search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மில்லி மீட்டர்"

    • குருந்தன் கோட்டில் 58.4 மில்லி மீட்டர் பதிவு
    • சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் இதமான குளிர் காற்று வீசி வருகிறது. குமரி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்ச ரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலையில் மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

    இரணியல் பகுதியில் மாலை 5 மணிக்கு வானத் தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அதன்பிறகு இடி-மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது.

    சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மின்னல் கண்ணை பறிக்கும் வகையிலும், இடிச்சத்தம் காதை பிளக்கும் வகையிலும் இருந்தன. மழைக்கு மரங்க ளும் முறிந்து விழுந்து மின்சாரமும் தடைப்பட்டது.

    குருந்தன்கோட்டிலும் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 58.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கோழிப்போர் விளை, தக்கலை, சுருளோடு, பூதப்பாண்டி, அடையா மடை, ஆணைக்கிடங்கு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி பகுதிகளில் சாரல் மழை பெய்தது. ஏற்கனவே பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, மாம்பழத்துறையாறு, முக்கடல், சிற்றாறு அணை கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளதை யடுத்து அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்கா ணித்து வருகிறார்கள். அணைக்கு வரக்கூடிய நீர்வ ரத்திற்கு ஏற்ப தண்ணீரை வெளியேற்றவும் நட வடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.19 அடியாக இருந்தது. அணைக்கு 321 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 173 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.66 அடியாக உள்ளது. அணைக்கு 323 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 400 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது. திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வரு வதால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது.

    அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து உபரிநீர் வெளி யேற்றப்படும் போது அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்ப தால் பேரூராட்சி நிர்வாகம் அதை கண்காணித்து வரு கிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-பேச்சிப்பாறை 4.2, பெருஞ்சாணி 3.6, சிற்றார் 1-4.2, சிற்றார் 2-10.6, பூதப்பாண்டி 4.6, களியல் 16.2, கன்னிமார் 4.2, கொட்டாரம் 2.2, குழித்துறை 22.2, மயிலாடி 2.2, நாகர்கோவில் 2, புத்தன் அணை 2, சுருளோடு 5.2, தக்கலை 44, குளச்சல் 18.6, இரணியல் 53, பாலமோர் 8.2, மாம்பழத்துறையாறு 30, கோழிப்போர்விளை 54.2, அடையாமடை 2, குருந்தன் கோடு 58.4, முள்ளங்கினா விளை 13.4, ஆணைக்கிடங்கு 29.2, முக்கடல் 24.

    • மழைக்கு மேலும் 8 வீடுகள் இடிந்தது
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.73 அடியாக உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. களியல், புத்தன் அணை, சிற்றாறு-2, திற்பரப்பு பகுதிகளில் மழை பெய்தது. சிற்றாறு 2-ல் அதிகபட்சமாக 22.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகள் நிரம்பி வருவதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகி றார்கள். பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 42.11 அடி யாக உள்ளது. அணைக்கு 341 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 173 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.73 அடியாக உள்ளது. அணைக்கு 376 கன அடிதண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 350 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது.

    சிற்றாறு 1- அணை நீர்மட்டம் 15.28 அடியாகவும், சிற்றாறு 2- அணை நீர்மட்டம் 15.38 அடியாகவும் பொய்கை அணை நீர்மட்டம் 8.60 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறை யாறு நீர்மட்டம் முழு கொள்ளவான 54.12 அடியாக உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்ப டும் முக்கடல் அணையும் முழு கொள்ளளவான 25 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. மாவட்டம் முழு வதும் கடந்த 2 மாதமாக கொட்டி தீர்த்த மழைக்கு 150- க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந் துள்ளன.

    இந்த நிலையில் நேற்று மேலும் 8 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அகஸ்தீஸ்வ ரம் தாலுகாவில் 2 வீடு களும், கிள்ளியூர், தோவா ளை தாலுகாவில் தலா ஒரு வீடும், திருவட்டார் தாலுகா வில் 4 வீடுகளும் இடிந்து விழுந்து உள்ளன.

    • திற்பரப்பில் தண்ணீர் கொட்டுகிறது
    • பேச்சிப்பாறை அணை 42 அடியை எட்டுகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பாசன குளங்கள், அணைகள் நிரம்பி வழிகிறது. தொடர்ந்து மழை பெய்வ தால் மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. குளச்சல் பகுதியில் நேற்று மாலை முதல் பரவலாக விட்டுவிட்டு மழை பெய் தது. இரவும் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 62.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது.

    இரணியல், ஆரல்வாய் மொழி, கோழிப்போர் விளை, முள்ளங்கினா விளை, குழித்துறை, களியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதி யான பாலமோர் பகுதியில் கொட்டி தீர்த்துவரும் மழை யின் காரணமாக அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    பேச்சிப்பாறை, மாம் பழத்துறையாறு, முக்கடல், சிற்றாறு அணைகள் ஏற்கனவே நிரம்பி வழி கின்றன. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71 அடியை எட்டியதையடுத்து ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட் டுள்ளது.

    இந்த நிலையில் பேச்சிப் பாறை அணையின் நீர்மட்ட மும் வெகுவாக உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று மாலைக் குள் 42 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அணை நீர்மட்டம் 42 அடி எட்டியதும் ஆற்றின் கரையோர பொதுமக்க ளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவதற்கான ஏற்பாடுகளை பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    இதனால் அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகி றார்கள். திற்பரப்பு அருவி பகுதியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. விடு முறை தினமான இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பிற்கு வந்திருந்த னர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.81 அடியாக உள்ளது. அணைக்கு 386 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 172 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.65 அடியாக உள்ளது. அணைக்கு 430 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 15.45 அடியாக வும், சிற்றாறு -2 அணை நீர்மட்டம் 15.55 அடியா கவும், பொய்கை அணை நீர்மட்டம் 8.70 அடியாகவும் உள்ளது.

    • கொட்டாரத்தில் 74.6 மில்லி மீட்டர் பதிவு
    • மாம்பழத்துறையாறு அணை நிரம்பியது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் க னமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி யுள்ளது.

    குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதியான வைக்கலூர், முஞ்சிறை பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். வீடுகளை சூழ்ந்த வெள்ளம் வடியாத நிலையில் மீண்டும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கொட்டாரம் பகுதியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், சந்தையடி பகுதிகளில் ரோடுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். கொட்டாரத்தில் அதிகபட்ச மாக 74.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாகர்கோவில் பகுதியில் விட்டுவிட்டு தினமும் மழை பெய்து வருகிறது.

    பூதப்பாண்டி, சுருளோடு, தக்கலை, குளச்சல், இரணியல், ஆரல்வாய்மொழி, கோழிப்போர்விளை, அடை யாமடை, குருந்தன்கோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    சிற்றாறு அணைப்பகு தியில் மழை சற்று குறைந்துள்ளது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கி யுள்ளது. அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப் பட்டுள்ளது. இதனால் கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கியுள்ளது. திற்ப ரப்பில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அங்கு மழை விட்டுவிட்டு பெய்து வருவதால் ரம்யமான சூழல் நிலவுகிறது.

    9 நாட்களுக்கு பிறகு அருவியில் குளிப்பதற்கு இன்று அனுமதி அளிக்கப பட்டுள்ளது. சுற்றுலா பயணி கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். மாம்பழத்துறையாறு அணை கடந்த 2-ந்தேதி 3.28 அடியாக இருந்தது. அதன்பிறகு கொட்டி தீர்த்த மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 21 நாட்களில் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. முழு கொள்ளள வான 54.12 அடி எட்டி நிரம்பி வழிவதையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய தண்ணீரை பாசனத்திற்காக திறந்து விட்டுள்ளனர்.

    இதேபோல் முக்கடல் அணையும் நிரம்பி வருகிறது. நாளைக்குள் முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 40.46 அடியாக உள்ளது. அணைக்கு 704 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை யில் இருந்து 229 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் 69.75 அடியாக உள்ளது. அணைக்கு 496 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. முக்கடல் அணை நீர்மட்டம் 23.50 அடியாக உள்ளது. தொடர் மழையின் கார ணமாக மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 125-க்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது.

    நேற்று அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் மழைக்கு மேலும் ஒரு வீடு இடிந்துள் ளது. பல்வேறு இடங்களில் நடவு செய்யப்பட்ட நெற்ப யிர்களும், அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களும் மூழ்கியுள்ளதால் விவசா யிகள் கவலை அடைந்துள்ள னர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருஞ்சாணி 2.8, சிற்றார் 1-28.2, சிற்றார் 2-32.6, பூதப்பாண்டி 5.2, களியல் 7.4, கன்னிமார் 5.8, கொட்டாரம் 74.6, மயிலாடி 43.2, நாகர்கோவில் 27.2, தக்கலை 22.4, குளச்சல் 13, இரணியல் 15.6, மாம்பழத்துறையாறு 45, திற்பரப்பு 8.2, ஆரல் வாய்மொழி 35, கோழிபோர்விளை 5.3, அடையாமடை 17.2, குருந் தன்கோடு 35.4, ஆணை கிடங்கு 43.6, முக்கடல் 15.4.

    • திற்பரப்பு அருவியில் 7-வது நாளாக குளிக்க தடை
    • கோழிப்போர்விளையில் 92.8 மில்லி மீட்டர் பதிவு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருவதால் குளுகுளு சீசன் நிலவுகிறது. மலையோர பகுதிகளிலும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் சென்னை வானிலை மையம் குமரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று எச்சரித்து உள்ளது. அதன்படி மாவட் டம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப் பட்டது.

    கோழிப்போர்விளையில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிக பட்சமாக 92.8 மில்லி மீட்டர் மழை பதிவா கியுள்ளது. குருந்தன்கோடு, மயிலாடி, கொட்டாரம், கன்னிமார், தக்கலை, இரணியல், ஆரல்வாய் மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    மலையோர பகுதியான பாலமோர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது.

    அணைகளின் நீர்மட் டத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். சிற்றாறு அணைகளுக்கு வரக்கூடிய நீர் வரத்து குறைய தொடங்கிய தையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப் பட்டு வருகிறது. சிற்றாறு அணைகளிலிருந்து வெளி யேற்றப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டதை யடுத்து கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைய தொடங்கி யுள்ளது.

    இருப்பினும் திற்பரப்பில் மழை பெய்து வருவதால் அருவியில் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு இன்று 7-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை நீடிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 39.23 அடியாக இருந்தது. அணைக்கு 1570 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 226 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 68.35 அடியாக இருந்தது. அணைக்கு 1116 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர மட்டம் நேற்று ஒரே நாளில் 1¼ அடி உயர்ந்துள்ளது. அணை நீர்மட்டம் இன்று காலை 20.70 அடியாக இருந்தது. மாம்பழத்துறை யாறு அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 49.70 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிபாறை 53.6, பெருஞ்சாணி 57.4, சிற்றார்1- 18, சிற்றார்-2 25.6, பூதப்பாண்டி 22.4, களியல் 35.8, கன்னிமார் 41.8, கொட்டாரம் 17.4, குழித்துறை 11.6, மயிலாடி16.4, நாகர்கோவில் 19.4, புத்தன்அணை 54.6, சுருளோடு 46.4, தக்கலை 55, குளச்சல் 18.4, இரணியல் 26, பாலமோர் 52.2, மாம்பழத்துறையாறு 41.8, திற்பரப்பு 33.8, ஆரல்வாய்மொழி 7.2, கோழிப்போர்விளை 92.8, அடையாமடை 49.1, குருந்தன்கோடு 26, முள்ளங்கினாவிளை 57.4, ஆணைக்கடங்கு 38.4, முக்கடல் 22.2.

    தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 75-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இந்த நிலையில் நேற்று மேலும் 5 வீடுகள் இடிந்துள்ளன. கல்குளம் தாலுகாவில் 4 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் ஒரு வீடும் இடிந்துள்ளது. மேற்கு மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

    ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை யின்றி தவித்து வருகிறார்கள். தோவாளை, செண்பக ராமன் புதூர் பகுதியில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரண மாக செங்கல் விலை உயர்ந்துள்ளது.

    • 1500 குளங்கள் நிரம்பியது
    • ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கொட்டி தீர்த்த மழை மாவட்டத்தையே புரட்டி போட்டது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று இரவு 2 மணி நேரத்திற்கு மேலாக அங்கு கனமழை பெய்தது. ஏற்கனவே கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவரும் நிலையில் தொடர் மழையின் காரண மாக அருவியில் தண்ணீர் அதிக அளவு கொட்டுகிறது. அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து வெள்ளம் செல்வதால் பொதுமக்கள் குளிப்பதற்கு இன்றும் தடை விதிக்கப் பட்டுள்ளது.

    திற்பரப்பில் அதிகபட்ச மாக 82.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. களியல், பூதப்பாண்டி, மயிலாடி, அடையாமடை, தக்கலை, குளச்சல், மயிலாடி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவும் மழை பெய்தது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கி யதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப் பட்டு வருகிறது. அணையில் இருந்து இன்று காலை 537 கன அடி உபரி நீரும், 200 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும் வெளியேற் றப்பட்டு வருகிறது. இதனால் கோதையாற்றில் வெள்ளம் தொடர்ந்து கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை ஆற்றிலும் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுவதால் பொது மக்கள் கரையோர பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தொடர் மழையின் காரண மாக முன்சிறை, வைக்க லூர், தீக்குறிச்சி பகுதி களில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் இன்னும் வடியவில்லை. இதனால் பொதுமக்கள் பரிதவிப் பிற்கு ஆளாகி உள்ளனர். பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 38.35 அடியாக உள்ளது. அணைக்கு 1001 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 224 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 67.25 அடியாக உள்ளது. அணைக்கு 616 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    சிற்றார் 1- அணை நீர்மட்டம் 15.91 அடியாகவும், சிற்றார் 2-அணை நீர்மட்டம் 16 அடியாகவும் உள்ளது. பொய்கை அணை நீர்மட்டம் 8.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 48.39 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 19.50 அடியாகவும் உள்ளது. அணைகளில் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். தொடர் மழையின் காரணமாக வள்ளி ஆறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    சானல்களிலும் வெள் ளம் பெருக்கெடுத்து ஓடுவ தால் பாசன குளங்கள் நிரம்பி வருகின்றன. மாவட் டம் முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. 200-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி வருகின்றன. குளங் கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தொடர் மழைக்கு நேற்று மாவட்டம் முழுவதும் 9 வீடுகள் இடிந்து விழுந்துள் ளது. அகஸ்தீஸ்வரம் தாலு காவில் ஒரு வீடும், விளவங் கோட்டில் 5 வீடுகளும், கிள்ளியூரில் 3 வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன.

    குலசேகரம், கீரிப்பாறை பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் தொழி லாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். ரப்பர் மரங்களில் கட்டப் பட்டுள்ள சிரட்டைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக் கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 1.8, பெருஞ்சாணி 12.4, சிற்றார் 1-17.2, சிற்றார் 2-57.4, பூதப்பாண்டி 3.2, களியல் 79.2, மயிலாடி 2.6, சுருளோடு 15, தக்கலை 1.1, குளச்சல் 4, பாலமோர் 20.4, மாம்பழத்து றையாறு 4, திற்பரப்பு 82.4, அடையாமடை 27.2, முக் கடல் 2.2.

    • சிற்றார் 2-ல் 37.4 மில்லி மீட்டர் மழை பதிவு
    • மாம்பழத்துறையாறு, அடையாமடை, முள்ளங்கினா விளை பகுதிகளிலும் மழை பெய்தது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவ லாக மழை பெய்து வரு கிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவ லாக மழை பெய்தது.

    பேச்சிப்பாறை பெருஞ் சாணி அணைப்ப குதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையோர பகு தியான பாலமோர் பகுதி யில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.

    திற்பரப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. மாம்பழத்துறையாறு, அடையாமடை, முள்ளங்கினா விளை பகுதிகளிலும் மழை பெய்தது.

    சிற்றாறு 2-ல் அதிகபட்சமாக 37.4 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகியுள்ளது. பேச்சி பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 35.06 அடி யாக இருந்தது. அணைக்கு 660 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. 281 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது. பெருஞ்சாணிஅணை நீர்மட்டம் 64.05 அடியாக உள்ளது. அணைக்கு 445 கன அடிதண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது.

    சிற்றார்-1 நீர்மட்டம் 14.79 அடியாகவும், சிற்றார்-2 நீர்மட்டம் 14.89 அடியாகவும் உள்ளது. பொய்கை நீர்மட்டம் 9.10 அடியாகவும், மாம் பழத்துறையாறு நீர்மட்டம் 36.42 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப் படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 16.20 அடியாக உள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஏற்கனவே 53 வீடுகள் இடிந்து விழுந்து இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 6 வீடுகள் இடிந்துள்ளது. அகஸ்தீஸ்வ ரம் தாலுகாவில் 5 வீடுகளும், திருவட்டார் தாலுகாவில் ஒரு வீடும் இடிந்து விழுந்து உள்ளது.

    ஏற்கனவே கடந்த வாரம் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக தாழக்குடி, தோவாளை பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை மழை நீர் சூழ்ந்திருந்தது. அந்த மழை நீர் சற்று வடிந்திருந்த நிலை யில் மீண்டும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    • அணைகளின் நீர்மட்டம் உயர்வு
    • திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. சிற்றாறு-1 அணை பகுதியில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்ச மாக 33.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    திற்பரப்பு அருவி பகுதி யில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தோடு வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிபாறை, பெருஞ்சாணி அணை களுக்கும் கூடுதல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ½ அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 1 அடியும் உயர்ந்துள்ளது. பேச்சி பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 20.89 அடியாக உள்ளது. அணைக்கு 1190 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 580 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.75 அடியாக உள்ளது. அணைக்கு 628 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 11.41 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 11.51 அடியாகவும், பொய்கை நீர்மட்டம் 9.40 அடியாகவும் மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 3.28 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்ப டும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து மைனஸ் அடியாக இருந்து வருகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் மைனஸ் 15.10 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிபாறை 23.2, பெருஞ்சாணி 7, சிற்றாறு1- 33.6, சிற்றாறு 2-26.2, பூதப்பாண்டி 1.4, களியல் 26.2, புத்தன்அணை 8.2, சுருளோடு 6.4, திற்பரப்பு 25.8.

    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1¾ அடி உயர்ந்தது
    • பேச்சிப்பாறை 41.8, பெருஞ்சாணி 15.4, சிற்றாறு 1-27.6, சிற்றார் 2-12.8, களியல் 3.8, கன்னிமார் 2.4

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இரு போக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பியும், பாசன குளங் களை நம்பியும் சாகுபடி செய்து வருகிறார்கள்.

    தென்மேற்கு பருவமழை பொய்த்து போன கார ணத்தினால் பாசன குளங்களிலும், அணைகளிலும் நீர்மட்டம் குறைவாக காணப்பட்டது. கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாமல் நெற்பயிர்கள் கருகும் நிலையில் இருந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து இருந்த னர்.

    இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக பரவலாக தினமும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பாசன குளங்களும் நிரம்பி வருகிறது. இதனால் விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள் னனர். தொடர்ந்து பெய்து வரும் மழையை நம்பி விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி பணியில் தீவிர மாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    சுசீந்திரம், பறக்கை, பூதப்பாண்டி பகுதிகளில் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு தேவை யான விதை நெல்களை தங்கு தடையின்றி வேளாண் துறை அதிகாரிகள் வழங்கி வருகிறார்கள். பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியில் நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

    பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 41.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் ¾ அடியும் பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 1¾ அடியும் உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணையில் இருந்து பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. பேச்சிப் பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 20.19 அடியாக இருந்தது. அணைக்கு 1,262 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 585 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 40.80 அடியாக உள்ளது. அணைக்கு 742 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. மாவட் டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 41.8, பெருஞ்சாணி 15.4, சிற்றாறு 1-27.6, சிற்றார் 2-12.8, களியல் 3.8, கன்னிமார் 2.4, புத்தன்அணை 15, சுரு ளோடு 3, பாலமோர் 21.6, மாம்பழத்துறையாறு 2, திற்பரப்பு 4, முள்ளங்கினா விளை 3.2.

    • களியலில் 69.2 மில்லி மீட்டர் பதிவு
    • தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களும் நிரம்ப தொடங்கியுள்ளன.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 3 வாரங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது.

    இந்த நிலையில் நேற்று காலையில் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இரவும் விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. களியல் பகுதியில் நேற்று மாலை 4 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் சாலை களில் வெள்ளம் பெருக்கெ டுத்து ஓடியது. இரவும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.

    இன்று காலையிலும் வானம் மப்பும் மந்தார முமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. அங்கு அதிகபட்ச மாக 69.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோழிப்போர்விளை, கொட்டாரம், மயிலாடி, குழித்துறை, சுருளோடு, தக்கலை, குளச்சல், இரணி யல், ஆணைக்கிடங்கு மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக குளிர் காற்று வீசி வருகிறது. இன்று காலையிலும் மழை பெய்து கொண்டே இருந்தது. திற்பரப்பு அருவி பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதியிலும், மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு வரக்கூடிய நீர்வ ரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 783 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.28 அடியாக இருந்தது. அணைக்கு 1134 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.05 அடியாக உள்ளது. அணைக்கு 447 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களும் நிரம்ப தொடங்கியுள்ளன.

    300-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பி வழி கிறது. குளங்கள் நிரம்பி வழிவதையடுத்து விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 57.6, பெருஞ்சாணி 27.6, சிற்றாறு 1-30.4, சிற்றாறு 2- 28.2, பூதப்பாண்டி 30.6, களியல் 69.2, கன்னிமார் 32.2, கொட்டாரம் 16.2, குழித் துறை 35.8, மைலாடி 20.8, நாகர்கோவில் 2.4, புத்தன் அணை 26.8, சுருளோடு 31.6, தக்கலை 28.4, குளச்சல் 12.2, இரணியல் 26, பாலமோர் 60.4, மாம்பழத்து றையாறு 26, திற்பரப்பு 65.7, ஆரல்வாய்மொழி 7.2, கோழிபோர்விளை 50.4, அடையாமடை 33.1, குருந் தன்கோடு 42, முள்ளங்கினா விளை 25.4, ஆணைகிடங்கு 22.4, முக்கடல் 17.

    • சுருளோட்டில் அதிகபட்சமாக 16.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    • 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கை அணை நீர்மட்டமும் 9.60 அடியாகவே இருந்து வருகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் ரம்யமான சூழல் நிலவுகிறது. இரவு நேரங்களில் இதமான குளிர் காற்று வீசி வருகிறது.

    மழையும் விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையிலும் லேசான மழை பெய்தது. கொட்டாரம், மயிலாடி, சுருளோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழைகொட்டி தீர்த்தது. சுருளோட்டில் அதிகபட்சமாக 16.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிக ரித்து உள்ளது. அணைகளில் இருந்து பாசனத்திற்காக 781 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    தொடர் மழையின் காரணமாக பாசன குளங்க ளும் நிரம்பி வருகின்றன. விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரப்படுத்தி யுள்ளனர். பூதப்பாண்டி, தடிக்காரன்கோணம், சுசீந்திரம், தக்கலை பகுதி களில் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். உழவு பணி, நாற்று பாவும் பணி நடந்து வருகிறது. மழையும் விட்டுவிட்டு பெய்து வருவதால் விவசா யிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 17.58 அடியாக உள்ளது. அணைக்கு 612 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 581 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 36.30 அடியாக உள்ளது. அணைக்கு 150 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. மாவட் டம் முழுவதும் கடந்த 3 வாரங்களாக பரவலாக மழை பெய்த பிறகும் பொய்கை, மாம்பழத்துறை யாறு, முக்கடல் அணை களின் நீர்மட்டம் உயர வில்லை. முக்கடல் அணை தொடர்ந்து மைனஸ் அடியிலேயே இருந்து வருகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் மைனஸ் 10.90 அடியாக இருந்தது.

    54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்து றையாறு அணையின் நீர்மட்டமும் 3.28 அடியாக உள்ளது. இந்த அணை வறண்டு குட்டை போல் காட்சி அளிக்கிறது. மழை பெய்த பிறகும் அணையின் நீர்மட்டம் உயராததால் இந்த அணையை நம்பி பாசனம் செய்துள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் அணைகளுக்கு நீர்வரத்து வரக்கூடிய பகுதிகளில் உள்ள மணல் திட்டுகளே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

    எனவே அந்த மணல் திட்டுகளை உடனடியாக அகற்றி அணைக்கு தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள். இதேபோல் 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கை அணை நீர்மட்டமும் 9.60 அடியாகவே இருந்து வருகிறது.

    • குளச்சலில் அதிகபட்சமாக 16.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது
    • பேச்சிப்பாறை அணையில் 17.76 அடியும், பெருஞ்சாணி அணையில் 37.05 அடியும் நீர்மட்டம் உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. காலையில் ஓரளவு மழை பெய்தாலும் பகல் நேரங்களில் வெப்பத் தின் தாக்கம் நீடித்தே வரு கிறது.

    இருப்பினும் மலையோர பகுதிகள் மற்றும் மாவட்டத் தின் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தே வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை நீடித்தது.குளச்சலில் அதிகபட்சமாக 16.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    குளச்சல் 16.8, திற்பரப்பு 8.3, குழித்துறை 8, இரணியல் 7.4, களியல் 7.2, முள்ளங்கினாவிளை 4.6, பெருஞ்சாணி 3.2, பால மோர் 3.2, பேச்சிப்பாறை 3, கன்னிமார் 2.8, முக்கடல் அணை 2.6, புத்தன் அணை 2.6, நாகர்கோவில் 2.2, தக்கலை 2, பூதப்பாண்டி 1.2.

    மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு 446 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 581 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணைக்கு 103 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வந்த போதிலும் முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் அடியிலேயே உள்ளது. பேச்சிப்பாறை அணையில் 17.76 அடியும், பெருஞ்சாணி அணையில் 37.05 அடியும் நீர்மட்டம் உள்ளது.

    ×