என் மலர்
செய்திகள்

X
தருமபுரியில் பிளஸ்-2 மாணவி மாயம்
By
மாலை மலர்11 Feb 2019 10:05 PM IST (Updated: 11 Feb 2019 10:05 PM IST)

தருமபுரியில் பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவி வீடு திரும்பாததால் இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், மாரவாடியை அடுத்த பழையூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி தீபா. இவர்களது மகள் சுவாதி (வயது17). தருமபுரி அரசு மகளிர் மேல் நிலைபள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
கடந்த 9-ந்தேதி அன்று பள்ளிக்கு சென்ற சுவாதி வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து சந்தோஷ் தருமபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சுவாதியை தேடி வருகின்றனர்.
Next Story
×
X