என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வலங்கைமான் வட்டாரத்தில் 'கிசான் மேளா'
- மத்திய அரசு திட்டங்கள் மற்றும் நுண்ணீர் பாசனம் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
- புதிய நெல் ரகங்கள் மற்றும் அதன் சிறப்பியல்புகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
நீடாமங்கலம்:
வலங்கைமான் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தின் கீழ் கிசான் மேளா வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
வேளாண்மை துறை மூலம் இடுபொருள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை திருவாரூர் வேளாண்மை துணை இயக்குனர் விஜயலட்சுமி தொடங்கி வைத்தார்.
முன்னதாக வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் அனைவரையும் வரவேற்று வேளாண்மை துறை திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் இடுபொருட்கள் மானிய திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.
அதனைத் தொடர்ந்து, வேளாண்மை துணை இயக்குனர் விஜயலட்சுமி ஆத்மா திட்டம், மத்திய அரசு திட்டங்கள் மற்றும் நுண்ணீர் பாசனம் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் தலைவர் ராதாகிருஷ்ணன் தற்போது உள்ள தட்பவெப்ப நிலைக்கு நெல், பருத்தி பயிர்களுக்கு வரக்கூடிய பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தார்.
இணை பேராசிரியர் அருட்செல்வி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய நெல் ரகங்கள் மற்றும் அதன் சிறப்பியல்புகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
வலங்கைமான் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் திருச்செல்வன் தோட்டக்கலை துறை திட்டங்கள் பற்றி விளக்கத்துடன், ஊட்டமேற்றிய தொழு உரம் தயார் செய்தல் குறித்து பயிற்றுவித்தார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் விக்னேஷ் உழவன் செயலியின் பயன்பாடு பற்றியும், அதன் சிறப்பியல்புகள் பற்றியும் செயல்முறை விளக்கம் அளித்தார்.
முடிவில் வலங்கைமான் வட்டார வேளாண்மை அலுவலர் சூரியமூர்த்தி கூறினார்.
நிகழ்ச்சியில் தோட்டக்கலை அலுவலர் ரம்யா, உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவலிங்கம், ஏழுமலை, சரவணன், சிரஞ்சீவி, சிவானந்தம் மற்றும் பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் சதீஷ்குமார், பிரியங்கா ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்