search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்"

    • கடந்த 2 ஆண்டுகளாக அமராவதி அணையின் நீர் இருப்பு தொடர்ந்து திருப்திகரமாக உள்ளது.
    • வம்பன் 8 மற்றும் வம்பன் 10 ரக உளுந்து விதைகள் 3 டன் இருப்பு உள்ளது.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு நெல், கரும்பு, வாழை, தென்னை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. போதிய விலையின்மை மற்றும் தண்ணீர் பற்றாக்குறை, கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இந்த பகுதிகளின் மிக முக்கிய பயிர்களாக விளங்கிய நெல், கரும்பு ஆகியவற்றின் சாகுபடிப் பரப்பு குறைந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அமராவதி அணையின் நீர் இருப்பு தொடர்ந்து திருப்திகரமாக உள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில் மீண்டும் நெல் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது பாசனத்துக்காக அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் கொழுமம், குமரலிங்கம், மடத்துக்குளம், கணியூர், காரத்தொழுவு, சோழமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாற்றங்கால் அமைத்து நெல் நடவு செய்வது மட்டுமல்லாமல் ஒருசில விவசாயிகள் நேரடி நெல் விதைப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நேரடி நெல் விதைப்பு எந்திரங்களையும் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் விதைகள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் போதிய அளவில் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆயக்கட்டு பாசனப்பகுதிகளில் சாகுபடி மேற்கொள்ளும் வகையில் கோ 51 ரக நெல் விதைகள் 12 டன் அளவுக்கு இருப்பு உள்ளது. மேலும் மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற வகையில் வம்பன் 8 மற்றும் வம்பன் 10 ரக உளுந்து விதைகள் 3 டன் இருப்பு உள்ளது. இதுதவிர நிலக்கடலை விதைகள் 3 டன் அளவுக்கு தயாராக உள்ளது.

    உரிய பரிசோதனைகள் முடிந்து சான்று பெற்ற பிறகு விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படும். மேலும் நெல், தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கான நுண்ணூட்டச் சத்துகள் போன்றவையும் இருப்பில் உள்ளது. எனவே தேவைப்படும் விவசாயிகள் மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அலுவலகத்தையோ அல்லது தங்கள் பகுதி வேளாண்மை அலுவலரையோ தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

    • சன்னரக நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
    • நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் சன்னரக நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து நெல் அரவைக்காக திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் குறுவை நெல் சாகுபடியை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
    • நெற்பயிருக்கு அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, நெல்லுக்கான நுண்ணூட்ட உரம் ஆகியவையும் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு உள்ளது.

    உடுமலை:

    உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

    அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் குறுவை நெல் சாகுபடியை விவசாயிகள் துவக்கியுள்ளனர். நாற்றங்கால் நடவு முறை, நெல் விதைப்பு முறையில் சாகுபடி மேற்கொள்கின்றனர். விவசாயிகளுக்கு தேவையான கோ 51 விதை நெல் 11 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.அதே போல் நெற்பயிருக்கு அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, நெல்லுக்கான நுண்ணூட்ட உரம் ஆகியவையும் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு உள்ளது.

    விவசாயிகள் இவற்றை வாங்கி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.   

    • மத்திய அரசு திட்டங்கள் மற்றும் நுண்ணீர் பாசனம் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
    • புதிய நெல் ரகங்கள் மற்றும் அதன் சிறப்பியல்புகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தின் கீழ் கிசான் மேளா வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    வேளாண்மை துறை மூலம் இடுபொருள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை திருவாரூர் வேளாண்மை துணை இயக்குனர் விஜயலட்சுமி தொடங்கி வைத்தார்.

    முன்னதாக வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் அனைவரையும் வரவேற்று வேளாண்மை துறை திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் இடுபொருட்கள் மானிய திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.

    அதனைத் தொடர்ந்து, வேளாண்மை துணை இயக்குனர் விஜயலட்சுமி ஆத்மா திட்டம், மத்திய அரசு திட்டங்கள் மற்றும் நுண்ணீர் பாசனம் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் தலைவர் ராதாகிருஷ்ணன் தற்போது உள்ள தட்பவெப்ப நிலைக்கு நெல், பருத்தி பயிர்களுக்கு வரக்கூடிய பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தார்.

    இணை பேராசிரியர் அருட்செல்வி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய நெல் ரகங்கள் மற்றும் அதன் சிறப்பியல்புகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.

    வலங்கைமான் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் திருச்செல்வன் தோட்டக்கலை துறை திட்டங்கள் பற்றி விளக்கத்துடன், ஊட்டமேற்றிய தொழு உரம் தயார் செய்தல் குறித்து பயிற்றுவித்தார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் விக்னேஷ் உழவன் செயலியின் பயன்பாடு பற்றியும், அதன் சிறப்பியல்புகள் பற்றியும் செயல்முறை விளக்கம் அளித்தார்.

    முடிவில் வலங்கைமான் வட்டார வேளாண்மை அலுவலர் சூரியமூர்த்தி கூறினார்.

    நிகழ்ச்சியில் தோட்டக்கலை அலுவலர் ரம்யா, உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவலிங்கம், ஏழுமலை, சரவணன், சிரஞ்சீவி, சிவானந்தம் மற்றும் பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் சதீஷ்குமார், பிரியங்கா ஆகியோர் செய்திருந்தனர்.

    • இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடியில் ஈடுபட வேண்டும்
    • 174 வகையான பாரம்பரிய நெல் ரக அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் 16-வது பாரம்பரிய நெல் திருவிழா ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ஆராய்ச்சி மையம் சார்பில் நேற்று தொடங்கியது.

    இதனை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி உழவர் சந்தை பகுதியில் இருந்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் பாரம்பரிய நெல் மீட்பாளர் நெல் ஜெயராமன் உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு நெல் கோட்டை வைத்து மாட்டு வண்டியில் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு விவசாயிகள் ஊர்வலமாக வந்து இத்திருவிழாவில் பங்கேற்றனர்.

    இந்த நெல் திருவிழாவில் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி தஞ்சை, நாகை, திருச்சி, தர்மபுரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடியில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட விவசாயிகளும் இந்த நெல் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

    பாரம்பரிய நெல் திருவிழாவில் பங்கேற்றவர்களுக்கு இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் அரங்கங்கள் அமைக்கப்பட்டு அவற்றை ஏராளமான விவசாயிகள் பார்வையிட்டனர்.

    நெல் திருவிழாவின் முக்கிய நோக்கமான இயற்கை பாரம்பரிய நெல் ரகங்களை பங்கேற்றுள்ள அனைத்து விவசாயிக ளுக்கும் 2 கிலோ இலவசமாக வழங்கப்பட்டு அவற்றை சாகுபடி செய்து அடுத்த ஆண்டு நான்கு கிலோவாக விவசாயிகள் திருப்பி அளிக்க உள்ளனர். இதன் மூலமாக பாரம்பரிய இயற்கை நெல் ரகங்கள் சுழற்சி முறையில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் பரவலாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • அமராவதி அணை பாசனத்தின் வாயிலாக நெல் பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது.
    • நெல்லை உலர வைத்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளது.

    உடுமலை :

    உடுமலை அருகே கல்லாபுரம் மற்றும் சுற்றுப்பகுதியில் அமராவதி அணை பாசனத்தின் வாயிலாக நெல் பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது. சீசன் சமயங்களில் அரசு கொள்முதல் மையம் அமைக்கப்படுவதில்லை.எனவே நெல்லை உலர வைத்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளது. ஆனால் அப்பகுதியில் போதிய உலர்கள வசதியில்லை. விளைநிலங்களிலுள்ள சிறு பாறைகள் மற்றும் இணைப்பு ரோடு பாலங்களில் நெல்லை காய வைக்க வேண்டிய நிலையில் அப்பகுதி விவசாயிகள் உள்ளனர்.

    கல்லாபுரத்தில் நெல்லை காய வைக்க உலர்களமும், இருப்பு வைக்க குடோன் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்த அரசுத்துறையினரும் நடவடிக்கை எடுக்காமல் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். 

    • லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்படும்.
    • 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக சென்னை கொருக்குப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் விளங்கி வருகிறது.

    இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    அது போக கோடை கால நெல் சாகுபடியும் நடைபெறும். அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படும்.

    பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.

    இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொதுவினி யோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

    இந்தநிலையில் இன்று பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    அந்த நெல் மூட்டைகள் சரக்குரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக சென்னை கொருக்குப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • நெல் வயல்களில் கருகல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது.
    • அரிசி இல்லாத நிலையில் கருகல் நோய் காணப்படுகிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு பகுதியில் தென்காசி சாலையில் உள்ள தேவதானம், சேத்தூர் போன்ற பகுதிகளில் ஏக்கர் கணக்கில் நெல் விளைந்த நிலையில் நெல்மணிகளுக்கு பதிலாக காய்ந்த நிலையில் அரிசி இல்லாத நிலையில் கருகல் நோய் காணப்படுகிறது. ஏக்கர் கணக்கில் இது பரவி வருவதால் இதை கட்டுப்படுத்துமாறு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில் ராஜபாளையம் வேளாண்மை துணை இயக்குநர் (விதை ஆய்வு) வனஜா, பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் விமலா, ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் திருமலைசாமி ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர். நெல் வயல்களில் சமீபத்தில் பரவி வரும் பாக்டீரியா இலை கருகல் நோயை கட்டுப்படுத்த நைட்ரஜன் உரத்தை அளவாக பயன்படுத்துதல், ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட்+டெட்ரா சைக்ஜின்-120 கிராம்+காப்பர் ஆக்ஸி குளோரைடு-500 கிராம் என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க கேட்டுக்கொண்டனர்.

    இனிமேல் ஏற்படக்கூடிய நோய்க்கு இந்த பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே காய்ந்த நிலையில் உள்ள வயல்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்குமாறு தேவதானம் சேர்த்து ஒரு பகுதி நெல் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    • விதை கொள்கலனில் விவர அட்டை உள்ளதா? என கவனித்து வாங்க வேண்டும்.
    • சான்று பெறாத விதைகளை விதைப்பதால் மகசூல் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

    நெல்லை:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்குநர் சுஜதாபாய் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    உரிமம் பெற்ற விற்பனை நிலையம்

    நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் தங்களது விதை தேவைகளுக்கு விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதை சான்று துறையினரால் சான்று செய்ய பெற்ற விதைகளை வாங்க வேண்டும்.

    விதை கொள்கலனில் விவர அட்டை உள்ளதா? என கவனித்து வாங்க வேண்டும். விவர அட்டைகளில் விதையின் காலக்கெடு தேதியை கவனித்து காலக்கெடு முடிவடையாத விதைப்பதற்கு போதிய அவகாசம் உள்ள விதைகளை வாங்க வேண்டும்.

    விதை சான்றுதுறை

    விதை சான்று துறையின் கீழ் அறிவிக்கப்பட்ட ரகங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். அவரவர் பகுதிக்கு ஏற்ற ரகமா, அந்த பருவத்திற்கு ஏற்ற ரகம்தானா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.

    விதைகள் வாங்கும் போது விற்பனை ரசீதை கண்டிப்பாக கேட்டு வாங்க வேண்டும்.

    விற்பனை ரசீதில் பயிர், ரகம், குவியல் எண் மற்றும் காலக்கெடு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பதை கவனித்து வாங்க வேண்டும். மேலும் விற்பனை ரசீதில் வாங்குபவர்கள் கண்டிப்பாக கையொப்பம் இட்டு வாங்க வேண்டும். விதையின் கொள்கலன் கிழி படாமல் அட்டைகள் பொருத்தி நன்றாக தைக்கப்பட்டு சீல் இடப்பட்டுள்ளதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    சான்று பெறாத உண்மை நிலை விதைகள் அல்லது விபர அட்டை இல்லாத விதைகளை வாங்கி விதைப்பு செய்தால் முளைப்பு மற்றும் மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே விவசாயிகள் விதைகள் வாங்கும் போது இவற்றை கவனத்தில் கொண்டால் விளைச்சல் பாதிப்புகள் இல்லாமல் அதிக மகசூல் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல் தூற்றுவது முதல் சாக்கு மூட்டையில் நெல்லை நிரப்பி தைப்பது வரை முழுவதும் எந்திரங்களை பயன்படுத்த முடிவு.
    • புதிய நியாய விலைக் கடைகளை உருவாக்குவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்பட்ட மேற் கூரையுடன் கூடிய நெல்சேமிப்பு தளங்களை உணவு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு துறை கூடுதல் தலைமைச் செயலர்
    ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நெல் சேமிப்புக் கிடங்கில் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து இழப்பு ஏற்படு வதைத் தடுப்பதற்காகத் தமிழகத்தில்
    213 இடங்களில் மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு தளங்கள் அமைக்கப்பட்டன. இதை இன்னும் மேம்படுத்துவது தொடர்பாக பணியாளர்களிடம் கலந்தாலோசனை செய்தோம். இதன் மூலம் பக்கவாட்டில் தார்பாய் மட்டும் போட்டால் போதும் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர் அருகே பஞ்சநதிக ்கோட்டையில் ரூ. 1 கோடி மதிப்பில் பரிசோதனை அடிப்படையில் நெல் கொள்முதல் பெருநிலையம் அமைக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.

    இதில், 400 டன்கள் கொள்ளளவு கொண்ட அனைத்து பணிகளுமே தானியங்கி மூலம் செயல்படுத்தும் விதமாக முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் நெல் தூற்றுவது முதல் சாக்கு மூட்டையில் நெல்லை நிரப்பி தைப்பது வரை முழுவதும் எந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்தப் பரிசோதனை வெற்றி பெற்றால், தொடர்ந்து இத்திட்டம் அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்லப்படும்.தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு 2.31 லட்சம் மெட்ரிக் டன்கள் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இதுவரை 35.73 லட்சம் மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டு, 4.41 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 7 ஆயிரத்து 891 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

    விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங் களில் அறுவடைப்பணிகள் நடைபெறுகின்றன.தமிழகத்தில் 35 ஆயிரத்து 941 நியாய விலைக் கடைகள் நடத்தப்படுகின்றன. புதிய நியாய விலைக் கடைகளை உருவாக்குவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    கூட்டுறவுத் துறை மூலம் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு விவசாயக் கடனாக ரூ. 13 ஆயிரத்துக்கு 442 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டு தமிழக முதல்வர் ரூ. 14 ஆயிரம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளார்.

    நிகழாண்டு உலக சிறுதானிய ஆண்டாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, நீலகிரி உள்பட 2 மாவட்டங்களில் கேழ்வரகு சாகுபடி தொடங்கப் படுகிறது. கேழ்வரகை நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாகவும், மற்ற சிறுதானிய பயிர்களைக் கூட்டுறவு மூலமாகவும் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை பதிவாகாமல் போகும் நிலையில், அவர்களைத் திருப்பி அனுப்பாமல், அதற்கென உள்ள படிவத்தை நிறைவு செய்து கொடுத்து, பொருட்களைச் பெற்றுச் செல்லலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் பிரபாகரன், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • 1,000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன.
    • 21 வேகன்களில் அரவைக்காக ராஜபாளையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கி வரும் தஞ்சையில் விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோக திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.

    அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,000 டன் நெல் ஏராளமான லாரிகளில் தஞ்சை ரெயில் நிலை ய த்துக்கு எடுத்து வரப்பட்டன.

    பின்னர் நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலின் 21 வேகன்களில் அரவைக்காக ராஜபாளை யத்துக்கு அனுப்பி வைக்கப்ப ட்டது.

    • பூதலூர், மருதங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரைஸ் மில்லில் திடீரென ஆய்வு செய்தார்.
    • நெல் சரியான முறையில் அரவை செய்யப்படுகிறதா? என கேட்டறிந்தார்.

    தஞ்சாவூர்:

    தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அருண் உத்தரவுப்படி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா,

    தஞ்சை சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் அறிவுறுத்தல்படி இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் தஞ்சை மாவட்டம் வல்லம், பூதலூர்,

    மருதங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரைஸ் மில்லில் திடீரென ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    நெல் சரியான முறையில் அரவை செய்யப்படுகிறதா? முறைகேடு ஏதும் நடைபெறுகிறதா? என ஆய்வு செய்தனர்.

    ×