search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் இருந்து ராஜபாளையத்துக்கு அரவைக்காக 1000 டன் நெல் அனுப்பி வைப்பு
    X

    தஞ்சையில் இருந்து ராஜபாளையத்துக்கு அரவைக்காக 1000 டன் நெல் அனுப்பி வைப்பு

    • 1,000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன.
    • 21 வேகன்களில் அரவைக்காக ராஜபாளையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கி வரும் தஞ்சையில் விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோக திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.

    அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,000 டன் நெல் ஏராளமான லாரிகளில் தஞ்சை ரெயில் நிலை ய த்துக்கு எடுத்து வரப்பட்டன.

    பின்னர் நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலின் 21 வேகன்களில் அரவைக்காக ராஜபாளை யத்துக்கு அனுப்பி வைக்கப்ப ட்டது.

    Next Story
    ×