search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டி அருகே பிளஸ்-2 மாணவி மாயம்
    X

    ஆண்டிப்பட்டி அருகே பிளஸ்-2 மாணவி மாயம்

    ஆண்டிப்பட்டி அருகே மாயமான பிளஸ்-2 மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே ராஜதானியை சேர்ந்தவர் சிங்கராஜ் மகள் மீனா (வயது16). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். காலை நேரத்தில் வெளியே சென்ற மீனா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் ராஜதானி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சினையில் மீனா வீட்டை விட்டு வெளியேறினாரா? அல்லது யாரேனும் கடத்தி சென்றனரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×