search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிசுகள்"

    • போட்டி நிறைந்த உலகில் போட்டி போட மாணவர்கள் முன்வர வேண்டும்.
    • தஞ்சை விவசாயம் சார்ந்த மண்வாசத்தை கொண்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தாமரை பன்னாட்டு பள்ளியின் 14-ம் ஆண்டு உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான ஆண்டு விழா மண்வாசனை எனும் தலைப்பில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித்தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    துணை தலைவர் நிர்மலா வெங்கடேசன், முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளி முதல்வர் விஜயாஸ்ரீதர், இடைநிலை ஒருங்கிணைப்பாளர் சர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத் ஆண்டறிக்கை வாசித்தார்.

    பள்ளியின் தலைவர் வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். அவர் தஞ்சாவூரில் மேலும் பல பள்ளிகள் தோன்றும். 

    அதற்கு தாமரை பன்னாட்டு பள்ளி ஒரு தூண்டுதலாக இருக்கும் என்றார்.

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    போட்டி நிறைந்த உலகில் போட்டி போட மாணவர்கள் முன்வர வேண்டும். போட்டி தேர்வுகளை முழுமன துடனும், விருப்பத்துடனும் எதிர்கொள்ளளும் சூழலுக்கு மாணவர்களை இப்பள்ளி அழைத்து செல்கிறது.

    தஞ்சை விவசாயம் சார்ந்த மண்வாசத்தை கொண்டது. அதில் பல திறமைகள் கொண்ட மண்வாசமாக மாற்றிக்கொண்டி ருக்கிறார்கள் மாணவர்கள். பிறந்த மண்ணை மணக்கச் செய்ய வேண்டும்.

    தமிழ்மீது உண்மையான நேசம் கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக, மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    • பலூன் உடைத்தல், இசை கேட்டு இடம்பிடித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.
    • போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்று29-ந்தேதி மதுக்கூர் வட்டார வளமை யத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    இதில் ஓட்டப்பந்தயம், பலூன் உடைத்தல், தண்ணீர் பாட்டில் நிரப்புதல், இசை கேட்டு இடம்பிடித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. 30- க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    மதுக்கூர் வட்டார கல்வி அலுவலர் வெ.மனோகரன் போட்டியை தொடங்கி வைத்தார்.

    போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது.

    போட்டி ஏற்பாடு களை வளமைய மேற்பார்வையாளர் தங்கம், ஆசிரியர் பயிற்றுநர் வீரப்பராஜா, பிரகாஷ், சிறப்பாசிரியர்கள் புஷ்பா, இருதயராஜ், பழனிவேல் ஆகியோர் செய்தனர்.

    • முகாமில் ஆடு, மாடு, கோழிகள் என 760 கால்நடைகளுக்கு தடுப்பூசி, சிகிச்சை அளிக்கப்பட்டன.
    • சிறந்த 10 கால்நடைகளின் கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி பேங்க் ஆப் பரோடா, மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து மன்னார்குடி அருகே உள்ள காரிக்கோட்டை கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாமை நடத்தியது.

    இந்த முகாமுக்கு மிட்டவுன் ரோட்டரி சங்கம் தலைவர் டி.ரெங்கையன் தலைமை தாங்கினார். காரிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பி.பன்னீர்செல்வம் வரவேற்றார்.

    திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை ( பொறுப்பு ) டாக்டர் டி.ராமலிங்கம் விளக்க உரையாற்றினார்.

    ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம்கள் தலைவர் டாக்டர் வி‌.பாலகிருஷ்ணன், மன்னார்குடி பேங்க் ஆப் பரோடா மேலாளர் சுவேந்து சாட்டர்ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக கால்நடை பராமரிப்பு துறை கூடுதல் இயக்குனர் ( ஓய்வு ) டாக்டர் டி. தமிழ்ச்செல்வன், பேங்க் ஆப் பரோடா விவசாயி அலுவலர் ஆர். மோனிகா, மிட்டவுன் ரோட்டரி சங்கம் செயலாளர் வி. கோபாலகிருஷ்ணன், மிட்டவுன் ரோட்டரி சங்கம் உடனடி முன்னாள் தலைவர் டாக்டர் சி.குருசாமி, மிட்டவுன் ரோட்டரி சங்கம் பொருளாளர் டி.அன்பழகன், முன்னாள் தலைவர் சாந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் ஆடு, மாடு, கோழிகள் என 760 கால்நடைகளுக்கு தடுப்பூசி, சிகிச்சை அளிக்கப்பட்டன.

    அம்மை நோய் தடுப்பூசி, குடற்புழு நீக்க மருந்து, சினை ஊசிகள், சினை பார்த்தல், காளைகளுக்கு ஆண்மை நீக்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிகிச்சைகள், தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

    இதையடுத்து சிறந்த 10 கால்நடைகளின் கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து பான் செக்கர்ஸ் கல்லூரி ரோட்ராக்ட் சங்கத்தின் உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பாளர் லலிதா தேவி, ஜோஸ்லின், சோபியா மற்றும் ஆகியோருக்கு கால்நடை பராமரிப்பு குறித்து ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம் தலைவர் டாக்டர் வி‌. பாலகிருஷ்ணன் விளக்கி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் குழு டாக்டர்கள் கார்த்திக், வெற்றிவேல், ராகவி, கால்நடை ஆய்வாளர்கள் குருநாதன், ராணி எலிசபெத், செங்குட்டுவன், கால்நடை பராமரிப்புத்துறை உதவியாளர்கள் பாரதி, நடராஜன், அமுதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பேங்க் ஆப் பரோடா அலுவலர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

    • பள்ளி ஆண்டு விழாவுக்கு பள்ளி தலைவர் சந்தான கோபாலன் தலைமை தாங்கினார்.
    • 240 மாணவ- மாணவிகளுக்கு அன்பளிப்பு வழங்கினர்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார் திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைவர் சந்தான கோபாலன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆதிநாதன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் டாக்டர் ராமசாமி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அய்யப்பன், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குனர் நந்தகோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சென்னை வைஸ்ணவா கல்லுரி உதவி பேராசிரியர் சின்னம்மாள் ஜானகி, ஆழ்வார் திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்கள்.

    ஓட்டல் ஆர்யாஸ் சங்கர் பாபு, மணிவண்ணன் நினைவாக ஜனனி, சடையப்பன் நினைவாகவும் 240 மாணவ- மாணவிகளுக்கு பரிசினை அன்பளிப்பாக வழங்கினார்கள். இந்து மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சிவசங்கர ராமன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் இந்து மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 100-க்கும் மேற்பட்ட கால்நடைகள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றன.
    • முகாம்கான ஏற்பாடுகளை கால்நடை துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மா பேட்டைஒன்றியம், விழிதியூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புதுறை சார்பில் கால்நடை மருத்து வம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு விழிதியூர் ஊராட்சிமன்ற தலைவர் கலையரசி கோவிந்தராஜன் தலைமை வகித்தார். மெலட்டூர் கால்நடை உதவி இயக்குனர் மணிச்சந்தர், திருக்கருகாவூர் கால்நடை மருத்துவர் சௌந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கால்நடை மருத்துவர்கள் கனகா தேவி, ரகுநாத், ஷோபன் ராஜ், கால்நடை ஆய்வாளர்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

    இதில் சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில் முகாமில் விழிதியூர் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 100 க்கும் மேற்ப ட்ட கால்நடைகள்முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றன.

    முகாம்கான ஏற்பாடுகளை கால்நடை துறையினர் மற்றும் ஊராட்சிமன்ற நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    • கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்து விளக்கமளித்தனர்.
    • சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    அம்மாபேட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், களஞ்சேரி ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்ற தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.

    ஒன்றியக்குழு உறுப்பினர் வள்ளி விவேகானந்தன் முன்னிலை வகித்தார்.

    களஞ்சேரி ஊராட்சி செயலாளர் மாரிமுத்து அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் மருத்துவத்துறையினர் கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்தும், அதற்கான சிகிச்சை குறித்தும் விளக்கமளித்தனர்.

    தொடர்ந்து, சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    முகாமில் களஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் கால்நடைகளுடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    ஏற்பாடுகளை கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கொரடாச்சேரி ஒன்றியம் கிளையின் சார்பில் துளிர் வினாடி-வினா போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கொரடாச்சேரி ஒன்றியம் கிளையின் சார்பில் துளிர் வினாடி வினா போட்டி நடைபெற்றது.

    அறிவியல் இயக்க கொரடாச்சேரி கிளையின் தலைவர் ச.பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் ப.குமார் வரவேற்புரை ஆற்றினார்.

    சிறப்பு அழைப்பாளர்–களாக வட்டாரக்கல்வி அலுவலர்கள் விமலா, சுமதி மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிருந்தாதேவி, அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் யு.எஸ். பொன்முடி, மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம், துளிர் வினாடி வினா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.கே சரவணராஜன், மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.முடிவில் பொருளாளர் ஜெயசங்கர் நன்றி கூறினார். கொரடாச்சேரி ஒன்றிய அளவில் துளிர் வினாடி வினா போட்டியில் 6,7 மற்றும் 8-ம் வகுப்பு பிரிவில் அபிவிருத்திஸ்வரம் நடுநிலைப் பள்ளி முதலிடமும்.

    மேலராதா நல்லூர் நடுநிலைப் பள்ளி இரண்டாமிடமும், திருவிடவாசல் நடுநிலைப் பள்ளி மூன்றாமிடமும் பெற்றுள்ளன.

    9 மற்றும் 10-ம் வகுப்பு பிரிவில் கண்கொடுத்தவனிதம் உயர்நிலைப் பள்ளி முதலிடமும் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடமும் பெற்றுள்ளன.

    11 மற்றும் 12-ம் வகுப்பு பிரிவில் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடமும் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும் பெற்றுள்ளன.

    • தொழில்நுட்பம் மற்றும் நவீன பதனிடும் முறைகள் என்ற கருப்பொருளில் இப்பொரு–ட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
    • மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் உணவு தொழில்நுட்பப் பொருட்காட்சி தொடங்கியது.

    இந்நிறுவன இயக்குநா் முனைவா் வி. சுப்பிரமணியனின் 120 -வது பிறந்த நாளை நினைவுகூரும் விதமாக இந்த உணவு தொழில்நுட்பப் பொருட்காட்சி இன்று வரை நடத்தப்படுகிறது. நிகழாண்டு சிறுதானிய உணவு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நவீன பதனிடும் முறைகள் என்ற கருப்பொருளில் இப்பொரு–ட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    எனவே, சிறுதானிய உணவுகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் உள்ளிட்டவை தொடா்பாக மொத்தம் 40 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 36 அரங்குகள் இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்று, தொழில்முனைவோராகி வெற்றிகரமாகச் செயல்படுபவா்களின் அரங்குகளாகும்.

    மேலும், இந்நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வெற்றிகரமான கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள், இயந்திரங்களின் செயல்விளக்கங்கள் ஆகியவையும் காட்சிப்படு த்தப்பட்டுள்ளன.

    இந்தக் கண்காட்சியை மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகச் செயலா் அனிதா பிரவீன் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து, இந்நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் அடங்கிய கையேட்டையும், சிறுதானிய பதப்படுத்தும் முறைகள் பற்றிய கையேட்டையும் வெளியிட்டாா்.

    இந்நிகழ்வில் மலேசியா டெய்லா்ஸ் பல்கலைக்கழகத்துடன் கல்விசாா் ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் காவேரி ஸ்மாா்ட் புட் மற்றும் அக்ரோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் தென்னை மதிப்பு கூட்டுப்பொருட்களுக்கான தொழில்நுட்பங்களின் தொகுப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    மேலும், இந்நிறுவனத்தால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே நடத்தப்பட்ட அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் திருவள்ளுவன், ஈச்சங்கோட்டை வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வா் வேலாயுதம், குமுளூா் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வா் ப ராஜ்குமாா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் (பொ) மருதுதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    இந்தக் கண்காட்சியைப் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவா்கள் பாா்வையிட்டனா். இதேபோல, விவசாயிகள், தொழில்முனைவோா், சுய உதவிக் குழுக்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோா் இன்று பாா்வையிட்டனர். மேற்கண்ட தகவலை நிறுவன இயக்குநா் (பொ) லோகநாதன் தெரிவித்து உள்ளார்.

    • சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ராமநாதபுரம் கலெக்டர் வழங்கினார்.
    • ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு துறை சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு துறை சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்ளுக்கு சைக்கிள் போட்டி நடந்தது. போட்டியில் முதல் 3 இடம் பெற்ற மாணவ-மாணவிகள் பெயர்கள் வருமாறு:-

    13 வயது பிரிவில் முதல் 3 இடங்களில் ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தருண் வலம்புரிவேல், ஸ்ரீகுமரன் நடுநிலைப்பள்ளி பிரதீப் ராஜ், அமிர்த வித்யாலயா மேல்நிலைப்பள்ளி ஷனேல் ஆண்டர்சன், மகளிர் பிரிவில் ஸ்ரீகுமரன் நடுநிலைப்பள்ளி சந்தியா, தேன்மொழி, ஆல்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிரதிக்ஷாஸ்ரீ வெற்றி பெற்றனர்.

    15 வயது பிரிவில் ராமநாதபுரம் சதக் கபீர் பப்ளிக் பள்ளி சீனிபர்ஹான் முகமது, டி.டி. விநாயகர் மேல்நிலைப்பள்ளி சச்சின், தர்வின் லியா. மகளிர் பிரிவில் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி அசனத்துல் பேகம், நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஹர்னிஸ்ரீ, ஜெய்ஸ்ரீ.

    17 வயது பிரிவில் உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைபள்ளி தன சேகரன், டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி அபி ேஷக், உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளி அசோக் பிரபு. மகளிரில் ராஜா மேல்நிலைப்பள்ளி சர்மிளா, ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஹார்மி, மண்டபம்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி காருண்யா வென்றனர்.

    முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, 2-வது பரிசு ரூ.3000, 3-வது பரிசு ரூ.2000 வழங்கப்பட்டது. 4 முதல் 10-வது இடம் வந்தவர்களுக்கு தலா ரூ.250 பரிசு தொகை, சான்றிதழ்களை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 8000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
    • சிறுவர்-சிறுமிகள் பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை தனுவர்ஷன் அறக்கட்டளை சார்பில் நம் கல்வி- நம் உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2-வது மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில் தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 8000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    போட்டியை குழந்தைகள் நல சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சாத்தப்பன், டாக்டர் சிங்காரவேலு, துணை நீதிபதி டாக்டர் ரவி ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் அஞ்சுகம் பூபதி முன்னிலை வகித்தார்.

    இந்த போட்டியில் 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக 20 கி.மீ. தூரமும் அதாவது மைதானத்தில் இருந்து புறப்பட்டு வல்லம் சென்று மீண்டும் மைதானம் வரையும், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்- சிறுமிகளுக்கு தனித்தனியாக 5 கி.மீ. தூரமும் அதாவது மைதானத்தில் இருந்து புறப்பட்டு மருத்துவ கல்லூரி முதல் கேட் வரை சென்று மீண்டும் மைதானம் வரையும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    அதன்படி போட்டியில் கலந்து கொண்டவர்கள் உற்சாகத்துடன் மாரத்தான் ஓடினர்.

    முடிவில் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த பரிசினை மாவட்ட தடகள சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், நெல்லை ஜீவா ஆகியோர் வழங்கி பாராட்டினர்.

    ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தனித்தனியாக முதல் பரிசாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.1 லட்சம், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 4-ம் பரிசாக ரூ.15 ஆயிரம், 5-ம் பரிசாக ரூ.10 பத்தாயிரம் மற்றும் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. இது தவிர 20 நபர்களுக்கு ரூ.500 மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    இதுபோல் சிறுவர் -சிறுமிகள் பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு ,கோப்பை வழங்கப்பட்டது. மேலும் மாணவிகள் தலா 3 பேர் என 6 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தனுவர்ஷன் அறக்கட்டளை நிறுவனர் உலகநாதன் செய்திருந்தார்.

    • லீ சாம்பியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் இந்தியன் சிலம்பம் பள்ளி இணைந்து தென்மாவட்ட அளவிலான சிலம்பபோட்டியை நடத்தியது.
    • 4 வயது முதல் 22 வயது வரையிலான மாணவ-மாணவிகள் பங்கேற்று சிலம்பம் சுற்றினர்.

    திருமங்கலம்

    லீ சாம்பியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் இந்தியன் சிலம்பம் பள்ளி இணைந்து தென்மாவட்ட அளவிலான சிலம்பபோட்டியை திருமங்கலத்தில் நடத்தியது.

    இதில் பல்வேறு பகுதிகளைசேர்ந்த 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்தியன் சிலம்ப பள்ளி தலைமை பயிற்சியாளர் மாமல்லன் மணி தொடங்கி வைத்தார். உலக சோடோகான் அமைப்பின் தலைவர் பாஸ்கரன், ஷோட்டோகான் பயிற்சியாளர் பால்பாண்டி முன்னிலை வகித்தனர்.

    ஒற்றைகம்பு, இரட்டை கம்பு, சுருள்வாள், தொடுப்பாடம் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 4 வயது முதல் 22 வயது வரையிலான மாணவ-மாணவிகள் பங்கேற்று சிலம்பம் சுற்றினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
    • மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், ஊட்டி, கோத்தகிரி மற்றும் குன்னூர் ஆகிய வட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு கடந்த வாரம் வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் ஊட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடந்த போட்டியில் இறுதி சுற்றில் கூடலூர் முதல்மைல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி டியானி தொடர்ந்து 4 சுற்றுகளிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சென்னையில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் தகுதியினை பெற்றார்.

    காந்திநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் கோகுல்தாசன் மாணவர்கள் பிரிவில் முதலிடம் பிடித்தார்.

    மாணவிகள் பிரிவில் சக்கத்த நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி பவிக்க்ஷாவும், பாட்டவயல் நடுநிலைப் பள்ளியின் மாணவி அனிதா செபஸ்டியன் ஆகியோர் முறையே 2,3-ம் இடங்களை பிடித்து செஸ்போட்டியை காண தகுதி பெற்றனர்.

    மாணவர்கள் பிரிவில் கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாண வன் புகழேந்தி, கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சரவன்குமார் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர்.

    போட்டிகளில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை மாவட்ட உதவிதிட்ட அலுவலர் குமார் தலைமையில் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டி–களுக்கான ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி இயக்குனர் ராஜேஷ் அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.முதன்மை நடுவராக நீலகிரி மாவட்ட சதுரங்க அமைப்பின் துணை செயலாளர் ஜுனைஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயக்குமார், சுரேஷ் உள்ளிட்டோர் கல நடுவர்களாக பணி–யாற்றினார்.

    ×