search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதை விற்பனை"

    • சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதியில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு தேவையான பருத்தி, மக்காச்சோளம் விதைகள் உள்ளது.
    • பதிவுச்சான்று விதை உற்பத்தியாளரால் விண்ணப்பம் செய்து பெறப்படுகிறது.

    தென்காசி:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதாபாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதியில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு தேவையான பருத்தி, மக்காச்சோளம் விதைகள் உள்ளது.

    விதை விற்பனை நிலையங்களில் பதிவுச்சான்று, முளைப்புத்திறன் சான்று பராமரிக்கப்பட வேண்டும். அறிவிக்கை செய்யப்படாத அனைத்து பயிர் ரகங்களுக்கும் பதிவுச்சான்று, விதைச்சான்று, அங்ககச்சான்று இயக்குனரால் 3 ஆண்டுகளுக்கு அனுமதித்து வழங்கப்படுகிறது. மேற்படி பதிவுச்சான்று விதை உற்பத்தியாளரால் விண்ணப்பம் செய்து பெறப்படுகிறது.

    விதை கட்டுப்பாட்டு சட்டம் 1983 பிரிவு 13(1)-ன்படி விதை விற்பனை நிலையங்களில் அறிவிக்கை செய்யப்படாத நெல், மக்காச்சோளம், காய்கனி உள்ளிட்ட அனைத்து பயிர் ரகங்களும் பதிவுச்சான்று, முளைப்புத்திறன் பரிசோதனை சான்று பெறப்பட்ட பின்னரே விற்பனை செய்யப்பட வேண்டும்.

    மேற்படி அறிவுரைகளை பின்பற்றாத விதை விற்பனையாளர்கள் மீது விதைச்சட்டம் 1966, விதைக்கட்டுப்பாட்டு சட்டம் 1983-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விதை கொள்கலனில் விவர அட்டை உள்ளதா? என கவனித்து வாங்க வேண்டும்.
    • சான்று பெறாத விதைகளை விதைப்பதால் மகசூல் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

    நெல்லை:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்குநர் சுஜதாபாய் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    உரிமம் பெற்ற விற்பனை நிலையம்

    நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் தங்களது விதை தேவைகளுக்கு விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதை சான்று துறையினரால் சான்று செய்ய பெற்ற விதைகளை வாங்க வேண்டும்.

    விதை கொள்கலனில் விவர அட்டை உள்ளதா? என கவனித்து வாங்க வேண்டும். விவர அட்டைகளில் விதையின் காலக்கெடு தேதியை கவனித்து காலக்கெடு முடிவடையாத விதைப்பதற்கு போதிய அவகாசம் உள்ள விதைகளை வாங்க வேண்டும்.

    விதை சான்றுதுறை

    விதை சான்று துறையின் கீழ் அறிவிக்கப்பட்ட ரகங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். அவரவர் பகுதிக்கு ஏற்ற ரகமா, அந்த பருவத்திற்கு ஏற்ற ரகம்தானா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.

    விதைகள் வாங்கும் போது விற்பனை ரசீதை கண்டிப்பாக கேட்டு வாங்க வேண்டும்.

    விற்பனை ரசீதில் பயிர், ரகம், குவியல் எண் மற்றும் காலக்கெடு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பதை கவனித்து வாங்க வேண்டும். மேலும் விற்பனை ரசீதில் வாங்குபவர்கள் கண்டிப்பாக கையொப்பம் இட்டு வாங்க வேண்டும். விதையின் கொள்கலன் கிழி படாமல் அட்டைகள் பொருத்தி நன்றாக தைக்கப்பட்டு சீல் இடப்பட்டுள்ளதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    சான்று பெறாத உண்மை நிலை விதைகள் அல்லது விபர அட்டை இல்லாத விதைகளை வாங்கி விதைப்பு செய்தால் முளைப்பு மற்றும் மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே விவசாயிகள் விதைகள் வாங்கும் போது இவற்றை கவனத்தில் கொண்டால் விளைச்சல் பாதிப்புகள் இல்லாமல் அதிக மகசூல் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விதை விற்பனை நிலையங்களில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநர் மற்றும் விதை ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • உரிய தகவல்களுடன் விதை விற்பனை பட்டியல் ஆகிய ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும்.

    ஈரோடு:

    மொடக்குறிச்சி வட்டார மையப்பகுதிகளில் அமைந்துள்ள விதை விற்பனை நிலையங்களில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநர் சுமதி மற்றும் ஈரோடு விதை ஆய்வாளர் நவீன் திடீர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின் போது உரிய ஆவணங்களான பதிவுச் சான்றிதழ், முளைப்புத்திறன் அறிக்கை இல்லாத விதை குவியல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டறியப்பட்டு, 20 விதை குவியல்களில் விதை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. அதன் மதிப்பு 958 கிலோ விதைகளின் மதிப்பு சுமார் ரூபாய் 6,34,000 ஆகும்.

    இது குறித்து ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநர் சுமதி கூறுகையில்,

    உரிய ஆவணங்கள் இல்லாமல் விதை விற்பனை செய்வது விதைச் சட்டம் 1966 மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் கீழ் விதி மீறலாகும். விதி மீறும் விதை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

    மேலும் விதை விலை பட்டியல் பலகை, விதை கொள்முதல் பட்டியல், விதை இருப்பு பதிவேடு, உரிய தகவல்களுடன் விதை விற்பனை பட்டியல் ஆகிய ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    • திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 12 வணிகா்கள் வாங்க வந்திருந்தனா்.
    • ஒரு குவிண்டால் ரூ. 7,550 முதல் ரூ. 10,102 வரை விற்பனையானது.

    மூலனூர்:

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 58 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 233 விவசாயிகள் தங்களுடைய 2,160 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 720 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 12 வணிகா்கள் வாங்க வந்திருந்தனா். ஒரு குவிண்டால் ரூ. 7,550 முதல் ரூ. 10,102 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.8,450. கடந்த வார சராசரி விலை ரூ. 8,650. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 58 லட்சம்.

    விற்பனைக் கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் ஆா்.பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் செய்திருந்தனா்.

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 14.46 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

    இந்த வார ஏலத்துக்கு அரவக்குறிச்சி, விஸ்வநாதபுரி, மேட்டுவலசு, வடுகபட்டி, மோளபட்டி, பெத்தாம்பூா் உள்ளிட்ட ஊா்களில் இருந்து 27 விவசாயிகள் தங்களுடைய 451 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 22 டன். ஈரோடு, காரமடை, சித்தோடு, பூனாட்சி, காங்கயத்தில் இருந்து 8 வணிகா்கள் வாங்குவதற்காக வந்திருந்தனா்.

    ஒரு கிலோ ரூ.57.27 முதல் முதல் ரூ. 70.37 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 66.59. கடந்த வார சராசரி விலை ரூ.65.61. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 14.46 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

    • விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் தலைமையில் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • விற்பனை நிலையங்களில் இருந்து விதை மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    2022-23 பிசான பருவத்தில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதி விதை விற்பனை நிலையங்களில் மக்காச்சோளம் மற்றும் பருத்தி விதைகள் வரப்பெற்றுள்ளது.

    வள்ளியூர் விதை ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், நெல்லை விதை ஆய்வாளர் ஜெயசுதா, தென்காசி விதை ஆய்வாளர் சண்முகையா, நாகர்கோவில் விதை ஆய்வாளர் கோமதி மற்றும் சங்கரன்கோவில் விதை ஆய்வாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட குழுவினர் விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் தலைமையில் திருவேங்கடம், கலிங்கப்பட்டி, குலசேகரப்பேரி, ஆலமநாயக்கர்பட்டி, அ.கரிசல்குளம் மற்றும் மைப்பாறை பகுதியில் உள்ள 14 விதை விற்பனை நிலையங்களில் கடந்த 12-ந்தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின்போது விதை கொள்முதல் பட்டியல், ரகம், பதிவுச்சான்று மற்றும் குவியல் முளைப்புத்திறன் பரிசோதனை அறிக்கை ஆகியன சரிபார்க்கப்பட்டது. மேற்படி ஆவணங்கள் பெறப்படாத ரூ.12,19,000 மதிப்பிலான 19 மக்காச்சோளம் விதைகள் மற்றும் பருத்தி விதை குவியல்களுக்கு விற்பனை தடை விதிக்கப்பட்டது. மேலும் விற்பனை நிலையங்களில் இருந்து 127 மக்காச்சோளம் மற்றும் பருத்தி விதைகளில் அலுவலக விதை மாதிரி எடுக்கப்பட்டு முளைப்புத்திறன் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் விதை ரகம், காலாவதி நாள், பயிரிட ஏற்ற பருவம் ஆகிய விபரங்களை விதை பொட்டலங்களின் விபர அட்டையில் சரிபார்த்து பின், உரிய ரசீது பெற்று, தரமான விதைகளை வாங்கி பயன்பெறுமாறு நெல்லை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×