என் மலர்

    நீங்கள் தேடியது "plus two student missing"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆண்டிப்பட்டி அருகே மாயமான பிளஸ்-2 மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே ராஜதானியை சேர்ந்தவர் சிங்கராஜ் மகள் மீனா (வயது16). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். காலை நேரத்தில் வெளியே சென்ற மீனா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் ராஜதானி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சினையில் மீனா வீட்டை விட்டு வெளியேறினாரா? அல்லது யாரேனும் கடத்தி சென்றனரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தருமபுரியில் பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவி வீடு திரும்பாததால் இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், மாரவாடியை அடுத்த பழையூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி தீபா. இவர்களது மகள் சுவாதி (வயது17). தருமபுரி அரசு மகளிர் மேல் நிலைபள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கடந்த 9-ந்தேதி அன்று பள்ளிக்கு சென்ற சுவாதி வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து சந்தோஷ் தருமபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சுவாதியை தேடி வருகின்றனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பண்ருட்டியில் பிளஸ்-2 மாணவி மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி லிங்க்ரோடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி காமாட்சி. இவர்களது மகள் மாரிமுத்து (வயது 16). இவர் பண்ருட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். 

    தற்போது காலாண்டு விடுமுறையையொட்டி அந்த தனியார் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடந்து வருகிறது. நேற்று காலை சிறப்பு வகுப்புக்கு செல்வதற்காக மாரிமுத்து வீட்டில் இருந்து சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் மாரிமுத்துவை தேடினர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இது குறித்து மாரிமுத்துவின் தாய் காமாட்சி பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் விஷ்ணுபிரியா வழக்குபதிவு செய்து மாயமான மாரிமுத்துவை தேடி வருகிறார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மதிப்பெண் குறைந்ததால் மாயமான பிளஸ்-2 மாணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள எம்.மலம்பட்டியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகன் சியாம்சுந்தர் (வயது18).

    இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளி வந்த நிலையில் தனது அத்தை கயல்விழி வீட்டுக்கு சென்று வருவதாக சியாம் சுந்தர் கூறி விட்டு சென்றார்.

    பின்னர் தேர்வு முடிவுகளை பார்த்த சியாம்சுந்தர் அதில் மதிப்பெண்கள் குறைந்ததால் மனவேதனை அடைந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் அவர் திடீரென மாயமாகிவிட்டார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் சியாம்சுந்தரை காணவில்லை.

    இது குறித்து மேலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவரை தேடி வருகிறார்கள்.

    ×