிறார்கள்.
சென்னையில் 408 பள்ளிகளில் இருந்து 158 தேர்வு மையங்களில் மாணவிகள் 26 ஆயிரத்து 285 பேரும், மாணவர்கள் 23 ஆயிரத்து 134 பேரும் என மொத்தம் 49 ஆயிரத்து 419 பேர் எழுத உள்ளனர். புதுச்சேரியில் 150 பள்ளிகளிலிருந்து 40 தேர்வு மையங்களில் மொத்தம் 15 ஆயிரத்து 408 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு என 2 ஆயிரத்து 944 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் 150 புதிய தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 5 லட்சத்து 13 ஆயிரத்து 884 பேர் தமிழ் வழியில் படித்து தேர்வு எழுத உள்ளனர்.
மதுரை, வேலூர், கடலூர், சேலம், கோவை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளிலுள்ள 45 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகிறார்கள்.
டிஸ்லெக்சியா பாதிப்புள்ள மாணவர்கள், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய்பேசாதோர் மற்றும் இதர மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான சலுகைகள் (சொல்வதை எழுதுபவர் நியமனம், மொழிப்பாட விலக்களிப்பு, கூடுதல் 50 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரம்) அரசுத் தேர்வுத் துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தேர்வு மையங்களில் தரைதளத்தில் தேர்வெழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கிடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் ஆகியோருக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் ஆன்-லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது. அந்த சீட்டில் சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு உள்ளன.
அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேவையான எண்ணிக்கையில் முதன்மை விடைத்தாள்கள், கூடுதல் விடைத்தாள்கள் மற்றும் முகப்புச் சீட்டுகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. தேர்வு பணியில் அனைத்து நிலைகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம் மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவார்கள். அக்குழுவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, வருவாய் அதிகாரி, சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் கண்காணிக்க, அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 4 ஆயிரம் பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் முதன்மை கல்வி அதிகாரிகளால் நியமிக்கப்பட்டு உள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முக்கிய பாடங்களுக்கான தேர்வு நாட்களில் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு மைய வளாகத்துக்குள் செல்போன் எடுத்து வரக்கூடாது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறையில் செல்போன் வைத்திருக்கக்கூடாது. இதனை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன் உள்பட இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாள்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்துகொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு விதிமுறைகளின்படி உரிய தண்டனைகள் வழங்கப்படும்.
ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளித் தேர்வு மையத்தை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்திட பள்ளிக்கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனருக்கு பரிந்துரை செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுத்தேர்வுகள் தொடர்பாக சந்தேகங்கள் குறித்து விளக்கம் பெற அரசு தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படும். 9385494105, 9385494115, 9385494120, 9385494125 ஆகிய எண்களில் இந்த தேர்வு கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்