search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்வரத்து"

    • புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 362 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1862 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 70 கனஅடி தண்ணீர் வருகிறது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து கடந்த வாரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. அப்போது குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. பின்னர் மழை இல்லாததால் ஏரிகளுக்கு நீர் வரத்து குறைந்நது.

    இந்நிலையில் குமரிக்கடல் மற்றும் தமிழக கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை விடிய, விடிய நீடித்தது. இன்று காலையும் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 362 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. இதில் 2726மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 189 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1080மி.கனஅடி. இதில் 673மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 186 கனஅடி தண்ணீர் வருகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645மி.கனஅடி. இதில் 3115 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வரும் 162 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 21.98 அடிக்கு தண்ணீர் உள்ளது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1862 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 70 கனஅடி தண்ணீர் வருகிறது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 435 மி.கனஅடிதண்ணீர் உள்ளது. ஏரிக்கு 10 கனஅடி தண்ணீர் வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 5 ஏரிகளிலும் மொத்தம் 11757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் 8811 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பொன்னேரி பகுதியில் பெய்த பலத்த மழை காணமாக ரெயில்வே சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குளம் போல் காணப்படுகிறது. தடபெரும்பாக்கம் காலனி, துரைசாமி நகர் பகுதியில் தாழ்வான இடங்களில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. நேற்று இரவு முதல் பொன்னேரி மீஞ்சூர் சோழவரம், திருப்பாலைவனம் பழவேற்காடு மணலி புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    • நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிப்பு
    • திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்துவரும் கன மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது.

    மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் நிரம்பி வழிகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட பாசன குளங்களும் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பி வழி கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ் வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    நாகர்கோவில், கன்னி மார், குழித்துறை பகுதிகளில் நேற்று இரவும் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளிலும், மழை நீடித்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை யின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேர மும் அணை யை கண்காணித்து வரு கிறார்கள்.

    அணையில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உபரிநீர் வெளியேற்றப்படலாம் என்பதால் கோதையாறு, குழித்துறை ஆற்றின் கரை யோர பகுதி மக்கள் பாது காப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகள் நிரம்பி வருவதையடுத்து கலெக்டர் ஸ்ரீதர் அணையை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அணையின் நீர் இருப்பு விவரங்களை அதிகாரியிடம் கேட்டறிந்தார். அணையில் இருந்து உபரிநீர் வெளி யேற்றப்படும்போது கரை யோர பகுதி மக்கள் பாதிக் கப்பட வாய்ப்புள்ளதால் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கு மாறு அறிவுறுத்தினார்.

    திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு கடந்த 5 நாட்களாக தடை விதிக்கப் பட்டிருந்த நிலையில் தற் போது அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. இதையடுத்து அருவியில் குளிப்பதற்கு இன்று அனுமதி அளிக்கப் பட்டது. சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியல் இட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 44.49 அடி யாக இருந்தது. அணைக்கு 1023 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 452 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 72.79 அடியாக உள்ளது. அணைக்கு 440 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 230 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது.

    சிற்றாறு 1 அணையில் இருந்தும் 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1 அணைகளில் இருந்து 782 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தோவாளை, அனந்தனார் சானல், நாஞ்சில்நாடு புத்தனார் சானல்களில் திறந்து விடப் பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பழையாறு, வள்ளியாறுகளிலும், வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழைக்கு நேற்று மேலும் 2 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.

    • கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
    • அதிகபட்சமாக குருந்தன்கோடு பகுதியில் 36.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர் பிடிப்பு பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து மழை நீடித்து வருவதால், அணை பகுதிக ளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    இதனால் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவும், தொடர் மழையினாலும் கோதை யாறு, வள்ளியாறு, பரளி யாறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    நேற்று அதிகபட்சமாக குருந்தன்கோடு பகுதியில் 36.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. முக்கடல் அணை பகுதியில் 29.2 மில்லி மீட்டரும், மாம்பழத்துறை யாறில் 12.3 மில்லி மீட்டரும், பூதப்பாண்டியில் 11.4 மில்லி மீட்டரும் மழை பெய்து உள்ளது.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று 41.69 அடியாக இருந்தது. அணைக்கு 402 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 172 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொண்ட பெருஞ்சாணி அணை 72 அடியை எட்டி வருகிறது.இன்று காலை அணையின் நீர்மட்டம் 71.55 அடியாக உள்ளது. அணைக்கு 586 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார் 1 அணை நீர்மட்டம் 15.54 அடியாக உள்ளது. அணைக்கு 188 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவை எட்டி விட்டது.

    அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதை கருத்தில் கொண்டு, கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
    • பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் தற்போது 70.55 அடியாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிறைந்தன. அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. சிற்றாறு-1, சிற்றாறு-2 மற்றும் மாம் பழத்துறையாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால், அந்த அணைகளுக்கு வந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டது.

    இதனால் திற்பரப்பு அருவி, மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் நகர் பகுதிகளில் மழை சற்று குறைந்தது. ஆனால் மலையோர பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அடையாமடையில் 58 மில்லி மீட்டரும், பெருஞ்சாணி அணை பகுதியில் 42.4 மில்லி மீட்டரும், புத்தன் அணை பகுதியில் 42 மில்லி மீட்டரும் பெய்தது.

    இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்டபெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் தற்போது 70.55 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 581 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 41.10 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 568 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 220 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.

    வழக்கமாக பேச்சிப்பாறை அணையில் 42 அடியும், பெருஞ்சாணி அணையில் 72 அடியும் தண்ணீர் எட்டப்பட்டால், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். தற்போது அந்த அளவை அணைகள் நெருங்கி வருவதால் நீர் மட்டத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    தொடர்மழையின் கார ணமாக திற்பரப்பு அருவியி லும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு ஆனந்தமாக நீராட ஏரா ளமானோர் குவிந்துள்ள னர். சனி, ஞாயிறு மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணி கள் வந்துள்ளதால் திற்ப ரப்பு அருவி, தடாகம், பூங்கா போன்றவை களை கட்டி காணப்பட்டது.மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    அடையாமடை 58, பெருஞ்சாணி 42.4, புத்தன்அணை 42, பாலமோர் 41.4, திற்பரப்பு 37.5, சுருளகோடு 36.4, சிற்றாறு 1-35.2, களியல் 29.6, தக்கலை 26.3, கோழிப்போர்விளை 23.4, சிற்றாறு-2 (சிவலோகம்) 22.4, நாகர்கோவில் 21.4, குழித்துறை 18.8, முள்ளங் கினாவிளை 18.6, பூதப் பாண்டி 15.2, மாம்பழத்து றையாறு 12, முக்கடல் அணை 8.6, ஆணைக்கிடங்கு 8.4, கன்னிமார் 6.2, இரணி யல் 6.2, பேச்சிப்பாறை 4, குளச்சல் 3.

    • குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

    சேலம்:

    கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவ மழை போதுமான அளவு பெய்யவில்லை. மேலும் கர்நாடக அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீர் திறக்கப்படவில்லை.

    இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் கடந்த 10-ந் தேதி காலை 6 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை 15 ஆயிரத்து 260 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 15 ஆயிரத்து 433 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    கடந்த 10-ந் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30.99 அடியாக இருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 41.1 அடியாக உயர்ந்தது. இதனால் கடந்த 5 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது குறிப்பிட தக்கது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    • பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 28 அடியாக உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நகர் பகுதிகள் மட்டுமின்றி மலையோர பகுதிகளிலும் மழை நீடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக விடிய விடிய மழை நீடித்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, பூதப்பாண்டி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைகளுக்கு தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது.

    பேச்சிப்பாறை அணை நேற்று 2½ அடி உயர்ந்த நிலையில் மழையின் காரணமாக இன்று மேலும் 3 அடி நீர்மட்டம் அதிகரித்து ள்ளது. இதன்மூலம் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 28 அடியாக உள்ளது. அணைக்கு 3 ஆயிரத்து 117 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. விநாடிக்கு 2 ஆயிரத்து 677 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் 52.60 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 5 அடி அதிகரித்த நிலையில் இன்று மேலும் 5 அடி உயர்ந்துள்ளது. பெருஞ்சாணி அணையில் கடந்த 2 நாட்களில் மட்டும் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சிற்றாறு-1, சிற்றாறு-2 அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகமாகவே உள்ளது. இந்த அணைகளின் நீர்மட்டம் 13 அடியை கடந்து விட்டதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க ப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக களியல் பகுதியில் 74.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தொட ர்ந்து விடிய விடிய பெய்து வரும் மழையின் காரணமாக நீர்நிலைகளிலும் தண்ணீர் அதிக அளவு உள்ளது.

    குழித்துறை தாமிரபரணி ஆறு, குஸ்தியாறு, கோதை யாறு, மோதிரமலை ஆறு போன்றவற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் கரையோரம் வசிப்பவர்கள், பாதுகா ப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வேர்கிளம்பி பேரூராட்சி க்குட்பட்ட செங்கோடி பகுதியில் சிவன்கோவில் அருகில் உள்ள அரச மரம் நேற்று காற்று பலமாக வீசியதில் வேரோடு சாய்ந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் சாலையை கடந்து செல்ல முடியாத நிலமை ஏற்பட்டது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரும் சிரம த்துக்கு ஆளானர்கள். இந்த தகவல் அறிந்ததும் வேர்கி ளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர்ஜெபசிங்குமார் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் அந்த அரச மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சரி செய்தனர். மாவட்டம் முழுவதும் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    களியல் 74.2, பாலமோர் 65.6, பேச்சிப்பாறை 57.6, பெருஞ்சாணி 53.4, புத்தன் அணை 53, திற்பரப்பு 40.4, சுருளோடு 38.6, அடை யாமடை 35.1, சிற்றாறு 1-34.6, கொட்டாரம் 30.6, சிற்றாறு 2-30.4, கன்னிமார் 26.8, குழித்துறை 24, மாம்பழத்துறையாறு 22.5, பூதப்பாண்டி22.2, ஆனை கிடங்கு 20.2, மயிலாடி 19.4, நாகர்கோவில் 16.2, முள்ளங்கி னாவிளை 15.4, கோழிப்போ ர்விளை 12.5, தக்கலை 11.2, குருந்தன்கோடு 8, ஆரல்வா ய்மொழி 7.4, குளச்சல் 6.4, முக்கடல் அணை 6.4, இரணி யல் 3.

    • களியலில் 69.2 மில்லி மீட்டர் பதிவு
    • தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களும் நிரம்ப தொடங்கியுள்ளன.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 3 வாரங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது.

    இந்த நிலையில் நேற்று காலையில் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இரவும் விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. களியல் பகுதியில் நேற்று மாலை 4 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் சாலை களில் வெள்ளம் பெருக்கெ டுத்து ஓடியது. இரவும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.

    இன்று காலையிலும் வானம் மப்பும் மந்தார முமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. அங்கு அதிகபட்ச மாக 69.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோழிப்போர்விளை, கொட்டாரம், மயிலாடி, குழித்துறை, சுருளோடு, தக்கலை, குளச்சல், இரணி யல், ஆணைக்கிடங்கு மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக குளிர் காற்று வீசி வருகிறது. இன்று காலையிலும் மழை பெய்து கொண்டே இருந்தது. திற்பரப்பு அருவி பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதியிலும், மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு வரக்கூடிய நீர்வ ரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 783 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.28 அடியாக இருந்தது. அணைக்கு 1134 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.05 அடியாக உள்ளது. அணைக்கு 447 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களும் நிரம்ப தொடங்கியுள்ளன.

    300-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பி வழி கிறது. குளங்கள் நிரம்பி வழிவதையடுத்து விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 57.6, பெருஞ்சாணி 27.6, சிற்றாறு 1-30.4, சிற்றாறு 2- 28.2, பூதப்பாண்டி 30.6, களியல் 69.2, கன்னிமார் 32.2, கொட்டாரம் 16.2, குழித் துறை 35.8, மைலாடி 20.8, நாகர்கோவில் 2.4, புத்தன் அணை 26.8, சுருளோடு 31.6, தக்கலை 28.4, குளச்சல் 12.2, இரணியல் 26, பாலமோர் 60.4, மாம்பழத்து றையாறு 26, திற்பரப்பு 65.7, ஆரல்வாய்மொழி 7.2, கோழிபோர்விளை 50.4, அடையாமடை 33.1, குருந் தன்கோடு 42, முள்ளங்கினா விளை 25.4, ஆணைகிடங்கு 22.4, முக்கடல் 17.

    • தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை விடுவிக்கும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு தமிழகம் கோரியுள்ளது.
    • டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து சுரங்க நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஜூன், ஜூலை மாதங்களுக்கான 44 டி.எம்.சி. தண்ணீரை திறக்கவில்லை. இதையடுத்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை விடுவிக்கும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு தமிழகம் கோரியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் என அந்த மாநில அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த 16ந்தேதி (புதன்கிழமை) கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 11 ஆயிரத்து 602 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 6 ஆயிரத்து 25 கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    தொடர்ந்து நேற்று (17ந்தேதி) கிருஷ்ணராஜ சாகர் அணையில் 15 ஆயிரத்து 184 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 6 ஆயிரத்து 825 கன அடி தண்ணீரும் என மொத்தம் 22 ஆயிரத்து 9 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து இன்று நீர் திறப்பு குறைக்கப்பட்டு கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 13 ஆயிரத்து 145 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீரும் என மொத்தம் 18 ஆயிரத்து 145 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 552 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 3 ஆயிரத்து 260 கன அடியாக உயர்ந்தது. பின்னர் நேற்று மாலை 9 ஆயிரத்து 394 கன அடியாக அதிகரித்தது. இன்று காலையில் மேலும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 9 ஆயிரத்து 938 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து சுரங்க நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர தொடங்கி உள்ளது. நேற்று காலை 53.15 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 53.50 அடியாக உயர்ந்தது. அணையில் நீர் இருப்பு 20.08.டி.எம்.சி ஆக உள்ளது

    மேலும் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேட்டூர் அணை நீர்மட்டம் 53.50 அடியாக உள்ளதால் பண்ணவாடியில் மூழ்கியிருந்த நிலப்பரப்பு பகுதிகள் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்ட பகுதியாக மாறி பாளம் பாளமாக வெடித்து காணப்படுகிறது.

    தண்ணீர் வற்றிப்போன நீர் தேக்க பகுதிகள் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளன. இந்த நிலப்பரப்புகளில் கால்நடை தீவனங்கள் மற்றும் புற்கள் அதிகளவில் முளைத்து பார்ப்பதற்கு பசுமையான மேய்ச்சல் நிலமாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளை இந்த பகுதிகளில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.

    • கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லை வந்தடைந்தது.
    • இதனால் நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

    தர்மபுரி:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கேரளா மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. இதனால் இந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவான 124 அடியில் தற்போது 100 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 48 ஆயிரத்து 25 கனஅடி தண்ணீர் வருகிறது. இந்த அணையில் இருந்து வினாடிக்கு 2,680 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கபினி அணை தனது மொத்த கொள்ளளவான 84 அடியில் தற்போது 80 அடியை எட்டி உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரத்து 896 கனஅடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து பாதுகாப்பு கருதி வினாடிக்கு 11,250 கனஅடி தண்ணீர் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 13 ஆயிரத்து 930 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேற்று ஒகேனக்கல்லை வந்தடைந்தது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

    அதன்படி நேற்று மாலை 7 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
    • ஒகேனக்கல் காவிரியில் நேற்று விநாடிக்கு 500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1,500 கனஅடியாக அதிகரித்தது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் நேற்று விநாடிக்கு 500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1,500 கனஅடியாக அதிகரித்தது.

    அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 199 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 142 கன அடியாக குறைந்துள்ளது,

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக இருப்பதால்நீ ர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது.

    நேற்று 74.85 அடியாக இருந்த நீர்மட்டம்இ ன்று காலை 73.90 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 36.14 டி.எம்.சியாக உள்ளது. 

    • காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
    • நேற்று 89.51 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 88.58 அடியாக சரிந்துள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து விநாடிக்கு 800 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலையும் அதே அளவில் நீடிக்கிறது.

    அதேசமயம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 121 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 117 கன அடியாக குறைந்துள்ளது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    நீர் வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 89.51 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 88.58 அடியாக சரிந்துள்ளது.

    • ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 15-வது நாளாக இன்று நீர்வரத்து விநாடிக்கு 1000 கன அடியாக நீடிக்கிறது.
    • டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 15-வது நாளாக இன்று நீர்வரத்து விநாடிக்கு 1000 கன அடியாக நீடிக்கிறது.

    அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 153 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று 233 கன அடியாக அதிகரித்துள்ளது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து குறைவாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 95.53 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 94.82 அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.

    தென்மேற்கு பருவமழை கை கொடுத்தால் மட்டுமே, சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து முழுமையாக தண்ணீர் கிடைக்கும் என்பதால் டெல்டா விவசாயிகள் மழையை எதிர்நோக்கி உள்ளனர்.

    ×